எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : தேர்வின் போது தாலியைக்கூட கழற்றச் சொல்லி சோதனை செய்யும் நிலையில், நீட் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளின் வீடுகளில் ஏன் இன்னும் சோதனை செய்யவில்லை என தேசிய தேர்வு முகமைக்கு மதுரை ஐகோர்ட் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் 2019-ல் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆள்மாறாட்டம் செய்து சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது தெரியவந்தது. இதையடுத்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆள்மாறாட்டம் செய்தவர்கள், இதற்கு உதவிய பெற்றோர், இடைத்தரகர்கள் என பலரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய தருண் மோகன், வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது தேசிய தேர்வு முகமை எதிர்மனுதாராக சேர்க்கப்பட்டது. இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில், 2019-ல் சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் பலர் முகவரியில் டெல்லி, ராஜஸ்தான், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வர்கள் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியுள்ளனர். ஒரு மாணவருக்கு ஒரே நாளில் 3 மாநிலங்களில் தேர்வு எழுதியிருக்கின்றனர்.
இந்த 3 தேர்வு மையங்களிலும் பெறப்பட்ட மதிப்பெண்ணின் எந்த மாநிலத்தில் அதிக மதிப்பெண் கிடைத்ததோ, அதன் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் பெற்றுள்ளார். ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய நபர்கள் குறித்த விவரங்களைக் கேட்டு தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் அனுப்பியும் இதுவரை பதில் வரவில்லை எனக் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அரசு வழக்கறிஞர் ஆஜராகி, நீட் மோசடி வழக்கு தொடர்பாக தேசிய தேர்வு முகமை இதுவரை எந்தத் தகவலும் அளிக்கவில்லை. இதனால் விசாரணை மெதுவாகச் செல்கிறது எனத் தெரிவித்தார். தேசிய தேர்வு முகமை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார்.
அப்போது நீதிபதி, வழக்குப்பதிவு செய்து 5 ஆண்டுகள் ஆகிறது. இந்தியாவிலேயே இல்லாத மாணவர் ஒருவருக்கு, மூன்று மாநிலங்களில் தேர்வு எழுதப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் திருமணமான மாணவிகளின் தாலியைக்கூட கழற்றச் சொல்லி சோதனை செய்கிறீர்கள். சிபிசிஐடி கேட்ட ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்களின் ஆவணங்களை இதுவரை நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை வழங்கவில்லை.
இது தேர்வு முகமை ஆள்மாறாட்ட வழக்கின் குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்படுகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நீட் தேர்வு முறைகேட்டில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் ஏன் சோதனை நடத்த உத்தரவு பிறப்பிக்கக் கூடாது? இந்த நிலை தொடர்ந்தால் அவர்களை கைது செய்யவும் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் எனக் கூறினார். இதையடுத்து மத்திய அரசு தரப்பில், ஜூலை 15-ல் பதிலளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது இதை ஏற்றுகொண்ட நீதிபதி விசாரணையை ஜூலை 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 3 days ago |
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
31 May 2025சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஜூன் 1) முதல் ஜூன் 6-ம் தேதி வரை, அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கா
-
இந்தியா 'ஏ' - இங்கி., லயன்ஸ் முதல் டெஸ்ட்: கருண் நாயர் இரட்டை சதம்
31 May 2025கேன்டர்பரி : இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் இரட்டை சதம் விளாசினார்.
-
தி.மு.க., பொதுக்குழு கூட்டம்; மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் திரண்டு வந்து வரவேற்பு
31 May 2025மதுரை : 2 நாட்கள் பயணமாக மதுரை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு 50 சதவீதம் வரி : அதிபர் ட்ரம்ப் புதிய அறிவிப்பு
31 May 2025நியூயார்க் : அமெரிக்காவில் இரும்பு இறக்குமதி வரியை 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த போகிறோம் என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
மதுரையில் இன்று தி.மு.க. பொதுக்குழு: பங்கேற்பவர்களுக்கு தடபுடல் விருந்து
31 May 2025மதுரை, மதுரையில் நடைபெற உள்ள தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வழங்கப்படவுள்ள மதிய விருந்து பட்டியல் வெளியாகியுள்ளது.
-
பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்
31 May 2025போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் மாறிவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
இதுவரை 38 பேருக்கு கொரோனா பாதிப்பு: தமிழ்நாட்டில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
31 May 2025சென்னை, “தமிழகத்தில் 38 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
பெருவெற்றியைப் பெற்றிடப் பொதுக்குழு கூடிடும் மாமதுரை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
31 May 2025மதுரை, மதுரை பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதையடுத்து முதல்வர் ஸ்டாலின் தந்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
-
பாகிஸ்தான் விரோதத்தை மட்டுமே கொடுக்கிறது: தலைமை தளபதி
31 May 2025புதுடெல்லி, “இந்தியா ராஜதந்திர தொடர்புகளை கொண்டிருந்தபோதிலும் பாகிஸ்தானிடமிருந்து விரோதத்தைத் தவிர வேறு எதையும் திரும்பப் பெறவில்லை.” என முப்படை தலைமை தளபதி அனில் சவுகா
-
வட கிழக்கு மாநிலங்களில் கனமழை: அசாமில் நிலச்சரிவுக்கு 5 பேர் பலி
31 May 2025இட்டாநகர், அசாமின் காம்ரூப் மெட்ரோ மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
-
மாவோயிஸ்டுகள் 8 பேர் சரண்
31 May 2025ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் 8 பேர் போலீசில் சரண் அடைந்துள்ளனர்.
-
இந்தியா - பாக். போர் நிறுத்தம்: நோபல் பரிசை வாங்கவே டிரம்ப் தம்பட்டம் அடிப்பதாக விமர்சனம்
31 May 2025வாஷிங்டன், அமைதிக்கான நோபல் பரிசு வாங்கி விட வேண்டும் என்பதற்காக, இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்வதாக விமர்சன
-
திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்..!
31 May 2025திருச்செந்தூர், திருச்செந்தூரில் கடல் திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம் செய்தார் அர்ச்சனா
31 May 2025சென்னை : தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகளை நியமித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
-
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
31 May 2025ஜப்பான் : ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் 20 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது.
-
தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை அமைத்து வருகிறோம்: பா.ம.க. தலைவர் அன்புமணி பேச்சு
31 May 2025சோழிங்கநல்லூர், சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அதற்கான வியூகங்களை அமைத்து வருகிறோம் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
-
வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க 7-வது நாளாக தொடரும் தடை
31 May 2025நெல்லை : குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-05-2025.
31 May 2025 -
இந்திய போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதா? - முப்படை தலைமை தளபதி விளக்கம்
31 May 2025புதுடில்லி : பாகிஸ்தான் மீதான போரில் இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு முப்படை தலைமை தளபதி விளக்கமளித்துள்ளார்.
-
இஸ்ரேல் டிரோன் தாக்குதல்: ஹிஸ்புல்லா தளபதி பலி
31 May 2025பெரூட் : இஸ்ரேல் டிரோன் தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி உயிரிழந்தார்.
-
மதுரையில் இன்று தி.மு.க பொதுக்குழு கூட்டம் : 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
31 May 2025மதுரை : 47 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் இன்று தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. உத்தங்குடி, கலைஞர் திடலில் இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது.
-
ராமதாஸ் - அன்புமணி சந்தித்து கொள்ள முயற்சி எடுக்கிறேன்: பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி பேட்டி
31 May 2025தைலாபுரம், ராமதாஸ்- அன்புமணி இருவரும் சந்தித்துக் கொள்ள வேண்டும், என்று முயற்சி எடுக்கிறேன் என்று பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
-
பச்சிளம் குழந்தை விரல் துண்டிப்பு: செவிலியர் மீது வழக்குப்பதிவு
31 May 2025வேலூர் : வேலூரில் செவிலியரின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
-
வந்தே பாரத் ரயிலின் காலை உணவில் அசைவம் நீக்கம்? பயணிகள் புகார்
31 May 2025சென்னை : வந்தே பாரத் ரயிலில் காலை உணவிற்கான மெனுவில் அசைவ உணவிற்கான ஆப்சனை முன் அறிவிப்பின்றி ரயில்வே நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,710 ஆக அதிகரிப்பு
31 May 2025புதுடெல்லி, இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது.