எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி 29 லட்சத்து 58 ஆயிரத்து 458 வாக்குகள் பெற்றுள்ளது. அதாவது இத்தேர்தலில் 3-வது இடத்தை பிடித்துள்ள இக்கட்சிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காமல் போனதுதான் விந்தையிலும் விந்தை.
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2-ம் தேதி எண்ணப்பட்டன. இதில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வுக்கு 36.30 சதவீத வாக்குகள் கிடைத்தன. அதற்கு அடுத்தபடியாக அ.தி.மு.க.வுக்கு 33.29 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இந்த இருபெரும் கட்சிகளுக்கு அடுத்தபடியாக 3-வது பிடித்துள்ள கட்சிதான் சீமானின் நாம் தமிழர் கட்சி. இவரது கட்சிக்கு 29 லட்சத்து 58 ஆயிரத்து 458 வாக்குகள் கிடைத்துள்ளன. அதாவது, இந்த தேர்தலில் இவரது கட்சிக்கு 6.85 சதவீத வாக்குகள் கிடைத்து 3-ம் இடத்தை பிடித்துள்ளது. இப்படி 29.58 லட்சம் வாக்குகள் பெற்றும் கூட சீமானின் கட்சி தமிழகத்தில் ஒரு இடத்தை கூட கைப்பற்றாததுதான் மிகப் பெரிய ஆச்சரியம். காரணம், இவரது கட்சிக்கு அடுத்தபடியாக 4-வது இடத்தில் வந்துள்ள காங்கிரஸ் கட்சி 100 ஆண்டு பாரம்பரியம் உள்ள கட்சி. அந்த கட்சிக்கு 19.06 லட்சம் வாக்குகளே கிடைத்துள்ளன. அதாவது இக்கட்சிக்கு 4.41 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன.
ஆனால் இந்த கட்சி கிட்டத்தட்ட 17 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. சீமானின் கட்சியை விட 10 லட்சம் வாக்குகள் குறைவாக பெற்றும் கூட காங்கிரஸ் கட்சி இத்தனை தொகுதிகளை வென்றுள்ளது. 5-ம் இடத்தை பிடித்துள்ள பா.ம.க. 17.45 லட்சம் வாக்குகள் பெற்று 4.04 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. பாரதீய ஜனதா கட்சிக்கு இந்த தேர்தலில் 6-ம் இடமே கிடைத்துள்ளது. இக்கட்சி பெற்றுள்ள வாக்குகள் 11 லட்சத்து 80 ஆயிரத்து 456 ஆகும். இக்கட்சி பெற்றுள்ள வாக்கு சதவீதம் 2.73 சதவீதம் மட்டுமே. டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. கட்சி 2.47 சதவீத வாக்குகளை பெற்று 7-ம் இடத்தை பிடித்துள்ளது. இவரது கட்சி பெற்ற வாக்குகள் 10 லட்சத்து 65 ஆயிரத்து 142 ஆகும். கமலஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி 2.45 சதவீத வாக்குகளை பெற்று 8-ம் இடத்தையே பிடிக்க முடிந்துள்ளது.
இவரது கட்சி பெற்றுள்ள வாக்குகள் 10.58 லட்சம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1.17 சதவீத வாக்குகளை பெற்று 9-ம் இடத்தை பிடித்துள்ளது. இந்த கட்சி பெற்றுள்ள வாக்குகள் 5.04 லட்சம். ஆனால் இந்த கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. வைகோ தலைமையிலான ம.தி.மு.க. 1.13 சதவீத வாக்குகளை பெற்று 10-ம் இடத்தையே பிடித்துள்ளது. இந்த கட்சி பெற்றுள்ள வாக்குகள் 4 லட்சத்து 86 ஆயிரத்து 979 ஆகும். ஆனால் இந்த கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.
திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கிடைத்துள்ள வாக்குகள் வெறும் 1.06 சதவீதம் மட்டுமே. இவரது கட்சி 4.57 லட்சம் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. ஆனால் வெற்றி பெற்ற இடம் 4 தொகுதிகள். இப்படி சீமானின் கட்சியை விட பல லட்சம் வாக்குகள் குறைவாக பெற்றும் மேற்கண்ட கட்சிகள் வெற்றிக்கொடி நாட்டியுள்ளன. ஆனால் கிட்டத்தட்ட 30 லட்சம் வாக்குகளை பெற்றும் கூட சீமானின் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாதது விந்தையிலும் விந்தை.
இந்த தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. படுபாதாளத்திற்கு சென்று விட்டது. இக்கட்சிக்கு கிடைத்த வாக்குகள் 0.45 சதவீதம் மட்டுமே. அதாவது தமிழகம் முழுவதும் இந்த கட்சிக்கு ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 610 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. கட்சி தொடங்கி தேர்தலை சந்தித்த போது விஜயகாந்த் கட்சிக்கு கிட்டத்தட்ட 8 சதவீத வாக்குகள் கிடைத்திருந்தன. ஆனால் இப்போது 0.45 சதவீதம் என்ற அளவுக்கு விஜயகாந்த் கட்சி படு வீழ்ச்சியை சந்தித்தது அவரது தொண்டர்களை வேதனைக்குள்ளாக்கி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –05-02-2026
05 Feb 2026 -
ஆர்டர்லி முறையை ஒழிக்க குழு: சென்னை ஐகோர்ட்டில் அரசு வெளியிட்ட ஆணை தாக்கல்
05 Feb 2026சென்னை, ஆர்டர்லி முறையை ஒழிப்பது குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் குழு அமைத்து ஜனவரி 21-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறி அதற்கான அரசாணையை சென்னை நீதிமன்றத்த
-
நாடு முழுவதும் 18,727 அரசுப்பள்ளிகள் மூடல் பார்லி.யில் மத்திய அரசு தகவல்
05 Feb 2026டெல்லி, நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 18,727 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பா.ஜ.க.
-
என் மகன் குற்றவாளி இல்லை; வழக்கை விரைவில் முடிக்க வேண்டும்: அஜித்குமார் தாயார் பரபரப்பு பேட்டி
05 Feb 2026மதுரை, நிகிதாவை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் தாயார், என் மகன் குற்றவாளி இல்லை என்றும் வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் எ
-
இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை தே.மு.தி.க.வில் விருப்ப மனு விநியோகம்
05 Feb 2026சென்னை, தே.மு.தி.க.வில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
-
ஒரு சவரன் தங்கம் விலை 4,640 ரூபாய் குறைந்தது: வெள்ளி கிலோ ரூ.20,000 சரிவு
05 Feb 2026சென்னை, சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 4,640 குறைந்து விற்பனையானது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ. 20,000 குறைந்து விற்பனையானது.
-
தமிழ்நாடு பால்வளத்துறை சார்பில் ரூ. 101 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்தார்
05 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.2.2026) தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்ப
-
தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை: துணை தேர்தல் ஆணையர் பிப்.11-ல் தமிழகம் வருகை
05 Feb 2026சென்னை, வரும் 11-ம் தேதி துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தமிழகம் வர உள்ளார்.
-
த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன்: செங்கோட்டையன் தகவல்
05 Feb 2026ஈரோடு, த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள்: வருத்தம் தெரிவித்தார் பில்கேட்ஸ்
05 Feb 2026நியூயார்க், எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள் குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
-
இன்றைய ராசிபலன்
05 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
05 Feb 2026- சங்கரன் கோவில் கோமதியம்மன் தெப்பம்.
- இராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்க பல்லக்கில் புறப்பாடு.
- திருமயம் ஆண்டாள் பவனி
-
இன்றைய நாள் எப்படி?
05 Feb 2026


