எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை,நவ.- 19 - மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் பால்தாக்கரேயின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதிச்சடங்கில் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், வர்த்தகர்கள்,திரையுலகினர் உள்பட லட்சகணக்கானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். மகாராஷ்டிரா மாநிலத்தில் கார்ட்டூனிஸ்ட்டாக இருந்து அரசியலில் புகுந்து நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக உயர்ந்து உயிர்நீத்த சிவசேனா கட்சி தலைவர் பால்தாக்கரே ஒருவார காலமாக
உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தன்னுடைய மடோஸ்ரீ வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு 86 வயதாகிவிட்டால் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் பிற்பகல் சரியாக3.30 மணிக்கு மரணமடைந்தார். அவரது மரண செய்தி கேட்டதும் மும்பை நகர் மட்டுமல்லாது மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் இருந்து அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள்,வர்த்தகர்கள், திரையுலகினர், பொதுமக்கள், சிவசேனா கட்சி தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் சாரை சாரையா வந்து அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்துவோர்களின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. இருந்தபோதிலும் பால் தாக்கரே உடலை விரைவில் அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதனால் நேற்றுக்காலை 7.30 மணிக்கு பால்தாக்கரேயின் உடல் மாடோஸ்ரீயில் இருந்து வெளியே கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்திக்கொண்டே இருந்ததால் உடலை கொண்ட தாமதமாகியது. நேற்றுக்காலை சரியாக 9.30 மணி அளவில்தான் உடலை வீட்டில் இருந்து வெளியே கொண்டுவர முடிந்தது. சிவசேனை கட்சியின் தலைமை அலுவலகமான சேனா பவனுக்கு பால் தாக்கரே உடல் நேற்றுக்காலை 11.30 மணிக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு சுமார் அரைமணிநேரம் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. சேனா பவனில் மூத்த தலைவர்கள் கண்ணீர்மல்க குழுமியிருந்தார்கள். நேற்றுப்பகல் 12.30 மணி அளவில் சேனா பவனில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டு சிவாஜி பூங்காவுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. வழிநெடுகிலும் சிவசேனா தொண்டர்கள், பொதுமக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். வீடுகள், தெருவோரங்கள், வீட்டு மாடிகள் ஆகியவைகளில் இருந்தும் மக்கள் தாக்கரே உடலை பார்த்து கண்ணீர் வடித்தனர். லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்தினர்களிடையே பால்தாக்கரே உடல் சிவாஜி பூங்காவிற்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு சுமார் 5 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக மேடைக்கு செல்ல முக்கிய பிரமுகர்கள் அனுமதிக்கப்பட்டனர். தொண்டர்கள், பொதுமக்களும் சிறிது தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்தனர். பால்தாக்ரேயின் உடலுக்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்த வசதியாக 3 வரிசையாக பிரித்து அனுப்பப்பட்டனர். சிவாஜி பூங்கா மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பால்தாக்கரேயின் தகனத்திற்காக ஏற்பாடுகளை சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஸ்ரீதர் ஜாதவ் கவனித்தார். அவரது உடல் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு மகன்கள் சிதை மூட்டினர். இறுதிச்சடங்கில் சரத்பவார் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், நரேந்திர மோடி, பிரித்வி ராஜ் சவாண் உள்ளிட் முதல்வர்கள், சுஷ்மா சுவராஜ் மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள், மாநில அமைச்சர்கள்,எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். சிவாஜி பூங்காவில்தான் கடந்த 40 ஆண்டுகளாக தொண்டர்கள் மத்தியில் பால்தாக்கரே உரையாற்றுவது வழக்கம். அதை நினைவூட்டும் வகையில் அந்த பூங்காவிலேயே அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. மகாராஷ்டிரா மக்களின் முன்னேற்றத்திற்காக பால்தாக்கரே பாடுபட்டு வந்தாலும் பிழைப்பு தேடி வந்த வெளிமாநில மக்களிடத்திலும் அன்பு காட்டி வந்தார். பாரதிய ஜனதா கட்சியுடன் அவர் கூட்டணி வைத்திருந்தாலும் சில முக்கிய முடிவுகளை எடுப்பதில் தனது மனசாட்சிப்படியே நடந்து கொண்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.


