எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேனி,தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வீரபாண்டியில் உள்ள அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயிலில் எதிர்வரும் 07.05.2019 முதல் 14.05.2019 வரை (தேரோட்டம் 10.05.2019 அன்று) சித்திரை பெருந்திருவிழா நடைபெறவுள்ளதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ், தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்குப்பின் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் திருவிழாவிற்கு அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றது. திருவிழாவின் போது தற்காலிக கடைகளை முறைப்படுத்தி அமைத்திட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்ற நபர்கள் மட்டுமே கடைகளை அமைத்திட வேண்டும். தற்காலிக உணவு தயாரிப்பவர்களுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர்; மூலம் தற்காலிகச்சான்றிதழ் வழங்கிட வேண்டும்.
தற்காலிக கடைகள் அனைத்தும் தீ பற்றாத வகையில் அமைக்கப்பட வேண்டும். உணவு பண்டங்கள் விற்பனை செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதிகளை தவிர்த்து மற்ற கடைகளில் அடுப்புகள் பயன்படுத்தக் கூடாது. அனைத்து தற்காலிக கடைகளிலும் வழங்கப்பட்டுள்ள மின் இணைப்புகள் அனைத்தும் மின் ஆய்வாளரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். கோயிலில் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் வழங்கப்படும் உணவு பொருட்கள் தரமானதாகவும், பாதுகாப்பாகவும் வழங்கப்படுவதை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தினந்தோறும் ஆய்வு செய்து உறுதி செய்திட வேண்டும். திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் தனியார் மண்டபம் மற்றும் பகுதிகளில் உணவு தயாரிக்கும் போது பயன்படுத்தப்படும் எரிவாயு உருளைகளை முறையாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் அறிவிப்பு பலகைகள் வைத்திட வேண்டும். பக்தர்கள்; மண்டபங்கள் அல்லது தகரத்தினால் அமைக்கப்பட்ட இடங்களில் மட்டும் விருந்து வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்
தேரின் எடைக்கு தகுந்தவாறு மின்சாரம் பாயாத பொருட்களைக் கொண்டு தேரின் வடம் தயார் செய்திடவும், தேரோடும் சாலைகளை மேடுபள்ளமின்றி தேரின் எடையைத்தாங்கும் வண்ணம் அமைத்திட வேண்டும். பக்தர்கள் ஆற்றில் குளிக்கும் இடம் முதல் அவர்கள் அம்மனை தரிசித்துவிட்டு செல்லும் வரை பாதுகாப்பு பணியில் அதிகமான ஆண், பெண் காவலர்களையும், தனியார் பாதுகாப்பு பணியாளர்களையும் பணியில் ஈடுபடுத்திட வேண்டும். காவல் கட்டுப்பாட்டு அறை அமைத்து 25 நிலையான மற்றும் கூடுதலாக தற்காலிக கண்காணிப்பு கேமராக்கள் மூலமும், உயர் கோபுரம் அமைத்து கண்காணிப்பு பணி;கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும், பக்தர்கள் கோவிலுக்கு சென்று வர இடையூறு ஏற்படாத வண்ணம் உள்ளே செல்லவும், வெளியே வரவும் தனித்தனி வழித்தடங்கள் ஏற்படுத்திட வேண்டும். தேவையான இடங்களில் பக்த்தர்களின் பார்வைக்கு நன்கு தெரியும் வண்ணம் அறிவிப்பு பலகைகளை வைத்திடவும், ஒலி பெருக்கியின் மூலம் பக்த்தர்களுக்கு தேவையான அறிவிப்புகளை வழங்கிட வேண்டும். தீயணைப்புத்துறையினர் விழா காலங்களின் போது போதுமான அளவு தீயணைப்பு வாகனங்கள், தீத்தடுப்பு சாதனங்கள் தயார் நிலையில் வைத்திட வேண்டும்.
சுகாதாரத்துறையினர் கோயில் வளாகத்தில் இரண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் 24 மணிநேரமும் நிறுத்தி வைத்து தேவையான மருத்துவ வசதிகள் மருத்துவக்குழுவினரைக் கொண்டு 24 மணி நேரமும் மருத்துவ சேவை வழங்கிடவும், ஒரு நகரும் மருத்துவ வாகனத்தின் மூலம் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பக்தர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மனை தரிசிக்க ஏதுவாக தற்காலிக பேருந்து நிலையம் ஏற்படுத்தி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கான 7 கிளைகளிலிருந்து சிறப்பு பேருந்துகளை இயக்கிட வேண்டும். பக்தர்கள் வசதிக்காக ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் வைக்கப்படவும், அனைத்து முக்கிய சந்திப்புகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் அதிகமான அளவு மின் விளக்குகளை அமைத்திடவும், தற்காலிக கழிவறைகள் தேவையான அளவு ஆங்காங்கே அமைத்திடும் பணி;கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பக்தர்கள் தீச்சட்டிகள் இறக்கும் இடத்தில் குவியல் ஏற்படாமல் இருப்பதற்காக ஊராட்சி மற்றும் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் ஜே.சி.பி இயந்திரத்தினை பயன்படுத்தி உடனுக்குடன் அப்புறப்படுத்த ஏற்பாடுகள் செய்திடவும்;, சரக்கு வாகனம், லாரி போன்றவற்றை மாற்றுப்பாதையில் செல்லுவதற்கான வழித்தடங்களை ஏற்படுத்திடவும், கோயில் திருவிழாவில் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் உணவு வழங்கிடவும், போதுமான இடைவெளியில் ராட்டினங்கள் அமைத்திடவும், ராட்டினங்களை இயக்கிட பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, தீதடுப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஆகிய துறை அலுவலர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்த சான்றிதழ் வழங்கிய பின்னரே ராட்டினங்களை இயக்கிட அனுமதி வழங்கிடவும், ராட்டினம் பயன்படுத்தும் சுமார் 50 நபர்கள் அளவில் விபத்து காப்பீடு செய்திடவும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ், தெரிவித்தார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பா.திலகவதி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பச்சையப்பன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஆர்.சக்திவேல், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.வரதராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மு.சாந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் இ.கார்த்திகாயினி, கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுருளிராஜா, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலர் கா.தென்னரசு, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) விஜயலட்சுமி, வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.குணாளன், வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் செயல் அலுவலர் பாலகிருஷ்ணன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தொடர் மழை, வெள்ளம்: அமெரிக்காவில் 13 பேர் பலி
05 Jul 2025நியூயார்க் : அமெரிக்காவில் தொடர் மழை வெள்ளத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மொஹரம் பண்டிகை: வரும் 7-ம் தேதி அரசு விடுமுறை என பரவும் தகவலுக்கு மறுப்பு
05 Jul 2025சென்னை, மொஹரம் பண்டிகை ஜூலை 6-ம் தேதிதான் என்றும், இந்தப் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் தவறானது என்றும் தமிழக அரசின் உண்மை ச
-
தி.மு.க.வுக்கு ஆதரவு எப்படி? 3 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
05 Jul 2025சென்னை, பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை 3 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
05 Jul 2025சென்னை, தி.மு.க. ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
05 Jul 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம்: தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் வாழ்த்து
05 Jul 2025சென்னை, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல்: அமைச்சர் சேகர்பாபு
05 Jul 2025சென்னை, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
காசாவில் 613 பாலஸ்தீனியர்கள் கொலை: ஐ.நா. குற்றச்சாட்டு
05 Jul 2025வாஷிங்டன் : கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமல்: 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்
05 Jul 2025வாஷிங்டன் : வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை ஐகோர்ட்
05 Jul 2025சென்னை : ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
05 Jul 2025சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.
-
விஜய் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்
05 Jul 2025சென்னை, விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
-
புத்தமத தலைவர் தலாய் லாமா 40 ஆண்டுகள் வாழ விருப்பம்
05 Jul 2025தர்மசாலா : சீனாவின் புத்தமத தலைவர் தலாய் லாமா இன்னும் 40 ஆணடுகளுக்கு மேல் வாழ ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்
-
உ.பி., யில் சோகம்: கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
05 Jul 2025லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
இந்தித் திணிப்புக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழ்நாடு மீண்டும் கற்பிக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
05 Jul 2025சென்னை, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்துவரும் துரோகத்துக்கு பா.ஜ.க. பரிகாரம் தேட வேண்டும்.
-
நானே முதல்வர் வேட்பாளர்: அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி; எடப்பாடி பழனிசாமி மீண்டும் உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் நானே முதல்வர் வேட்பாளர் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
05 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் கைது
05 Jul 2025வாஷிங்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸின் அறிவிப்பால் மகிழ்ச்சி
05 Jul 2025டெல் அவிவ் : காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு
05 Jul 2025சென்னை, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
ஜார்க்கண்ட் சுரங்க விபத்தில் 4 பேர் பலி
05 Jul 2025ராஞ்சி, ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்க விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர்.