எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லக்னோ, பிப்.23 - உத்தர பிரதேச சட்டசபையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து அவர்கள் சபை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
உத்தர பிரதேச சட்டசபையில் நேற்று முன்தினம் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிரான அமளியில் ஈடுபட்டனர். இதனால் உ.பி. சட்டசபை கூட்டத்தொடர் ஒரு நாள் முன்னதாகவே ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
எதிர்க்கட்சிகளின் அமளியை பொருட்படுத்தாமல் சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. சட்டசபை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் கூட நேற்று முன்தினம் இரவு காங்கிரஸ், பா.ஜ.க., சமாஜ்வாடி போன்ற எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் சட்டசபைக்குள்ளேயே உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்து அவர்கள் அனைவரையும் சபாநாயகர் உத்தரவுப்படி சபை காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்.
சுமார் 100 எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


