எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி 29 லட்சத்து 58 ஆயிரத்து 458 வாக்குகள் பெற்றுள்ளது. அதாவது இத்தேர்தலில் 3-வது இடத்தை பிடித்துள்ள இக்கட்சிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காமல் போனதுதான் விந்தையிலும் விந்தை.
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2-ம் தேதி எண்ணப்பட்டன. இதில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வுக்கு 36.30 சதவீத வாக்குகள் கிடைத்தன. அதற்கு அடுத்தபடியாக அ.தி.மு.க.வுக்கு 33.29 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இந்த இருபெரும் கட்சிகளுக்கு அடுத்தபடியாக 3-வது பிடித்துள்ள கட்சிதான் சீமானின் நாம் தமிழர் கட்சி. இவரது கட்சிக்கு 29 லட்சத்து 58 ஆயிரத்து 458 வாக்குகள் கிடைத்துள்ளன. அதாவது, இந்த தேர்தலில் இவரது கட்சிக்கு 6.85 சதவீத வாக்குகள் கிடைத்து 3-ம் இடத்தை பிடித்துள்ளது. இப்படி 29.58 லட்சம் வாக்குகள் பெற்றும் கூட சீமானின் கட்சி தமிழகத்தில் ஒரு இடத்தை கூட கைப்பற்றாததுதான் மிகப் பெரிய ஆச்சரியம். காரணம், இவரது கட்சிக்கு அடுத்தபடியாக 4-வது இடத்தில் வந்துள்ள காங்கிரஸ் கட்சி 100 ஆண்டு பாரம்பரியம் உள்ள கட்சி. அந்த கட்சிக்கு 19.06 லட்சம் வாக்குகளே கிடைத்துள்ளன. அதாவது இக்கட்சிக்கு 4.41 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன.
ஆனால் இந்த கட்சி கிட்டத்தட்ட 17 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. சீமானின் கட்சியை விட 10 லட்சம் வாக்குகள் குறைவாக பெற்றும் கூட காங்கிரஸ் கட்சி இத்தனை தொகுதிகளை வென்றுள்ளது. 5-ம் இடத்தை பிடித்துள்ள பா.ம.க. 17.45 லட்சம் வாக்குகள் பெற்று 4.04 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. பாரதீய ஜனதா கட்சிக்கு இந்த தேர்தலில் 6-ம் இடமே கிடைத்துள்ளது. இக்கட்சி பெற்றுள்ள வாக்குகள் 11 லட்சத்து 80 ஆயிரத்து 456 ஆகும். இக்கட்சி பெற்றுள்ள வாக்கு சதவீதம் 2.73 சதவீதம் மட்டுமே. டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. கட்சி 2.47 சதவீத வாக்குகளை பெற்று 7-ம் இடத்தை பிடித்துள்ளது. இவரது கட்சி பெற்ற வாக்குகள் 10 லட்சத்து 65 ஆயிரத்து 142 ஆகும். கமலஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி 2.45 சதவீத வாக்குகளை பெற்று 8-ம் இடத்தையே பிடிக்க முடிந்துள்ளது.
இவரது கட்சி பெற்றுள்ள வாக்குகள் 10.58 லட்சம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1.17 சதவீத வாக்குகளை பெற்று 9-ம் இடத்தை பிடித்துள்ளது. இந்த கட்சி பெற்றுள்ள வாக்குகள் 5.04 லட்சம். ஆனால் இந்த கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. வைகோ தலைமையிலான ம.தி.மு.க. 1.13 சதவீத வாக்குகளை பெற்று 10-ம் இடத்தையே பிடித்துள்ளது. இந்த கட்சி பெற்றுள்ள வாக்குகள் 4 லட்சத்து 86 ஆயிரத்து 979 ஆகும். ஆனால் இந்த கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.
திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கிடைத்துள்ள வாக்குகள் வெறும் 1.06 சதவீதம் மட்டுமே. இவரது கட்சி 4.57 லட்சம் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. ஆனால் வெற்றி பெற்ற இடம் 4 தொகுதிகள். இப்படி சீமானின் கட்சியை விட பல லட்சம் வாக்குகள் குறைவாக பெற்றும் மேற்கண்ட கட்சிகள் வெற்றிக்கொடி நாட்டியுள்ளன. ஆனால் கிட்டத்தட்ட 30 லட்சம் வாக்குகளை பெற்றும் கூட சீமானின் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாதது விந்தையிலும் விந்தை.
இந்த தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. படுபாதாளத்திற்கு சென்று விட்டது. இக்கட்சிக்கு கிடைத்த வாக்குகள் 0.45 சதவீதம் மட்டுமே. அதாவது தமிழகம் முழுவதும் இந்த கட்சிக்கு ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 610 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. கட்சி தொடங்கி தேர்தலை சந்தித்த போது விஜயகாந்த் கட்சிக்கு கிட்டத்தட்ட 8 சதவீத வாக்குகள் கிடைத்திருந்தன. ஆனால் இப்போது 0.45 சதவீதம் என்ற அளவுக்கு விஜயகாந்த் கட்சி படு வீழ்ச்சியை சந்தித்தது அவரது தொண்டர்களை வேதனைக்குள்ளாக்கி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகிறது 2 புயல் சின்னம் : வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும்
07 Nov 2025சென்னை : வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், வடகிழக்குப் பருவமழை தீவிரமட
-
பாதுகாப்பான அடைக்கலம் தந்த இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்தார் : வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா
07 Nov 2025டெல்லி : அடைக்கலம் தந்த இந்திய மக்களுக்கு நன்றி என்று வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி-20 தொடரை கைப்பற்றுமா இந்தியா? - இன்று கடைசி போட்டியில் பலப்பரீட்சை
07 Nov 2025பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை கைப்பற்றுமா இந்திய அணி கைப்பற்றுமா என்ற ஆவல் எழுந்துள்ள நிலையில் இன்று பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள கடைசி போட்டியில்
-
டி.ஜி.பி. நியமனம் விவகாரம்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
07 Nov 2025சென்னை : டி.ஜி.பி. நியமனம் விவகாரம்: 3 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
எட்டயபுரம் அருகே விபத்து - 7 பேர் படுகாயம்
07 Nov 2025மதுரை : லாரி மீது பஸ் மோதி விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பலியான சம்பவத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
வாக்குத்திருட்டை பீகாரிலும் நடத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
07 Nov 2025பாட்னா, வாக்குத்திருட்டை பீகாரிலும் நடத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது என்றும் டெல்லியில் வாக்களித்த பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-11-2025.
07 Nov 2025 -
கரூர் கூட்ட நெரிசலில் ஆம்புலன்ஸை தாக்கிய வழக்கில் 8 பேருக்கு ஐகோர்ட் முன்ஜாமீன்
07 Nov 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசலில் ஆம்புலன்ஸை தாக்கிய வழக்கில் 8 பேருக்கு ஐகோர்ட் மதுரை கிளை முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
-
2-வது டெஸ்ட் முதல் இன்னிங்ஸ்: முன்னிலை பெற்றது இந்தியா 'ஏ'
07 Nov 2025பெங்களூரு : தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சிறப்பான பந்துவீச்சு மூலம் முதல் இன்னிங்சில் இந்தியா ஏ அணி முன்னிலை பெற்றுள்ளது.
-
பீகார் தேர்தலில் அதிக வாக்குப்பதிவு: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
07 Nov 2025பாட்னா : பீகார் தேர்தலில் அதிக வாக்குப்பதிவு எங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
எஸ்.ஐ.ஆர். விவகாரம்: தி.மு.க.வின் மனு மீது நவ. 11-ல் விசாரணை : சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
07 Nov 2025புதுடெல்லி : எஸ்.ஐ.ஆர்.
-
'வந்தே மாதரம்’ பாடலை காங்கிரஸ் கட்சி ஏந்திக்கொண்டது - மல்லிகார்ஜுன கார்கே
07 Nov 2025புதுடெல்லி : வந்தே மாதரம்’ பாடலை காங்கிரஸ் கட்சி பெருமையுடன் ஏந்திக்கொண்டது என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
சேலம் அருகே 2 மூதாட்டிகள் கொலை: குற்றவாளி ஒருவர் சுட்டுப்பிடிப்பு
07 Nov 2025சேலம் : சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே இரண்டு மூதாட்டிகளை கொலை செய்து கல்குவாரியில் வீசிவிட்டு சென்ற வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சு
-
பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் கைது
07 Nov 2025பெங்களூரு : பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் என்ஜினீயர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
-
மெகா கூட்டணி குறித்து ஆர்.பி.உதயகுமார் தகவல்
07 Nov 2025மதுரை, மெகா கூட்டணி குறித்து ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
-
அடுத்த வருடம் இந்தியா வருகிறார் அதிபர் ட்ரம்ப்
07 Nov 2025வாஷிங்டன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடுத்த வருடம் இந்தியா வருகிறார்.
-
உடல் உறுப்பு தானம் செய்பவர்களை போற்ற தமிழ்நாடு முழுவதும் தியாகச்சுவர் எழுப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்
07 Nov 2025சென்னை, உடல் உறுப்புத் தானத்தில் உலகிலேயே தமிழ்நாடுதான் முதலிடம் என தெரிவித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், உடல் உறுப்பு கொடையாள
-
காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் தங்க பல்லி மாயமானதாக புகார்: இந்து அறநிலையத்துறை மறுப்பு
07 Nov 2025காஞ்சிபுரம், காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் தங்க பல்லி மாயமானதாக வெளியான தகவலுக்கு இந்து சமய அறநிலையத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
-
வங்கி ஊழியர்களுக்கு உள்ளூர் மொழி அவசியம்: நிர்மலா சீதாராமன் தகவல்
07 Nov 2025மும்பை : வங்கி ஊழியர்களுக்கு உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
அரசு முறை பயணமாக இன்று முதல் 6 ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஜனாதிபதி முர்மு பயணம்
07 Nov 2025புதுடெல்லி : 6 ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரசு முறை பயணத்தை இன்று முதல் வரும் 13-ம் தேதி வரை ஜனாதிபதி திரெளபதி முர்மு மேற்கொள்ளவிருக்கிறார்.
-
இந்தோனேசியா: மதவழிபாட்டு தலத்தில் திடீர் குண்டு வெடிப்பு - 54 பேர் படுகாயம்
07 Nov 2025ஜகார்தா, இந்தோனேசியாவில் உள்ள மதவழிபாட்டு தலத்தில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது இதில் 54 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
நீரிழிவு நோயாளிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்: குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை கண்டுபிடித்தது சென்னை ஐ.ஐ.டி.
07 Nov 2025சென்னை : நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்துள்ளது.
-
நாடு முழுவதும் மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தெருநாய்கள் நுழைவதை தடுக்க வேண்டும் : மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கூடுதல் உத்தரவு
07 Nov 2025புதுடெல்லி : நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடம், மருத்துவமனை, ரயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் நாய்கள் நுழையாத வகையில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண
-
தங்கம் விலை சற்று குறைவு
07 Nov 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.90,160-க்கு விற்பனையானது.


