எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து நாம் மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கைகளின் காரணமாக பொதுமக்கள் பெரிய பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். அதே போல், சிறப்பாகத் திட்டமிட்டு, இந்த ஆண்டும் நாம் எதிர்வரும் பருவமழைக் காலத்தை அதே போன்ற முறையை கையாளவேண்டும்.
கடந்த ஆண்டுகளில், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்பட்ட புயல், கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை கண்டறிந்து, பேரிடர்களின் சேதத்தை குறைப்பதற்கும், பாதிப்புகளை தவிர்ப்பதற்கும், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நீர்வள ஆதாரத்துறை ஆகிய துறைகளுக்கு மாநில பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து 716 கோடி ருபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் விளைவாக 4399 ஆக இருந்த பேரிடர் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் 3770 ஆக குறைந்துள்ளன. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்படும் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிப்பிற்குள்ளாகும் பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், நிவாரண மையங்களும் கண்டறியப்பட்டு, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
நிவாரண முகாம்களில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளதை மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்திட வேண்டும். பாதிப்புக்குள்ளாகும் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றும் போது முதியோர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
மழை, வெள்ள காலங்களில் மின் கசிவினால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் மாணவர்களது பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். பேரிடர் காலங்களில் செய்யக் கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை குறித்து மாணவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
பருவமழைக் காலத்தில், நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்கவும், நோய்த் தொற்று பரவலைத் தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்வதோடு, உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், பாம்பு கடிக்கான மாற்று மருத்துகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்களைப் போதுமான அளவு இருப்பு வைக்க வேண்டும்.
மாவட்ட கலெக்டர்கள், கனமழை, புயல், வெள்ளம் ஆகியவற்றின் காரணமாக பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை பல்துறை மண்டல குழுக்கள் அமைத்து தொடர்ந்து கண்காணித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும், மழைநீர் வடிகால் பணிகளையும், மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். சென்னை, புறநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று எனக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
அதே போல் பல்வேறு மாவட்டங்களிலும், சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதோடு, சிறு விபத்துக்கள் ஏற்படும் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இது ஏற்புடையதல்ல. இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
நானும் இந்த வாரத்தில் சென்னையில் ஆய்வு நடத்தவுள்ளேன். இனி சுற்றுப்பயணம் செய்ய அனைத்து மாவட்டங்களிலும், இது தொடர்பாக நேரடியாக நான் ஆய்வு செய்ய முடிவு செய்திருக்கிறேன். சாலைப்பணிகள் மேற்கொள்ளும் துறைகள் அனைத்தும் துரிதமாக, தரமாக பணிகளை மேற்கொண்டு முடிக்க வேண்டும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வடகிழக்குப் பருவ மழையின் போது, பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு, பேரிடர்களின் போது மனித உயிரிழப்புகள் ஏற்படுவதையும், பொதுச் சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்படுவதையும் தடுக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-07-2025.
21 Jul 2025 -
சட்டமும், நீதியும் விமர்சனம்
21 Jul 2025சாதாரண நோட்டரி புகார்களை டைப் செய்யும் வழக்கறிஞர் சரவணனிடம் உதவியாளராக சேர நம்ரிதா முயற்சிக்க, அதை சரவணன் நிராகரிக்கிறார். அப்போது கடத்தப்பட்ட தன் மகளுக்கு நீதி க
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
21 Jul 2025சிவகாசி : சிவகாசி அருகே நேற்று நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
-
முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் நடிகர் ரஜினி
21 Jul 2025சென்னை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்: அமைச்சர் துரைமுருகன்
21 Jul 2025சென்னை, முதல்வர் மு.க. ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார், விரைவில் வீடு திரும்புவார் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
-
டிரெண்டிங் திரை விமர்சனம்
21 Jul 2025யூடியுப் சேனல் ஒன்றை கலையரசன் - பிரியாலயா தம்பதி நடத்தி வசதியாக வாழ்ந்து வருகிறார்கள்.
-
அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜா நீக்கம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு
21 Jul 2025சென்னை, முன்னாள் எம்.பியும், அ.தி.மு.க.
-
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்
21 Jul 2025திருவனந்தபுரம், கேரள முன்னாள் முதல்வர் அசசுதானந்தன் நேற்று காலமானார்.
-
சென்ட்ரல் திரை விமர்சனம்
21 Jul 2025நாயகன் விக்னேஷ், தனது குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்பதற்காக 12ம் வகுப்பு தேர்வு முடிந்ததும், இரண்டு மாத விடுமுறையில் வேலை செய்ய சென்னைக்கு சென்று அங்கு ஒரு நூற்பாலை
-
யாதும் அறியான் திரை விமர்சனம்
21 Jul 2025காதலர்களான தினேஷ் மற்றும் பிரானா இவர்களது நண்பர் அவரது காதலி என இரண்டு ஜோடிகள் வனப்பகுதியில் உள்ள சொகுசு விடுதிக்கு செல்கிறார்கள்.
-
பிளாக் மெயில் படம் பேசப்படும் - ஜி.வி.பிரகாஷ் நம்பிக்கை
21 Jul 2025ஜி.வி.பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி நடிப்பில் ஜெ.டி.எஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் மு. மாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ’பிளாக்மெயில்’.
-
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: 12 குற்றவாளிகளையும் விடுதலை செய்து மும்பை ஐகோர்ட் உத்தரவு
21 Jul 2025மும்பை, 2006ம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் உட்பட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
-
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயார்: ஜே.பி. நட்டா தகவல்
21 Jul 2025டெல்லி, ஆபரேஷசன் சிந்தூர் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா கூறினார்.
-
எதிர்க்கட்சியினருக்கு பேச அனுமதி மறுப்பு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு
21 Jul 2025புதுடெல்லி, மக்களவையில் எதிர்க்கட்சியினருக்கு பேச அனுமதி மறுக்கப் படுவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
தலைமைச்செயலாளருக்கு எதிரான அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு
21 Jul 2025சென்னை, தலைமைச்செயலாளருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்படுவதாக சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
-
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய ராணுவத்தின் இலக்கு 100 சதவீதம் நிறைவேற்றம்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
21 Jul 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ராணுவத்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
-
ஒபாமா கையில் விலங்கு: அதிபர் ட்ரம்ப் பகிர்ந்த ஏ.ஐ. வீடியோ...!
21 Jul 2025நியூயார்க், ஒபாமா கையில் விலங்கு மற்றும் சிறையில் அடைக்கப்பட்டது போன்ற ஏ.ஐ. வீடியோவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிர்ந்துள்ளார்.
-
அச்சுதானந்தன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
21 Jul 2025சென்னை : கேரள அரசியலில் ஆழமாக பதியும் புரட்சிகர மரபை விட்டுச் சென்றுள்ளார் அச்சுதானந்தன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.;
-
முன்னாள் எம்.பி அன்வர்ராஜா தி.மு.க.வில் இணைந்தார்
21 Jul 2025சென்னை : அ.தி.மு.க. முன்னாள் எம்.பி அன்வர் ராஜா முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
-
6.2 ரிக்டர் அளவில் அலஸ்காவில் நிலநடுக்கம்
21 Jul 2025வாஷிங்டன், அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
தி.மு.க.வில் இணைந்தது ஏன்? அன்வர் ராஜா விளக்கம்
21 Jul 2025சென்னை, பா.ஜ.க.வுக்கு இலக்கு அ.தி.மு.க.வை அழிப்பது மட்டுமே என அ.தி.மு.க.விலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.
-
ராசி மணலில் அணை: விவசாயிகளின் கோரிக்கைக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு
21 Jul 2025திருவாரூர் : ராசி மணலில் அணை கட்டினால் 62 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க முடியும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கு, அ.தி.மு.க.
-
டெல்லி உயர்நீதிமன்றத்தில் 6 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
21 Jul 2025டெல்லி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆறு புதிய நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து நீதிபதிகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
-
இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் 115 பேர் பலி
21 Jul 2025காசா சிட்டி, காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 115 பேர் உயிரிழந்தனர்.
-
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீவத்சவா பதவியேற்பு
21 Jul 2025சென்னை : சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக ஸ்ரீவத்சவா நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்துவைத்தார்.