Idhayam Matrimony

விக்கிரவாண்டி- நாங்குநேரி இடைத்தேர்தல் - 21-ம் தேதி அரசு பொது விடுமுறை அறிவிப்பு

வியாழக்கிழமை, 17 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : விக்கிரவாண்டி- நாங்குநேரி சட்டசபை தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலையொட்டி திருநெல்வேலி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் வரும் 21-ம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்ட அரசாணை வருமாறு:-

தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி நாங்குநேரி ஆகிய சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி அடங்கியிருக்கும் விழுப்புரம் மாவட்டம், நாங்குநேரி தொகுதியை சார்ந்த திருநெல்வேலி மாவட்டம் ஆகியவற்றிற்கு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.  அண்டை மாவட்டங்களில் வசிக்கும் இத்தொகுதியை சார்ந்த வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்காக சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவும் அரசு ஆணையிடுகிறது. மேலும் திருநெல்வேலி விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள அரசு கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அளிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளதாக தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து