எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, டிச. 20 - சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த இமாச்சல் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்பு மத்தியில் நடக்கிறது. இன்று மதியத்திற்குள் முடிவுகள் தெரிந்து விடும். அப்போது இரண்டு மாநிலங்களிலும் வெற்றி பெறப் போவது பாரதீய ஜனதாவா? அல்லது காங்கிரசா என்ற கேள்விக்கு விடை கிடைத்து விடும்.
குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
அதன்படி முதலில் இமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் தேர்தல் நடந்து முடிந்தது. பிறகு குஜராத் மாநிலத்தில் கடந்த 13 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலில் முதல் கட்டமாக கடந்த 13 ம் தேதியன்று 87 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. அப்போது 70.75 சதவீத வாக்குகள் பதிவாயின. பிறகு 2 ம் கட்ட மற்றும் இறுதிக் கட்ட தேர்தல் கடந்த 17 ம் தேதியன்று 95 சட்டமன்ற தொகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த இறுதிக் கட்ட தேர்தலிலும் குஜராத் வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்களித்தனர். நீண்ட கியூ வரிசையில் நின்று ஆண்களும், பெண்களும், முதியோர்களும் வாக்களித்தனர். இந்த தேர்தலுக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி போட்டியிட்ட மணி நகர் தொகுதி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் எல்லாம் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டிருந்தார்கள். தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறும் என்று தேர்தல் அதிகாரிகள் கூறியிருந்தார்கள். அதைப் போல் ஒரு சில அசம்பாவித சம்பவங்களை தவிர மற்றபடி இம்மாநிலத்தில் தேர்தல் அமைதியாகவே நடந்து முடிந்தது.
முன்னதாக இந்த இரண்டு கட்ட தேர்தலிலுமே அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் வகையில் பிரச்சாரம் செய்தார்கள். மாநில முதல்வர் மோடி பம்பரமாக சுழன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் தனது 10 ஆண்டு ஆட்சியின் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரித்தார். பா.ஜ.க. தலைவர்களும் அவருக்காக பிரச்சாரம் செய்தனர்.
இதே போல் காங்கிரஸ் தரப்பில் அக்கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆகியோரும் தீவிர பிரச்சாரம் செய்தனர். இங்கு பிரச்சாரம் செய்த பிரதமர் பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். இப்படியாக விறுவிறுப்பாக நடந்த பிரச்சாரம் ஓய்ந்து கடந்த 17 ம் தேதி இறுதிக்கட்ட தேர்தலும் நடைபெற்றது. அந்த தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதா சார்பில் முதல்வர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் ஆனந்தி பட்டேல், சவுரவ் பட்டேல், பிரபுல் பட்டேல், ஜெயநாராயணன் உள்ளிட்டோரும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் தரப்பில் முன்னாள் முதலமைச்சர் சங்கர்சிங் வகேலா, அவரது மகன் மகேந்திர வகேலா உள்ளிட்டோரும் போட்டியிட்டனர்.
முதல்வர் மோடியை எதிர்த்து ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ்பட் மனைவி சுவேதாபட் களமிறங்கினார். முன்னாள் முதலமைச்சர் கேசுபாய் பட்டேல் புதிய கட்சி தொடங்கியிருந்தார். இவரது கட்சியான குஜராத் பரிவர்த்தன் கட்சியும் தேர்தல் களத்தில் குதித்தது. இதனால் பாரதீய ஜனதாவின் ஓட்டுக்கள் பிரியும் என்று காங்கிரஸ் கட்சி கணக்குப் போட்டது. ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் முதல்வர் மோடியே வெற்றி பெறுவார் என்று தகவல்கள் கூறுகின்றன. இதே கருத்தை முதல்வர் மோடியும் கூறியுள்ளார்.
தேர்தலில் வாக்களித்த பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் மூன்றாவது முறையாக நான் ஆட்சியைப் பிடிப்பேன். எனது நல்லாட்சிக்கும், நான் ஏற்படுத்திய முன்னேற்றத்திற்கும் மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கையோடு கூறினார். ஒரு வேளை இவர் இந்த தேர்தலிலும் வெற்றி பெற்றால் அது இவருக்கு ஹாட்ரிக் சாதனையாகத்தான் இருக்கும். எது எப்படியோ இன்று மதியத்திற்குள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும். அப்போது குஜராத்திலும் சரி, இமாச்சல் பிரதேசத்திலும் சரி, ஆட்சியைப் பிடிப்பது காங்கிரசா?அல்லது பா.ஜ.க.வா என்பது தெரிந்து விடும். வாக்குகள் எண்ணப்படுவதை முன்னிட்டு இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெறும். மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் தேர்தலில் பயன்படுத்தப்பட்டதால் முடிவுகள் 4 மணி நேரத்திற்குள் தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-12-2025.
06 Dec 2025 -
2 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி
06 Dec 2025இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
-
தங்கம் விலை உயர்வு
06 Dec 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.96,320-க்கு விற்பனையானது.
-
முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 265 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
06 Dec 2025சென்னை, முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் சமூக நல்லிணக்கத்துடன் வாழும் 10 கிராம ஊராட்சிகளுக்கு விருது, கல்வி உதவித்தொகை, சுயதொழில் புரிந்திட கடனுதவி என ரூ.26
-
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு: காங்., மூத்த தலைவருடன் விஜய்யின் தந்தை சந்திப்பு
06 Dec 2025திருச்சி, காங்கிரஸ் மூத்த தலைவருடன் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் திடீர் சந்தித்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
தி.மலை கோவிலில் பரபரப்பு: போலீசார் - ஆந்திர பக்தர்களிடையே வாக்குவாதம்
06 Dec 2025திருவண்ணாமலை கோவிலில் போலீசார் மற்றும் ஆந்திர பக்தர்களிடையே மோதல் ஏற்பட்டது.
-
இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும்: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆந்திர துணை முதல்வர் கருத்து
06 Dec 2025சென்னை, இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும் என்று திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்துள்ளார்.
-
திருச்செந்தூரில் தீடீரென 75 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்...!
06 Dec 2025தூத்துக்குடி : திருச்செந்தூரில் திடீரென 75 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
டெல்லி காவல் நிலையத்தில் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பு புகார்
06 Dec 2025புதுடெல்லி, டெல்லி பாராளுமன்ற சாலை காவல் நிலையத்தில் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பில் ஜி.கே.மணி புகார் அளித்துள்ளார்.
-
மேலமடை சந்திப்பு மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
06 Dec 2025சென்னை, இன்று திறந்து வைக்கப்படவுள்ள மதுரை - சிவகங்கை மாவட்டங்களை இணைக்கும் மேலமடை சந்திப்பு சாலை மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயரை சூட்டிப் பெருமையடைகிறோ
-
புதிய விதிகளை ஏற்க மறுப்பு: மஸ்கின் எக்ஸ் நிறுவனத்துக்கு 1,250 கோடி ரூபாய் அபராதம்
06 Dec 2025லண்டன், எலான் மஸ்க் எக்ஸ் வலைத்தள நிறுவனத்துக்கு ரூ.1,250 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
-
ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் ஆஸி., 511 ரன்களுக்கு ஆல்-அவுட்
06 Dec 2025பிரிஸ்பேன் : ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 511 ரன்களுக்கு ஆல்-அவுடானது.
-
ஒரேநாளில் இண்டிகோ 1,000 விமானங்கள் ரத்து
06 Dec 2025டெல்லி, ஒரேநாளில் 1,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு இண்டிகோ நிறுவனம் திணறி வருகிறது.
-
நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
06 Dec 2025சென்னை, நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
இண்டிகோ விமான விவகாரம்: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு
06 Dec 2025புதுடெல்லி, இண்டிகோ பிரச்சினை மத்திய அரசின் ஏகபோக மாடலின் விலை என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
காதலியுடன் ஆடம்பரமாக வாழ திருடிய வாலிபர் உள்பட 2 பேர் கைது
06 Dec 2025பெங்களூரு, காதலியுடன் ஆடம்பரமாக வாழவே திருடிய வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
தெலுங்கானாவில் பரபரப்பு: 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
06 Dec 2025ஐதராபாத், தெலுங்கானாவில் 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
விஜய் - சக்கரவர்த்தி சந்திப்பு: செல்வப்பெருந்தகை கருத்து
06 Dec 2025சென்னை, விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து தெரியாது என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
-
தமிழ்நாடு அரசு சார்பில் செயல்படுத்தப்படவுள்ள கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டம்: 19-ம் தேதி துவக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
06 Dec 2025சென்னை, தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி கல்லூரி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டத்தை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டால
-
இத்தாலியில் அமைக்கிறது புதிய டால்பின் சரணாலயம்
06 Dec 2025ரோம், இத்தாலியில் முதல் முறையாக டால்பின் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
-
முருங்கை சாறு, பாதாம் அல்வா: இந்திய ஜனாதிபதி மாளிகையில் அதிபர் புதினுக்கு சிறப்பு விருந்து
06 Dec 2025புதுடெல்லி, ரஷ்ய அதிபர் புதினுக்கு அளிக்கப்பட்ட விருந்து மெனு கார்டு வைரலாகியுள்ளது. அதில், தென்னிந்திய உணவான `முருங்கை இலை சாறு’ முதலிடம் பிடித்துள்ளது.
-
ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காக போராடியவர்: அம்பேத்கருக்கு இ.பி.எஸ். புகழஞ்சலி
06 Dec 2025சென்னை, அம்பேத்கர் அவர்களின் புகழைப் போற்றி வணங்குகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை
06 Dec 2025சென்னை, அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
-
ஜஸ்டின் கிரீவ்ஸ் இரட்டை சதம்: நியூசி.க்கு எதிரான முதல் டெஸ்ட்; 'டிரா' செய்தது வெஸ்ட் இண்டீஸ்
06 Dec 2025கிறிஸ்ட்சர்ச் : ஜஸ்டின் கிரீவ்ஸ் இரட்டை சதத்தால் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணி டிரா செய்தது.
-
1,609.69 கோடி ரூபாய் மதிப்பிலான பெரியாறு கூட்டு குடிநீர் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
06 Dec 2025சென்னை, மதுரை மாநகருக்கு குடிநீர் வழங்க ரூ.1,609.69 கோடி மதிப்பிலான முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தை இன்று உத்தங்குடியில் நடைபெறும் அரசு விழாவில் முதல்வர் மு.க


