எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆண்டிபட்டி -தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு வனச்சரகத்திற்கு உட்பட்ட அரசரடி கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சுற்றிலும் மலைசூழ்ந்த இந்த கிராமத்தில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது.
இந்த கிராமத்தை சேர்ந்த மாயி (58) என்ற விவசாயி நேற்று இரவில் தோட்டத்தில் பயிரிட்டு இருந்த அவரைச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானை ஒன்று, மாயியை விரட்டி விரட்டி தாக்கியது. தப்பி ஓட முயன்ற மாயியை துதிக்கையால் மடக்கிபிடித்து தனதுகாலால் ஏறிமிதித்தது. இதில் உடல் நசுங்கிய மாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், வருசநாடு வனச்சரக அதிகாரிகள் மற்றும் மயிலாடும்பாறை காவல் துறையினர் விரைந்து வந்து இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் மற்றும் காவல் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.காட்டு யானை தாக்கி விவசாயி இறந்த சம்பவம் அப்பகுதி பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அப்பகுதி மக்களிடம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


