எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை ; தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற பிரிவுகளைச் சேர்ந்த 35 நிறுவனங்களுடன் ரூ.17,141 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டுள்ளது என உலகளாவிய தொழில்நுட்ப மாநாடு துவக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தொழில்நுட்ப மாநாடு துவக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் பேசியதாவது:
ஐ.ஐ.டி.க்கள் நமது வளர்ச்சியில் பெருமைப்படத்தக்க வகையில் பங்காற்றியுள்ளன. அதிலும் சென்னை ஐ.ஐ.டி., தமிழ்நாடு அரசு பல்வேறு முனைகளில் இருந்து எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண்பதில் அரசுக்கு உறுதுணையாய் இருந்துள்ளது.
அந்த வகையில் பெருமைவாய்ந்த ஐ.ஐ.டி.யின் இத்தகைய தொழில்நுட்ப நிகழ்வில் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன். பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்துவரும் பிரிவுகளில் கவனம் செலுத்தி, அதன்மூலம் ஒரு ட்ரிலியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாட்டிலேயே இரண்டாவது இடம் வகிப்பதுடன், தொழில்வளர்ச்சிமிக்க மாநிலங்களில் ஒன்றாகவும் தமிழ்நாடு உள்ளது. ஐ.டி. துறையைப் பொறுத்தவரையில், இந்தியாவில் இருந்து அதிகளவில் மென்பொருள் ஏற்றுமதி செய்யும் மாநிலங்களுள் ஒன்றாகவும் தமிழ்நாடு திகழ்கிறது.
அதாவது, நாட்டின் மொத்த ஐ.டி. துறை சார்ந்த ஏற்றுமதிகளில் 10சதவீதம் தமிழ்நாட்டினுடையதாகும். கடலடி கேபிள்கள் தமிழ்நாட்டில் வரப்போவதால் தகவல் தரவு மையங்களும், காற்றாலைகள் மற்றும் சூரிய சக்தியில் இருந்து பெறப்படும் பசுமை மின் திட்டங்கள் ஆகியவற்றின் காரணமாக மின்மிகை மாநிலமாகத் தமிழ்நாடு மாற உள்ளதாலும், பல்வேறு நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு ஏற்ற இடமாக இருக்கும். தொழில்நுட்பக் கல்வி முடித்த பட்டதாரிகளும் ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் அதிகரித்து வருவதால் இந்நிறுவனங்களுக்குத் தேவையான திறன்மிகு பணியாளர்களும் எளிதில் கிடைப்பார்கள். இத்தகைய வளமும் வாய்ப்பும், முதலீட்டாளர்களுக்கான சிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டைத் தகுதிப்படுத்தியுள்ளது.
மின்னணுப் பொருட்களைத் தயாரிப்பதில் இந்தியாவிலேயே இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு உள்ளது. இத்தகைய சூழலால் புதுமையான சிந்தனையுடன் களமிறங்கும் தொழில்முனைவோர்களுக்கு ஏற்ற சிறந்த களமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது. தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை வழங்குவதில் எப்போதுமே தமிழ்நாடு அரசு முன்னோடியாக இருந்து வருகிறது. கலைஞர் 1997-ம் ஆண்டே தகவல் தொழில்நுட்பக் கொள்கையை முதன் முதலில் தமிழ்நாட்டிற்கு வகுத்துக் கொடுத்தார். பள்ளிப் பாடத்திட்டத்தில் மட்டுமின்றி கலை, அறிவியல், மருத்துவம், சட்டம் உள்ளிட்ட கல்வி பாடத்திட்டங்களிலும் கணினிப் பாடத்தைக் கொண்டு வந்தார்.
தகவல் தொழில்நுட்பத்தில் இன்றைய சாதனை, கலைஞரின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்த வெற்றி என்றே சொல்லவேண்டும். ஐ.டி. துறையினர் திறமையானவர்களைக் கண்டறிவதற்கு ஏதுவாக, தமிழ்நாட்டில் ஏராளமான அறிவியல், தொழில்நுட்ப பொறியியல் கல்லூரிகள் உள்ளன. சென்னை ஐ.ஐ.டி., திருச்சி என்.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட உலக அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக உள்ளன. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் உள்ளிட்ட நிறுவனங்கள் மூலமாக, தமிழ்நாட்டு இளைஞர்களுக்குப் பல்வேறு பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
அதேபோல், நாட்டிலேயே அதிகமான சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உள்ள மாநிலமும் தமிழ்நாடுதான். சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்றும் ஓசூரில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எல்காட் நிறுவியுள்ளது. உலகத் தரத்திலான பொருட்களையும் சேவைகளையும் வழங்குவதற்கான வாய்ப்பை இது அங்குப் பணிபுரிவோர்க்கு ஏற்படுத்தித் தருகிறது. தகவல் தொழில்நுட்பம், தகவல் தரவு மையம் மற்றும் பிற பிரிவுகளைச் சேர்ந்த 35 நிறுவனங்களுடன் ரூ.17,141 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டுள்ளது.
இதனால் 55,000 புதிய வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டில் உருவாகும். தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலை உருவாக்குவதற்காக புதிய கொள்கைகளை வகுத்து வருவதோடு, ஒற்றைச் சாளர முறையும் பின்பற்றப்பட்டு வருகிறது. புதிய புதிய முயற்சிகளை முன்னெடுக்கவும் ஊக்குவிக்கவும் தமிழ்நாடு அரசு எப்போதும் தயாராக உள்ளது.
எனவே, தொழில் செய்வதற்கு ஏற்ற மாநிலமாகவும் வளர்ச்சியைத் தரும் மாநிலமாகவும் தமிழ்நாடு இருக்கும் என்பதை முதலீட்டாளர்களுக்கும் தொழில்முனைவோர்களுக்கும் தொழில் நிறுவனத்தினருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய அச்சமா? திருமாவளவன் கேள்வி
02 Oct 2025சென்னை, த.வெ.க.
-
விஜய் இதயத்தில் வலி இல்லை: சீமான்
02 Oct 2025விருதுநகர், த.வெ.க. தலைவர் விஜயின் இதயத்தில் வலி இல்லை என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானர் கூறினார்.
-
பா.ஜ.க.வின் பிடியில் இருக்கிறாரா விஜய்? நயினார் நாகேந்திரன் பதில்
02 Oct 2025சென்னை, பா.ஜ.க.வின் பிடியில் இருக்கிறாரா விஜய் என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார்.
-
த.வெ.க. தலைவர் மீது ஏன் வழக்குப்பதியப்படவில்லை? தி.மு.க. செய்தித் தொடர்பாளர் விளக்கம்
02 Oct 2025சென்னை, த.வெ.க. தலைவர் மீது ஏன் வழக்கு இல்லை என்று தி.மு.க. செய்தி தொடர்பாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
-
பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கம்
02 Oct 2025திருவண்ணாமலை, விழுப்புரம்- திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.
-
நெல்லை - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயிகள் நிர்வாகம் அறிவிப்பு
02 Oct 2025தூத்துக்குடி, நெல்லை - திருச்செந்தூர் இடையே நேற்றும், இன்றும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் ரூ.436 கோடியில் புதிய மேம்பாலம்: நிதின் கட்கரி அடிக்கல்
02 Oct 2025புதுச்சேரி, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதுச்சேரியில் இந்திராகாந்தி - ராஜீவ்காந்தி சதுக்கம் இடையே ரூ.436 கோடியில் புதிய மேம்பால கட்டுமான பணிக்கு மத்திய அமைச்சர் நித
-
பா.ம.க. இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.மணி மகனை நியமித்தார் ராமதாஸ்
02 Oct 2025சென்னை, பா.ம.க. இளைஞர் சங்கத்தின் தலைவராக ஜி.கே.மணியின் மகன் நியமனம் செய்யப்பட்டார்.
-
நாடு முழுவதும் புதிய 57 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கல்
02 Oct 2025புதுடெல்லி, நாடு முழுவதும் புதிதாக 57 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமாரை கைது செய்ய போலீசார் தீவிரம்
02 Oct 2025சென்னை, த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்,இணைச் செயலாளர் நிர்மல்குமாரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
-
சீன அதிபரை 4 வாரங்களில் நேரில் சந்தித்து பேசுவேன்: அதிபர் ட்ரம்ப்
02 Oct 2025வாஷிங்டன், சீன அதிபரை 4 வாரங்களில் நேரில் சந்தித்து பேசுவேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
சென்னை கடற்கரை அருகே வரும் 5, 6-ம் தேதிகளில் இந்திய கடலோர காவல் படை பயிற்சி
02 Oct 2025சென்னை, சென்னை கடற்கரை அருகே வருகிற 5, 6-ம் தேதிகளில் இந்திய கடலோர காவல் படையினர் சார்பில் பயிற்சி நடைபெறுகிறது.
-
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
02 Oct 2025புதுச்சேரி, புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
கார்கேவிடம் நலம் விசாரித்த பிரதமர் நரேந்திர மோடி
02 Oct 2025புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் கார்கேவிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.
-
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தொடரும்: ராஜ்நாத்சிங் பேச்சு
02 Oct 2025அகமதாபாத், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தொடரும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க வரிவிதிப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சு
02 Oct 2025மும்பை, அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு கொள்கை அவர்களின் சொந்த நலனை மனதில் கொண்டு செய்யப்பட்டது. ஆனால் அனைவரும் அவர்களால் பாதிக்கப்படுகிறார்கள்.
-
இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்: 2 பேர் கைது
02 Oct 2025தூத்துக்குடி, இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
-
500 பில்லியன் டாலரை நெருங்கிய எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு
02 Oct 2025நியூயார்க், எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலரை நெருங்கியது.
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு: 12 பேர் பலி
02 Oct 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
-
ஐரோப்பிய பெண்ணை பலாத்காரம் செய்த உ.பி.யை சேர்ந்தவருக்கு சிறை
02 Oct 2025மதுரா, ஐரோப்பிய பெண்ணை மோசடி, பலாத்காரம் செய்த நபருக்கு கடுங்காவல் சிறையும் தாயாருக்கும் தண்டனையும் வழங்கப்பட்டது.
-
இங்கிலாந்தில் மகளை பட்டினி போட்டு கொன்ற இந்திய வம்சாவளி பெற்றோர்..!
02 Oct 2025லண்டன், இங்கிலாந்தில் 3 வயது மகளை இந்திய வம்சாவளி பெற்றோர் பட்டினி போட்டு கொன்றனர்.
-
மனித உரிமைகள் குறித்து பாக்., பேச்சு: ஐ.நா. கூட்டத்தில் இந்தியா பதிலடி
02 Oct 2025டெல்லி, மனித உரிமைகள் குறித்து பாகிஸ்தான் பேச்சுக்கு ஐ.நா. கூட்டத்தில் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
-
விழுப்புரம் அருகே பயங்கரம்: கார் மோதி தீப்பிடித்து 3 பேர் பலி
02 Oct 2025விழுப்புரம், விழுப்புரம் அருகே ஏற்பட்ட கார் விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
காமராஜரின் நினைவு தினம்: ராகுல் காந்தி எம்.பி. புகழஞ்சலி
02 Oct 2025புதுடெல்லி, காமராஜரின் நினைவு தினத்தையொட்டி அவருக்கு காங்கிரஸ் ராகுல் காந்தி எம்.பி. புகழஞ்சலி செலுத்தினார்.
-
தென் சீனக் கடலில் இந்திய கடற்படை நீர்மூழ்கிக்கப்பல் மீட்பு நடவடிக்கை
02 Oct 2025புதுடெல்லி, தென் சீனக் கடலில் இந்திய கடற்படை நடத்திய நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.