எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி 29 லட்சத்து 58 ஆயிரத்து 458 வாக்குகள் பெற்றுள்ளது. அதாவது இத்தேர்தலில் 3-வது இடத்தை பிடித்துள்ள இக்கட்சிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காமல் போனதுதான் விந்தையிலும் விந்தை.
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2-ம் தேதி எண்ணப்பட்டன. இதில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வுக்கு 36.30 சதவீத வாக்குகள் கிடைத்தன. அதற்கு அடுத்தபடியாக அ.தி.மு.க.வுக்கு 33.29 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இந்த இருபெரும் கட்சிகளுக்கு அடுத்தபடியாக 3-வது பிடித்துள்ள கட்சிதான் சீமானின் நாம் தமிழர் கட்சி. இவரது கட்சிக்கு 29 லட்சத்து 58 ஆயிரத்து 458 வாக்குகள் கிடைத்துள்ளன. அதாவது, இந்த தேர்தலில் இவரது கட்சிக்கு 6.85 சதவீத வாக்குகள் கிடைத்து 3-ம் இடத்தை பிடித்துள்ளது. இப்படி 29.58 லட்சம் வாக்குகள் பெற்றும் கூட சீமானின் கட்சி தமிழகத்தில் ஒரு இடத்தை கூட கைப்பற்றாததுதான் மிகப் பெரிய ஆச்சரியம். காரணம், இவரது கட்சிக்கு அடுத்தபடியாக 4-வது இடத்தில் வந்துள்ள காங்கிரஸ் கட்சி 100 ஆண்டு பாரம்பரியம் உள்ள கட்சி. அந்த கட்சிக்கு 19.06 லட்சம் வாக்குகளே கிடைத்துள்ளன. அதாவது இக்கட்சிக்கு 4.41 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன.
ஆனால் இந்த கட்சி கிட்டத்தட்ட 17 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. சீமானின் கட்சியை விட 10 லட்சம் வாக்குகள் குறைவாக பெற்றும் கூட காங்கிரஸ் கட்சி இத்தனை தொகுதிகளை வென்றுள்ளது. 5-ம் இடத்தை பிடித்துள்ள பா.ம.க. 17.45 லட்சம் வாக்குகள் பெற்று 4.04 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. பாரதீய ஜனதா கட்சிக்கு இந்த தேர்தலில் 6-ம் இடமே கிடைத்துள்ளது. இக்கட்சி பெற்றுள்ள வாக்குகள் 11 லட்சத்து 80 ஆயிரத்து 456 ஆகும். இக்கட்சி பெற்றுள்ள வாக்கு சதவீதம் 2.73 சதவீதம் மட்டுமே. டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. கட்சி 2.47 சதவீத வாக்குகளை பெற்று 7-ம் இடத்தை பிடித்துள்ளது. இவரது கட்சி பெற்ற வாக்குகள் 10 லட்சத்து 65 ஆயிரத்து 142 ஆகும். கமலஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி 2.45 சதவீத வாக்குகளை பெற்று 8-ம் இடத்தையே பிடிக்க முடிந்துள்ளது.
இவரது கட்சி பெற்றுள்ள வாக்குகள் 10.58 லட்சம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1.17 சதவீத வாக்குகளை பெற்று 9-ம் இடத்தை பிடித்துள்ளது. இந்த கட்சி பெற்றுள்ள வாக்குகள் 5.04 லட்சம். ஆனால் இந்த கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. வைகோ தலைமையிலான ம.தி.மு.க. 1.13 சதவீத வாக்குகளை பெற்று 10-ம் இடத்தையே பிடித்துள்ளது. இந்த கட்சி பெற்றுள்ள வாக்குகள் 4 லட்சத்து 86 ஆயிரத்து 979 ஆகும். ஆனால் இந்த கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.
திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கிடைத்துள்ள வாக்குகள் வெறும் 1.06 சதவீதம் மட்டுமே. இவரது கட்சி 4.57 லட்சம் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. ஆனால் வெற்றி பெற்ற இடம் 4 தொகுதிகள். இப்படி சீமானின் கட்சியை விட பல லட்சம் வாக்குகள் குறைவாக பெற்றும் மேற்கண்ட கட்சிகள் வெற்றிக்கொடி நாட்டியுள்ளன. ஆனால் கிட்டத்தட்ட 30 லட்சம் வாக்குகளை பெற்றும் கூட சீமானின் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாதது விந்தையிலும் விந்தை.
இந்த தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. படுபாதாளத்திற்கு சென்று விட்டது. இக்கட்சிக்கு கிடைத்த வாக்குகள் 0.45 சதவீதம் மட்டுமே. அதாவது தமிழகம் முழுவதும் இந்த கட்சிக்கு ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 610 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. கட்சி தொடங்கி தேர்தலை சந்தித்த போது விஜயகாந்த் கட்சிக்கு கிட்டத்தட்ட 8 சதவீத வாக்குகள் கிடைத்திருந்தன. ஆனால் இப்போது 0.45 சதவீதம் என்ற அளவுக்கு விஜயகாந்த் கட்சி படு வீழ்ச்சியை சந்தித்தது அவரது தொண்டர்களை வேதனைக்குள்ளாக்கி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
சிறந்த கேப்டனாக வர கில்லுக்கு முழு தகுதி: கிரிஸ்டன் புகழாரம்
19 Jul 2025லண்டன் : இந்திய அணியின் சிறந்த கேப்டனாக வருவதற்கான அத்தனை தகுதிகளும் சுப்மன் கில்லிடம் இருக்கிறது என கேரி கிரிஸ்டன் தெரிவித்துள்ளார்.
-
உண்மையான சோதனையே இனிதான்: கிரேக் சேப்பல்
19 Jul 2025லண்டன் : இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு உண்மையான சோதனை மான்செஸ்டர் டெஸ்ட்டிலிருந்து தொடங்கவுள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் தெரிவித
-
அசாருதீன் வீட்டில் திருட்டு
19 Jul 2025இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் வீட்டில் இருந்து பணம் மற்றும் பொருட்கள் திருடுபோயுள்ளது.
-
இங்கி.க்கு எதிரான 4-வது டெஸ்ட்: கருண் நாயர் இடம் பெறுவாரா? - உதவி பயிற்சியாளர் விளக்கம்
19 Jul 2025மான்செஸ்டர் : 4வது டெஸ்ட் போட்டியில், கருண் நாயர் இடம் பெறுவாரா என்பது குறித்து இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் விளக்கமளித்துள்ளார்.
-
வங்கதேசம் செல்ல பி.சி.சி.ஐ. மறுப்பு? - ஆசிய கோப்பை தொடர் நடைபெறுவதில் சிக்கல்
19 Jul 2025மும்பை : ஆலோசனை கூட்டத்திற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ), வங்காளதேசம் செல்ல மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பிலிருந்து விலகினார் ருதுராஜ் கெய்க்வாட்
19 Jul 2025லண்டன் : கவுன்ட்டி சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு குறித்து தேசிய கருத்தரங்குகள்: தங்கம் தென்னரசு
20 Jul 2025மதுரை : தமிழ்நாட்டில் கல்வெட்டுகளை கண்டுபிடிப்பதில் நாம் அடைந்திருக்கும் உயரம் குறித்து அனைவருக்கும் தெரியும் வகையில் தேசிய கருத்தரங்கள் நடத்தப்படும் என அமை
-
கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் மூவர் இடைநீக்கம்: ராமதாஸ் அதிரடி
20 Jul 2025சென்னை : கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக பா.ம.க.
-
அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை
20 Jul 2025மாஸ்கோ : ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யாவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரி
-
நடப்பாண்டில் 3-வது முறை நிரம்பியது மேட்டூர் அணை
20 Jul 2025மேட்டூர் : மேட்டர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை நேற்று காலை 8 மணிக்கு எட்டியது.
-
3 முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் பதிலளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
20 Jul 2025புதுடெல்லி : வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின்போது மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்ற
-
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல : எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
20 Jul 2025திருத்துறைப்பூண்டி : ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டாம்: கேரளா ஐகோர்ட் உத்தரவு
20 Jul 2025திருவனந்தபுரம் : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்த்து தர, ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடாது என கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
விமான விபத்து பற்றி உள்நோக்கத்துடன் செய்தி : மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
20 Jul 2025புதுடில்லி : ஏர் இந்தியா விமான விபத்து பற்றி மேற்கத்திய ஊடகங்கள் உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடுவதாக, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவ
-
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றி பாராளுமன்றத்தில் பேச மத்திய அரசு தயார்: அமைச்சர் கிரண் ரிஜிஜூ உறுதி
20 Jul 2025புதுடில்லி : ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாராளுமன்றத்தில் மத்திய அரசு பேச தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறி உள்ளார்.
-
மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை
20 Jul 2025மதுரை : கார் ஏற்றிக் கொல்ல சதி என கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக, படுத்த படுகையில் இருக்கும் மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
-
சேலத்தில் இன்று நடைபெறுகிறது த.வெ.க.வின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
20 Jul 2025சென்னை : சேலத்தில் இன்று மாலை பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
-
அமர்நாத் யாத்திரை: ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது
20 Jul 2025ஜம்மு : அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது