எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : போதைப்பொருள் நடமாட்டத்திற்கு துணைபோனால் நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற போதைப் பொருள் தடுப்பு குறித்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக போதை பொருட்கள் உள்ளது. போதை பாதை அழிவுப் பாதை என்பதை நாடும், நாட்டு மக்களும் அறிவார்கள். தற்செயலாகவோ, தவறுதலாகவோ அதனை பயன்படுத்துபவர்கள் அதற்கு முழுமையாக அடிமையாகி மொத்தமாக அதனுள் மூழ்கி விடுகிறார்கள். இது அவர்களது சிந்தனையை அழித்து விடுகிறது. வளர்ச்சியை தடுத்து விடுகிறது.
எதிர்காலத்தை பாழாக்கி அவர்களது குடும்பத்தையும் அழித்து விடுகிறது. இது சமுதாயத்தின், நாட்டின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கிறது. போதை பொருளுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
போதைப் பொருளை பயன்பாட்டை தடுக்க அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கல்வி நிறுவனங்களில் உள்ள விடுதிகளை கண்காணிக்க வேண்டும். போதைப்பொருளை கடத்தலில் ஈடுபடுவோரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி. நியமிக்கப்படுவார்.
வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் பேருந்துகளை கண்காணிக்க வேண்டும். மதுவிலக்கில் உள்ள மத்திய நுண்ணறிவு பிரிவு மேலும் வலுப்படுத்தப்படும். போதை பாதை அழிவு பாதை, அதில் யாரும் செல்லாதீர்கள். மற்றவர்களையும் செல்ல விடாதீர்கள். போதையின் பாதையில் யாரும் செல்ல வேண்டாம் என வலியுறுத்துங்கள்.
பள்ளி, கல்லூரிகளின் முன்பு போதைப்பொருள் விற்போருக்கு அதிகபட்ச தண்டனையை உறுதி செய்ய வேண்டும். போதைப் பொருளை ஒழிக்க போலீசார் உறுதியேற்க வேண்டும் என்றும் சோதனை சாவடிகளில் கண்காணிப்புகளை தீவிரப்படுத்த வேண்டும். வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் குழுக்கள் அமைத்து கஞ்சா விற்பதை தடுக்க வேண்டும்.
போதைப் பொருள் குறித்து புகாரளிக்க இலவச எண்ணை அறிவிக்க வேண்டும். காவல்துறை மட்டுமல்ல, பொதுமக்களும் சேர்ந்து போதை பாதையை அடைக்க வேண்டும். சமுதாயத்திற்கே சீரழிக்க கூடிய போதை பொருள் நடமாட்டத்திற்கு எந்தவிதத்திலும் துணை போக கூடாது. குறிப்பாக போதைப்பொருள் நடமாட்டத்திற்கு துணை போகிறவர்களுக்கு நான் சர்வாதிகாரியாக மாறுவேன். இதற்கான அதிகாரத்தை நான் எங்கும் தேட வேண்டிய அவசியம் இல்லை.
போதைப் பொருள் பயன்பாட்டின் ஆபத்து குறித்து மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 11-ம் தேதி போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாக தேர்ந்தெடுத்து உள்ளோம்.
அதன்படி தமிழகம் முழுவதும் இன்று (11-ம் தேதி) பள்ளி, கல்லூரிகளில் இது தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போதையின் தீமைகள் குறித்த காணொலி காட்சிகளும் திரையிடப்பட உள்ளது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை இளைய சமுதாயத்தினரிடம் முழுமையாக கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். மேலும் இந்த கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளின் கருத்துக்களையும் முதல்வர் கேட்டறிந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க 18-வது நாளாக தடை
12 Jul 2025ஒகேனக்கல், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 18-வது நாளாக நீடிக்கிறது.
-
கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் : விசாரணையில் தகவல்
12 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
இந்திய அணி அதனை செய்திருக்க கூடாது: இங்கிலாந்து முன்னாள் வீரர் விமர்சனம்
12 Jul 2025லண்டன் : இந்திய அணி பந்து மாற்றத்தை தேர்வு செய்திருக்கக்கூடாது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்டீவ் ஹார்மிசன் விமர்சித்துள்ளார்.
-
துருக்கி அரசுடன் ஒப்பந்தம்: ஆயுதங்களை கீழே போட்ட குர்திஷ் பிரிவினைவாதிகள்
12 Jul 2025இஸ்தான்புல், துருக்கியுடனான சமாதான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈராக்கிய குர்திஷ் பிரிவினைவாதிகள் தங்கள் ஆயுதங்களை கைவிட தொடங்கியுள்ளனர்.
-
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி
12 Jul 2025கடலூர், கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார்கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
-
இங்கிலாந்து ஜோடி சாம்பியன்
12 Jul 2025'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
-
ஆர்.சி.பி. கூட்டநெரிசலுக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் : விசாரணை அறிக்கையில் தகவல்
12 Jul 2025பெங்களூரு : பெங்களூரில், ஆர்.சி.பி.
-
கடந்த 10 நாட்களில் வெப்ப அலையால் 2,300 பேர் பலி
12 Jul 2025லண்டன், ஐரோப்பியாவின் பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் வெப்ப அலை காரணமாக கடந்த 10 நாட்களில் மட்டும் 2,300 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வ
-
பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம்: விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு
12 Jul 2025மும்பை : பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம் தொடர்பாக விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
சிறிய பிரச்சனையை பெரிதுபடுத்த வேண்டாம்: வி.சி.க.வினருக்கு திருமாவளவன் அறிவுறுத்தல்
12 Jul 2025சென்னை, சிறிய பிரச்சனையை பெரிதுபடுத்த வேண்டாம் என்று வி.சி.க.வினருக்கு திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.
-
16 நிபந்தனைகளுடன் த.வெ.க. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி
12 Jul 2025சென்னை : த.வெ.க. ஆர்ப்பாட்டத்திற்கு பைக் பேரணி, பட்டாசுகளுக்கு தடை போன்ற நிபந்தனைகளுடன் காவல் துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
-
பாரதிய ஜனதா கூட்டணிக்கு த.வெ.க. வர வாய்ப்புள்ளதா? / மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம்
12 Jul 2025புதுடெல்லி : நாங்கள் பல கட்சிகளை ஒரே கூட்டணியில் கொண்டு வர முயற்சிக்கிறோம் என்று அமித்ஷா தெரிவித்தார்.
-
டெல்லியில் இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம்: 5 பேர் பலி
12 Jul 2025புதுடில்லி, டெல்லியில் 4 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்தனர்.
-
சீனா செல்கிறார் ஜெய்சங்கர்
12 Jul 2025புதுடெல்லி : ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மாணவர், சுற்றுலாப் பயணிகளுக்கான அமெரிக்க விசா கட்டணம் 40 ஆயிரம் ரூபாயாக உயர்வு
12 Jul 2025நியூயார்க், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் விசா, இந்தியப் பணியாளர்கள் அதிகம் பயன்படுத்தும் எச்-1பி விசா கட்டணத்தை ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாக அதிகரிக்கப்
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு: ஒரு காலி பணியடத்துக்கு 353 பேர் போட்டி
12 Jul 2025சென்னை, டி.என்.பி.எஸ்.சி.
-
5 விக்கெட்டுகள் வீழ்த்தியதை கொண்டாடாதது ஏன் ? - பும்ரா விளக்கம்
12 Jul 2025லண்டன் : முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதை கொண்டாடாததற்கான காரணம் குறித்து பும்ரா விளக்கமளித்துள்ளார்.
-
விழுப்புரத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி
12 Jul 2025சென்னை : தமிழ்நாட்டில் விழுப்புரத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ சின்னம் என்ற அங்கீகாரம் கிடைத்தது பெருமகிழ்ச்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின
-
விழுப்புரத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி
12 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் விழுப்புரத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ சின்னம் என்ற அங்கீகாரம் கிடைத்தது பெருமகிழ்ச்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
லாா்ட்ஸ் டெஸ்ட்: கே.எல்.ராகுல் சதம்
12 Jul 2025லண்டன் : லாா்ட்ஸ் டெஸ்ட்டில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் சதமடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பும்ரா 5 விக்கெட்...
-
குஜராத் பால விபத்து பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
12 Jul 2025வதோதரா, குஜராத் மாநிலத்தில் ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
-
நான் எந்த சர்ச்சையிலும் சிக்க விரும்பவில்லை : ஜஸ்ப்ரிட் பும்ரா பதில்
12 Jul 2025லண்டன் : எந்தவிதமான சர்ச்சையிலும் சிக்கி, போட்டிக்கான கட்டணத்தில் பிடித்தம் செய்யப்படுவதை விரும்பவில்லை என பும்ரா தெரிவித்துள்ளார்.
-
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: இறுதியில் சின்னர் - அல்கராஸ் மோதல்
12 Jul 2025லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் யானிக் சின்னர், இரண்டாம் இடத்தில் இருக்கும் நடப்பு சாம்பியன் அல்கராஸுக்கு இடையேயான போ
-
மக்கள் செல்வாக்கை தி.மு.க., இழந்து விட்டது: ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தப்பட்ட திட்டங்களை வழங்குவோம்: இ.பி.எஸ்.
12 Jul 2025கடலூர் : நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், நிறுத்தப்பட்ட ஏழை மக்களின் திட்டங்களை வழங்குவோம் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-07-2025.
13 Jul 2025