எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில் ரூ.1.64 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்கள் மற்றும் பூத்தாம்பட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தின் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையத்தை திறந்து வைத்து, 14,512 பயனாளிகளுக்கு ரூ.103 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ ஆகியோர் வழங்கினர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவுத்துறை செயல்பாடுகள் குறித்து அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி அத்திட்டங்களை அனைத்து கடைக்கோடி மக்களையும் சென்றடையும் வகையில் சிறப்பாக நிர்வாகத்தினை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளார்.
தமிழக அரசு, கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக அனைத்து தரப்பு மக்களுக்கும், குறிப்பாக ஊரக பகுதிகளில் வாழும் மக்களுக்கு பல்வேறு கடன் வசதிகளை அளித்தும், சிறுகுறு விவசாயிகளுக்கு கடன்களை வழங்கியும், நுகர்வோர் மற்றும் பொதுமக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு மகத்தான சேவை புரிந்து வருகிறது.
கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர்க்கடன், உரம், விதை உள்ளிட்ட பல திட்டங்களின் மூலம் வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்க்கைத்தரம் உயர அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தால் திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி நகராட்சி பகுதி, எரியோடு, வேடசந்தூர் வட்டத்தில் இ.சித்தூர் ஆகிய இடங்களில் கூட்டுறவுத்துறையின்
மூலம் செயல்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யும் கூட்டுறவு சில்லரை விற்பனைநிலையங்கள் ஏற்கனவே துவங்கி வைக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அதனையடுத்து, பழனி சரகத்தில் பூத்தாம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையம் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் வி.அம்மாபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க புதிய அலுவலக கட்டிடம், பெரிய கலையம்புத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க புதிய அலுவலக கட்டிடம், திண்டுக்கல் மார்க்கம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க புதிய அலுவலக கட்டிடம், சிறுமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நவீனமயமாக்கப்பட்ட புதிய அலுவலக கட்டிடம், நத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நவீனமயமாக்கப்பட்ட அலுவலக கட்டிடம், லிங்கவாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நவீனமயமாக்கப்பட்ட அலுவலக கட்டிடம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் சேவைக்காக 56 வாகனங்கள் ஒப்பந்தம் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 157 நியாய விலை கடைகளுக்குட்பட்ட 28,819 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர்.
பொதுமக்களுக்கு நியாயமான விலையில் தரமான பொருட்கள் கிடைக்க வேண்டுமென்ற உயரிய எண்ணத்தோடு கூட்டுறவுத்துறை ஏழை எளிய மக்களின் தேவையை அறிந்து அத்தியாவசிய தேவையான பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்து, சேவை மனப்பான்மையுடன், லாபம் நோக்கோடு இல்லாமல் விற்பனை செய்து வருகிறது. பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி பயன்பெற வேண்டும். இவ்வாறு அமைச்சர் சீனிவாசன் பேசினார்.
விழாவில் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசுகையில், தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக உயர்த்திட பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார்.
தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் 41 பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனைத்தொடர்ந்து 42-வது பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையமாக திண்டுக்கல் மாவட்டம், பூத்தாம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், 10 பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கும் நிலையங்கள் புதியதாக தமிழகம் முழுவதும் துவக்கப்படவுள்ளன.
அம்மாவின் ஆட்சியில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டு மகளிர் பொருளாதார மேம்பாட்டைய வழிவகுக்கப்பட்டது.
கோவிட் -19 சிறப்பு கடனுதவி திட்டத்தின் கீழ், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒரு உறுப்பினருக்கு குறைந்தது ரூ.5,000 அதிகபட்சமாக ஒரு குழுவிற்கு ரூ.1 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
நியாயவிலைக் கடைகளுக்கு அருகிலேயே அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் 5 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் 300 வகையான பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில் அம்மா சிறு கூட்டுறவுச் சிறப்பங்காடிகள் துவங்க முதல்வரால் உத்தரவிடப்பட்டு நாளது தேதி வரை மாநில அளவில் 813 கடைகளும், திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 51 கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவுத்துறை செயல்பாடுகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன் செல்லூர் கே.ராஜூ ஆகியோர் அனைத்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர்..
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக தமிழக அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களின் கருத்துகள்
02 Nov 2025சென்னை : தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்காவிட்டால் சுப்ரீம் கோர்ட்டில் அனைத்துக் கட்சிகள் சார்பில் வழக்கு தொடர த
-
வங்கக்கடலில் உருவானது புயல் சின்னம்
02 Nov 2025சென்னை : வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை 5.30 மணிக்கு உருவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
02 Nov 2025சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவ. 8 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
02 Nov 2025ராமேசுவரம் : வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 2 வாரங்களாக பரவலாக நல்ல மழை பெய்தது.
-
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக அஜித் தெரிவித்தது அவரது சொந்த கருத்து: துணை முதல்வர் உதயநிதி
02 Nov 2025சென்னை: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக நடிகர் அஜித் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
-
எஸ்.ஐ.ஆர். தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது ஏன்? - முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
02 Nov 2025சென்னை : எஸ்.ஐ.ஆர். தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது ஏன்? என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
-
லாலு ஹாலோவீன் கொண்டாட்டம்: பாரதிய ஜனதா கட்சி கடும் விமர்சனம்
02 Nov 2025புதுடெல்லி: ஆர்.ஜே.டி. நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் தனது பேரப்பிள்ளைகளுடன் ‘ஹாலோவீன்’ திருவிழாவைக் கொண்டாடியதை பா.ஜ.க. கடுமையாக விமர்சித்துள்ளது.
-
எஸ்.ஐ.ஆர். தொடர்பான கூட்டத்தில் பங்கேற்ற 49 கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி
02 Nov 2025சென்னை : எஸ்.ஐ.ஆர். தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற 49 கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-11-2025.
02 Nov 2025 -
சூடு பிடித்த பீகார் தேர்தல் களம்: ஒரேநாளில் பிரதமர் மோடி, ராகுல், அமித்ஷா பிரச்சாரம்
02 Nov 2025பீகார் : பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு நேற்று ஒரேநாளில் பிரதமர் மோடி, ராகுல், அமித்ஷா பிரச்சாரம் செய்த நிலையில் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
-
சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எல்.வி.எம். 3 ராக்கெட்
02 Nov 2025ஸ்ரீஹரிகோட்டா : கடலோர எல்லைகளைக் கண்காணிப்பதற்கான சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளுடன் எல்விஎம் -3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
-
மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து: 23 பேர் உயிரிழப்பு
02 Nov 2025மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 23 பேர் பலியாகினர்.
-
குப்பை கிடங்குகளில் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை விற்க மாநகராட்சி புதிய திட்டம்
02 Nov 2025சென்னை : சென்னையில் ஒவ்வொரு மண்டலங்களிலும் உள்ள குப்பை சேமிப்பு கிடங்குகளில் தேங்கி கிடக்கின்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை விற்பனை செய்ய சென்னை மாநகராட்சி திட்டமி
-
சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து நீர் திறப்பு
02 Nov 2025ஆண்டிபட்டி : வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனப் பகுதிகளுக்காக 2 ஆயிரம் கன அடி வீதம் நேற்று (நவ.2) தண்ணீர் திறக்கப்பட்டது.
-
கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 2 குழந்தைகளின் பெற்றோருக்கு நிதியுதவி அறிவித்தார் முதல்வர்
02 Nov 2025சென்னை : திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம், அயனம்பாக்கம் கிராமத்தில் கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 2 குழந்தைகளின் பெற்றோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி
-
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தொடர்பான சிறப்பு திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்
02 Nov 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
எஸ்.ஐ.ஆர்.குறித்து மக்களுக்கு விளக்கமளிக்க தமிழ்நாடு முழுவதும் த.வெ.க. சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம், முகாம்கள் விஜய் பரபரப்பு அறிக்கை
02 Nov 2025சென்னை: சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்து மக்களுக்குத் தெளிவாக விளக்குவதற்காக, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்கம் மற்றும் தமிழகம் முழுவதும
-
எஸ்.ஐ.ஆர். குடியுரிமை மீதான தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு
02 Nov 2025சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், குடியுரிமை மீது நடத்தப்படும் தாக்குதல் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்.ஐ.ஆர்.: ஜோதிமணி எம்.பி. கருத்து
02 Nov 2025கரூர்: “வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்.ஐ.ஆர். மேற்கொள்ளப்படுகிறது.
-
எஸ்.ஐ.ஆர். குடியுரிமை மீதான தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு
02 Nov 2025சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், குடியுரிமை மீது நடத்தப்படும் தாக்குதல் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் த.வெ.க. தொண்டரணிக்கு பயிற்சி
02 Nov 2025சென்னை: சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொண்டரணியினருக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.
-
லண்டனில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து: இருவர் கைது
02 Nov 2025புதுடெல்லி: லண்டன் செல்லும் ரயிலில் (சனிக்கிழமை) நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் பத்து பேர் காயமடைந்தனர்.
-
சபரிமலை மண்டல பூஜை: சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்
02 Nov 2025சென்னை: சபரிமலை மண்டல பூஜையையொட்டி சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து கொல்லத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
-
ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கை: பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை
02 Nov 2025டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கைக்கு தயார் என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானை எச்சரித்துள்ளார்.
-
உத்தரகாண்ட் சட்டசபையில் இன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு உரை
02 Nov 2025டெராடூன் : உத்தரகாண்ட் சட்டசபையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று சிறப்பு உரையாற்றுகிறார்.


