எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தேசப்பிதா மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பில் அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தியடிகளின் திரு உருவ சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.
கதர் நூல்களால் ஆன மாலையும் ரோஜாப்பூ மாலையும் அவருக்கு அணிவிக்கப்பட்டது. மேலும் அவரது சிலையின் கீழ் பகுதியில் உருவப்படம் வைக்கப்பட்டு தலைவர்கள் மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 7.50 மணிக்கு வந்தார். அதனை தொடர்ந்து கவர்னர் ஆர்.என். ரவி 7.57 மணிக்கு வருகை தந்தார். கவர்னரை, மு.க.ஸ்டாலின் வரவேற்று அழைத்து சென்றார். அதனைத் தொடர்ந்து சரியாக 8 மணிக்கு கவர்னர் ஆர்.என் ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகிய இருவரும் மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து அங்குள்ள இருக்கையில் அமர்ந்து இருவரும் சென்னை சர்வோதைய சங்கம் சார்பில் நடந்த இராட்டை நூற்பு மற்றும் பக்தி பாடல் பஜனையை பார்த்து ரசித்தனர். பின்னர் அங்கிருந்து இருவரும் பரஸ்பர மரியாதையை பகிர்ந்து கொண்டு புறப்பட்டு சென்றனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே.சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ஆர்.காந்தி, தமிழச்சி தங்க பாண்டியன் எம்.பி., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் சர்வோதய சங்க மாணவர்கள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகி எம்.எஸ்.ராமானுஜம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கவர்னர் மற்றும் முதல்வர் வருகையையொட்டி மெரினா கடற்கரை சாலையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காமராஜர் சாலையில் காந்தி சிலை அருகில் மட்டும் போக்குவரத்து திருப்பி விடப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் மகாத்மா காந்தி படத்திற்கு மாலை மற்றும் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்கள். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், மகாத்மா காந்தி படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ஆர்டர்லி முறையை ஒழிக்க குழு: சென்னை ஐகோர்ட்டில் அரசு வெளியிட்ட ஆணை தாக்கல்
05 Feb 2026சென்னை, ஆர்டர்லி முறையை ஒழிப்பது குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் குழு அமைத்து ஜனவரி 21-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறி அதற்கான அரசாணையை சென்னை நீதிமன்றத்த
-
ஒரு சவரன் தங்கம் விலை 4,640 ரூபாய் குறைந்தது: வெள்ளி கிலோ ரூ.20,000 சரிவு
05 Feb 2026சென்னை, சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 4,640 குறைந்து விற்பனையானது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ. 20,000 குறைந்து விற்பனையானது.
-
நாடு முழுவதும் 18,727 அரசுப்பள்ளிகள் மூடல் பார்லி.யில் மத்திய அரசு தகவல்
05 Feb 2026டெல்லி, நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 18,727 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –05-02-2026
05 Feb 2026 -
இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை தே.மு.தி.க.வில் விருப்ப மனு விநியோகம்
05 Feb 2026சென்னை, தே.மு.தி.க.வில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
-
எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள்: வருத்தம் தெரிவித்தார் பில்கேட்ஸ்
05 Feb 2026நியூயார்க், எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள் குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
-
என் மகன் குற்றவாளி இல்லை; வழக்கை விரைவில் முடிக்க வேண்டும்: அஜித்குமார் தாயார் பரபரப்பு பேட்டி
05 Feb 2026மதுரை, நிகிதாவை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் தாயார், என் மகன் குற்றவாளி இல்லை என்றும் வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் எ
-
தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை: துணை தேர்தல் ஆணையர் பிப்.11-ல் தமிழகம் வருகை
05 Feb 2026சென்னை, வரும் 11-ம் தேதி துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தமிழகம் வர உள்ளார்.
-
த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன்: செங்கோட்டையன் தகவல்
05 Feb 2026ஈரோடு, த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு பால்வளத்துறை சார்பில் ரூ. 101 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்தார்
05 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.2.2026) தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்ப
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
05 Feb 2026- சங்கரன் கோவில் கோமதியம்மன் தெப்பம்.
- இராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்க பல்லக்கில் புறப்பாடு.
- திருமயம் ஆண்டாள் பவனி
-
இன்றைய ராசிபலன்
05 Feb 2026 -
இன்றைய நாள் எப்படி?
05 Feb 2026


