எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.27 - சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை ஆதரிக்க மாட்டோம் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பை மீறி ஆரம்பிக்கப்பட்டுள்ள சென்னை அண்ணாநகரில் உள்ள வால்மார்ட் அலுவலகத்தை இடதுசாரி அமைப்புகளின் ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்த விபரம் வருமாறு:-
இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய மூலதனத்தை, பன்னாட்டு நிறுவனங்களை மத்திய அரச அனுமதித்துள்ளது. இது இந்திய வர்த்தகச் சந்தையை கைப்பற்றவும், வேலைவாய்ப்பைப் பறிக்கவும், வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்கவுமே வழிவகுக்கும். எனவே, இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. தமிழகத்தில் வால்மார்ட் நிறுவனம், அண்ணாநகரில் தனது வணிக அலுவலகத்தை திறந்துள்ளது. திருவேற்காடு பள்ளிக் குப்பத்தில் ஒரு லட்சம் சதுர அடியில் சேமிப்பு குளிர்பதன கிடங்கையும் அந்த நிறுவனம் அமைத்து வருகிறது. சில்லரை வியாபாரிகளை அணுகி அனைத்து பொருட்களையும் குறைந்த விலை, கடன் வசதி, விரும்பிய இடத்தில் விநியோகம் உள்ளிட்ட பலவற்றைச் சொல்லி உறுப்பினர்களாக சேர்த்து வருகிறது. ஜனவரி முதல் வியாபாரத்தை தொடங்கவும் உள்ளது. சில்லரை வணிகத்தில் வால்மார்ட் போன்ற நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம் என்ற தமிழக அரசின் முதல்வர் ஜெயலலிதாவின் முடிவையும் மீறி இத்தகைய அத்துமீறல் நடந்து வருகிறது.
இதனை கண்டித்தும், வால்மார்ட் நிறுவனத்தை வெளியேற்ற வலியுறுத்தியும் சிபிஎம், சிபிஐ கட்சிகள் சார்பில் நேற்று (டிச.26) இந்த போராட்டம் நடைபெற்றது. அண்ணாநகர் மேற்கு போக்குவரத்து பணிமனை அருகே இடதுசாரி கட்சிகளின் ஊழியர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டனர். பன்னாட்டு நிறுவங்கள் இந்தியாவிற்குள் வந்ததால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை விவரிக்கும் வகையில் கட்சி ஊழியர்கள் வேடமிட்டு வந்தனர்.
பன்னாட்டு நிறுவனங்களால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் கருத்துப்படங்களை கொண்டு வந்திருந்தனர். வால்மார்ட் அலுவலகத்தை நோக்கி பெண்கள், மாணவர்கள், வாலிபர்கள், தொழிலாளர்கள், கட்சி ஊழியர்கள், வணிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
மாநிலச் செயலாளர் தா.பாண்டின் தலைமையில் ஊர்வலமாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான முழக்கங்களை முழங்கியபடி, போலீசாரின் 6 பாதுகாப்பு வளையங்களையும் உடைத்துக் கொண்டு சென்றனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனையும் மீறி, வால்மார்ட் அலுவலகம் அமைந்துள்ள ஏ.வி.கே.டவரை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். அப்போது இளைஞர்கள் அமெரிக்க கொடியை எரித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:-
சில்லரை வணிகம் செய்யவில்லை; சில்லரை வணிகர்களுக்கு மொத்தமாக பொருட்களை வழங்குகிறோம் என்று வால்மார்ட் நிறுவனம் புது விளக்கம் தருகிறது. சில்லரை வர்த்தகத்தில் தந்திரமாக நுழைகிறது. திருவேற்காட்டிலிருந்தும், அண்ணாநகரிலிருந்தும் வால்மார்ட் நிறுவனத்தை வெளியேற்ற வேண்டுமென்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. அதனை வலியுறுத்தி இந்த மகத்தான முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது. வால்மார்ட் நிறுவனத்தை முழுமையாக அகற்றும் வரை போராட்டம் ஓயாது. இந்தியாவில் எங்கு வால்மார்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் கடைகள் திறந்தாலும் அதனை எதிர்த்து இடதுசாரிகள் போராடுவார்கள் என்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்த மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ, பொதுச் செயலாளர் பெ.சண்முகம், சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ, சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் பி.செல்வசிங், என்.சீனிவாசன், என்.குணசேகரன், கே.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ் எம்எல்ஏ, எஸ்.கண்ணன், ப.சுந்தரராசன் மாவட்டச் செயலாளர்கள் ஏ.பாக்கியம் (தென்சென்னை), கே.செல்வராஜ் (திருவள்ளுர்), மோகனன் (காஞ்சிபுரம்) சிபிஐ தேசியக்குழு உறுப்பினர்கள் எஸ்.எஸ்.தியாகராஜன், மு.வீரபாண்டியன், மாவட்டச் செயலாளர்கள் மு.சம்பத் (வடசென்னை), எஸ்.ஏழுமலை (தென்சென்னை), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆர்.வேல்முருகன், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.எஸ்.கனகராஜ், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர்கள் கே.வனஜகுமாரி, எஸ்.ராணி உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தி.மலை கோவிலில் பரபரப்பு: போலீசார் - ஆந்திர பக்தர்களிடையே வாக்குவாதம்
06 Dec 2025திருவண்ணாமலை கோவிலில் போலீசார் மற்றும் ஆந்திர பக்தர்களிடையே மோதல் ஏற்பட்டது.
-
குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
06 Dec 2025சென்னை, சாலைகளில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணி: 99.81 சதவீதம் பேருக்கு படிவங்கள் விநியோகம்
06 Dec 2025சென்னை, தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு 99.81 சதவீதம் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு வடிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை உயர்வு
06 Dec 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.96,320-க்கு விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-12-2025.
06 Dec 2025 -
இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும்: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆந்திர துணை முதல்வர் கருத்து
06 Dec 2025சென்னை, இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும் என்று திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்துள்ளார்.
-
ஒரேநாளில் இண்டிகோ 1,000 விமானங்கள் ரத்து
06 Dec 2025டெல்லி, ஒரேநாளில் 1,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு இண்டிகோ நிறுவனம் திணறி வருகிறது.
-
2 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி
06 Dec 2025இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
-
காதலியுடன் ஆடம்பரமாக வாழ திருடிய வாலிபர் உள்பட 2 பேர் கைது
06 Dec 2025பெங்களூரு, காதலியுடன் ஆடம்பரமாக வாழவே திருடிய வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு: காங்., மூத்த தலைவருடன் விஜய்யின் தந்தை சந்திப்பு
06 Dec 2025திருச்சி, காங்கிரஸ் மூத்த தலைவருடன் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் திடீர் சந்தித்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் ஆஸி., 511 ரன்களுக்கு ஆல்-அவுட்
06 Dec 2025பிரிஸ்பேன் : ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 511 ரன்களுக்கு ஆல்-அவுடானது.
-
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் 2 பேர் விலகல்
06 Dec 2025கேப்டவுன் : இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர்களான டோனி டி சோர்ஜி மற்றும் குவேனா மபாகா விலகியுள்ளனர்.
-
டெல்லி காவல் நிலையத்தில் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பு புகார்
06 Dec 2025புதுடெல்லி, டெல்லி பாராளுமன்ற சாலை காவல் நிலையத்தில் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பில் ஜி.கே.மணி புகார் அளித்துள்ளார்.
-
வக்ப் உரிமையை காக்கக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்
06 Dec 2025சென்னை : வக்ப் மற்றும் வழிபாட்டு உரிமையை காக்க சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 265 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
06 Dec 2025சென்னை, முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் சமூக நல்லிணக்கத்துடன் வாழும் 10 கிராம ஊராட்சிகளுக்கு விருது, கல்வி உதவித்தொகை, சுயதொழில் புரிந்திட கடனுதவி என ரூ.26
-
திருச்செந்தூரில் தீடீரென 75 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்...!
06 Dec 2025தூத்துக்குடி : திருச்செந்தூரில் திடீரென 75 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
மேலமடை சந்திப்பு மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
06 Dec 2025சென்னை, இன்று திறந்து வைக்கப்படவுள்ள மதுரை - சிவகங்கை மாவட்டங்களை இணைக்கும் மேலமடை சந்திப்பு சாலை மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயரை சூட்டிப் பெருமையடைகிறோ
-
புதிய விதிகளை ஏற்க மறுப்பு: மஸ்கின் எக்ஸ் நிறுவனத்துக்கு 1,250 கோடி ரூபாய் அபராதம்
06 Dec 2025லண்டன், எலான் மஸ்க் எக்ஸ் வலைத்தள நிறுவனத்துக்கு ரூ.1,250 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
-
தெலுங்கானாவில் பரபரப்பு: 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
06 Dec 2025ஐதராபாத், தெலுங்கானாவில் 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
விஜய் - சக்கரவர்த்தி சந்திப்பு: செல்வப்பெருந்தகை கருத்து
06 Dec 2025சென்னை, விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து தெரியாது என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
-
மேகதாது அணை திட்ட அறிக்கை: திருப்பி அனுப்பியது காவிரி மேலாண்மை ஆணையம்
06 Dec 2025தஞ்சாவூர், காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணையை காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் பார்வையிட்டு ஆய்வு செய்த நிலையில், மேகதாது அணை திட்ட அறிக்கையை மத்
-
இம்மாத இறுதியில் மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாக வாய்ப்பு: தமிழகத்திற்கு அதிக மழை பொழிவு இருக்கும்
06 Dec 2025சென்னை, வடகிழக்கு பருவமழை காலத்தின் 3-வது புயல் சின்னம் தெற்கு வங்கக்கடலில் 23-ம் தேதிக்கு பிறகு உருவாவதற்கான சாதகமான சூழல் நிலவி வருகிறது என்று தனியார் வானிலை ஆய்வாளர்
-
வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் : துணை முதல்வர் உதயநிதி நம்பிக்கை
06 Dec 2025சென்னை : வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
-
இண்டிகோ விமான சேவை பாதிப்பு: விமான டிக்கெட் விலை கடும் உயர்வு
06 Dec 2025டெல்லி, இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டதையடுத்து விமான டிக்கெட்டின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது.சென்னையில் இருந்து கோவைக்கு விமான டிக்கெட் விலை வழக்கமாக ரூ.5 ஆயிரத்து
-
இண்டிகோ விமான விவகாரம்: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு
06 Dec 2025புதுடெல்லி, இண்டிகோ பிரச்சினை மத்திய அரசின் ஏகபோக மாடலின் விலை என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.


