எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : விஜயதாரணி ராஜினாமாவால் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. விஜயதாரணி (விளவங்கோடு தொகுதி), நேற்று முன்தினம் திடீரென டெல்லியில் பா.ஜனதா கட்சி தலைவர்களை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவுக்கு விஜயதாரணி தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார்.
விஜயதாரணி எழுதியுள்ள கடிதத்தில், "நான் எனது தமிழக சட்டமன்ற உறுப்பினர் பதவியை பிப்ரவரி 24-ந் தேதி முதல் ராஜினாமா செய்கிறேன்" என்று கூறப்பட்டு இருந்தது. இதற்கிடையே, நெல்லையில் நேற்று பேட்டி அளித்த சபாநாயகர் அப்பாவு, விஜயதாரணியின் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக தெரிவித்தார். இந்த கடிதம் தேர்தல் ஆணையத்துக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.
தேர்தல் ஆணையத்திடம் கடிதம் கிடைத்ததும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும். பொதுவாக, ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அடுத்த 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. எனவே, எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலையும் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிடும் என்றே தெரிகிறது. அவ்வாறு நடந்தால், பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நாளில், விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், விஜயதாரணி ராஜினாமாவால் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் கடிதம் எழுதியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


