எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரூ.235 கோடி செலவில் 16 துணை மின்நிலையங்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், எரிசக்தித் துறையின் சார்பில் நாமக்கல் மாவட்டம் – திருச்செங்கோடு வட்டம், ஏமப்பள்ளியில் 10 கோடியே 28 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், கோயம்புத்தூர், தஞ்சாவூர், சேலம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 224 கோடியே 91 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 15 துணை மின் நிலையங்களையும் அவர் திறந்து வைத்தார்.
மின்பாதையில் ஏற்படுகின்ற மின் இழப்பையும், மின்பராமரிப்பு செலவினங்களையும் குறைத்து, ஒவ்வொரு பகுதிக்கும் தேவைப்படுகின்ற உச்சகட்ட மின் தேவையை நிறைவு செய்யும் வகையில் சரியான மின் அழுத்தத்துடன் சீரான மின்சாரம் மக்களுக்கு வழங்கிட கூடுதல் துணை மின் நிலையங்கள் அமைப்பது அவசியமாகும் என்பதைக் கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையங்களை அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு அமைத்து வருகிறது.
அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், ஏமப்பள்ளியில் 10 கோடியே 28 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 110/22 கி.வோ. துணை மின் நிலையத்தை முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
மேலும், திருப்பூர் மாவட்டம் – திருப்பூரில் 75 கோடியே 54 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 230/110 கி.வோ. துணை மின் நிலையம்;
தஞ்சாவூர் மாவட்டம் – திருமலை சமுத்திரத்தில், 10 கோடியே 39 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான ஒரு 110/33 கி.வோ. துணை மின் நிலையம்;
விழுப்புரம் மாவட்டம் – சிட்டம்பூண்டி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் – தேன்கனிக்கோட்டை ஆகிய இடங்களில் 24 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டு தரம் உயர்த்தப்பட்ட 110/33 கி.வோ. துணை மின் நிலையங்கள்;
காஞ்சிபுரம் மாவட்டம் – ஸ்ரீபெரும்புதூர், நோக்கியா நிறுவன வளாகம், திருநெல்வேலி மாவட்டம் – வள்ளியூர், கன்னியாகுமரி மாவட்டம் – கன்னியாகுமரி ஆகிய இடங்களில் 7 கோடியே 46 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மூன்று 110/33 கி.வோ. துணை மின் நிலையங்கள் (விகிதாச்சார அறிமுகம்);
சேலம் மாவட்டம் – பேளூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் – அரசடி ஆகிய இடங்களில் 19 கோடியே 72 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டு 110/22 கி.வோ. துணை மின் நிலையங்கள்; செங்கல்பட்டு மாவட்டம் – இந்தளூர், கோயம்புத்தூர் மாவட்டம் – பந்தய சாலை மற்றும் பட்டணம் ஆகிய இடங்களில் 72 கோடியே 36 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான மூன்று 110/11 கி.வோ. துணை மின் நிலையங்கள்; நாகப்பட்டினம் மாவட்டம் – கிடாரங்கொண்டானில் 4 கோடியே 92 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் ரூபாய் மதிப்பீட்டிலான ஒரு தரம் உயர்த்தப்பட்ட 110/11 கி.வோ. துணை மின் நிலையம்;
திருநெல்வேலி மாவட்டம் – வள்ளியூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் – கேப் ஆகிய இடங்களில் 9 கோடியே 97 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டு உள்ளக 33/11 கி.வோ. துணை மின் நிலையங்கள்; என மொத்தம் 235 கோடியே 20 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 16 துணை மின் நிலையங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி. சரோஜா, தலைமைச் செயலாளர் க. சண்முகம், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) ஆ.கார்த்திக், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் விக்ரம் கபூர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
பீகார் தேர்தலில் தொகுதிப் பங்கீடு: ஆர்.ஜே.டி. 135, காங்கிரஸ் 61 தொகுதிகளில் போட்டி
14 Oct 2025புதுடெல்லி : பீகார் தேர்தலில் தொகுதிப் பங்கீடில் ஆர்.ஜே.டி. 135, காங். 61 இடங்களில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
மனிதராக இருப்பதற்கு கூட தகுதியற்றவர்: சி.வி.சண்முகத்திற்கு அமைச்சர் கண்டனம்
14 Oct 2025சென்னை : மனிதராக இருப்பதற்கு கூட தகுதியற்றவர் சி.வி.சண்முகம் என்று அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
14 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம
-
சட்டசபையில் அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் திடீர் போராட்டம்
14 Oct 2025சென்னை : சட்டசபையில் அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அங்கு திடீர் பரபரப்பு நிலவியது.
-
மாநில திட்டக் குழுவின் 4 அறிக்கைகள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு
14 Oct 2025சென்னை : மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 4 அறிக்கைகள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-10-2025.
14 Oct 2025 -
ரூ.95 ஆயிரத்தை நெருங்கிய ஒரு பவுன் தங்கம் விலை : ஒரேநாளில் ரூ.1,960 உயர்வு
14 Oct 2025சென்னை : 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (அக்.14) பவுனுக்கு ரூ.1,960 உயர்ந்து மீண்டும் அதிர்ச்சியளித்துள்ளது.
-
சாதி பெயர்களில் மாற்றம் வேண்டும்: முதல்வரிடம் திருமாவளவன் கோரிக்கை
14 Oct 2025சென்னை : சாதி பெயர்களில் மாற்றம் வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
அரசுக்கு எதிராக போராட்டம்: மடகாஸ்கர் அதிபர் தப்பி ஓட்டம்
14 Oct 2025அண்டனானரீவோ, மடகாஸ்கரில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் அதிபர் தப்பி ஓடினார்.
-
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
14 Oct 2025புதுடெல்லி : டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
-
ஆந்திராவில் ரூ.1.3 லட்சம் கோடியில் ஏ.ஐ. மையம்: கூகுள் நிறுவனம் தகவல்
14 Oct 2025விசாகப்பட்டினம், ஆந்திராவில் ரூ.1.3 லட்சம் கோடியில் ஏ.ஐ. மையம் அமைக்க உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
கரூர் சம்பவம்: ஆவணங்களை சமர்ப்பித்தது எஸ்.ஐ.டி.
14 Oct 2025சென்னை : கரூர் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததையடுத்து ஆவணங்களை சமர்ப்பித்தது எஸ்.ஐ.டி.
-
அண்டை நாடுகளுடனும் மகிழ்ச்சியாக உள்ளோம்: ஆப்கன் அமைச்சர் பேச்சு
14 Oct 2025புதுடெல்லி, பாகிஸ்தானை தவிர அண்டை நாடுகளுடனும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று வெளியுறவு மந்திரி அமீர் கான் முத்தகி பேசினார்.
-
ஓட்டுநர் தேர்வு தானியங்கி மையங்கள் அமைக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து
14 Oct 2025சென்னை : தமிழ்நாட்டில் ஓட்டுநர் தேர்வு தானியங்கி மையங்கள் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
-
கர்நாடக முதல்வர் சித்தராமையா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
14 Oct 2025பெங்களூரு : கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்
-
6 நாட்களாக நீடித்த டேங்கர் லாரி சங்கங்களின் போராட்டம் வாபஸ்
14 Oct 2025சென்னை : சென்னை ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து 6 நாட்களாக நீடிதத் டேங்கர் லாரி சங்கங்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.
-
வருங்கால வைப்புநிதியில் இருந்து இனி 100 சதவீதம் வரை பணம் எடுக்கலாம்
14 Oct 2025புதுடெல்லி : வருங்கால வைப்புநிதியில் இருந்து இனி 100 சதவீதம் வரை பணம் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதிய நீர் இருப்பு
14 Oct 2025சென்னை : சென்னை குடிநீர் வழங்கும் ஏரியில் போதிய நீர் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மகாராஸ்டிராவிற்கு கடத்தி வரப்பட்ட ரூ.6 கோடி சீன பட்டாசுகள் பறிமுதல்
14 Oct 2025மும்பை : மராட்டியத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ. 6 கோடி மதிப்புள்ள சீன பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
-
தமிழக 'மா' விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க மாம்பழ ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
14 Oct 2025சென்னை : நாட்டின் பொருளாதாரத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்யவும், மா விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கவும் மாம்பழ ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை தேவை என்று ப
-
தமிழக சட்டப்பேரவைியல் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று ஆரம்பம் : முதல் நாளில் இரங்கல் தீர்மானம் - அவை ஒத்திவைப்பு
14 Oct 2025சென்னை : தமிழ்நாடு சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று முதல் நடைபெறுவுள்ளது.
-
நேரடி வரி வருவாய் 6.33 சதவீதம் அதிகரிப்பு - மத்திய அரசு தகவல்
14 Oct 2025டெல்லி : நேரடி வரி வருவாய் 6.33 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
ராணாவுக்கு கம்பீர் ஆதரவு
14 Oct 2025சமீபத்தில் ஆசிய கோப்பை 2025 தொடரில் மோசமான பந்து வீச்சை வெளிப்படுத்திய போதிலும் (54 ரன்கள் கொடுத்து விக்கெட்டுகள் இல்லை) அவர் இரண்டு அணியிலும் ஹர்ஷித் ராணா தேர்வு செய்ய
-
மகாராஷ்டிராவில் 60 மாவோயிஸ்டுகள் சரண்
14 Oct 2025மும்பை : மகராஷ்டிராவில் மாவோயிஸ்ட் தளபதி உள்பட 60 பேர் போலீசில் சரண் அடைந்தனர்.
-
மே.இ.தீவுகள் அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
14 Oct 2025புதுடெல்லி : மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றுள்ளது.
அருண்ஜெட்லி...