எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.12 - சென்னை சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையில் 1300 அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், கொளத்தூர், வேளச்சேரி உள்ளிட்ட சில தொகுதிகளின் முடிவுகள் தாமதமாக வெளிவரும். என்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான கார்திகேயன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இது பற்றி அவர் கூறியதாவது:-
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 தொகுதிகளில் 210 டேபிள்கள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஒரு வேட்பாளருக்கு ஒரு ஏஜெண்ட் என்ற முறையில் எண்ணிக்கையை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். வேட்பாளர்கள் அதிகமுள்ள தொகுதிகளுக்கு ஏற்ற முறையில் டேபிள்கள் அமைக்கப்படும். வாக்கு எண்ணிக்கை சுற்றுகளும் இதையொட்டி மாறும். மொத்தம் 254 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
கொளத்தூர், வேளச்சேரி ஆகிய தொகுதிகளுக்கு அதிக சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் வாக்கு எண்ணிக்கை அலுவலர், கண்காணிப்பாளர், ஒரு வீடியோ கிராஃபர், ஒரு உதவியாளர் உட்பட 4 பேர்கள் இருப்பார்கள். மொத்தம் 16 தொகுதிகளில் 1050 அரசு ஊழியர்கள் நேரடியாகவும், பிற அலுவல்களுக்கு 250 அரசு ஊழியர்கள் உட்பட 1300 பேர் வாக்கு எண்ணிக்கை பயன்படுத்தப்படுவார்கள்.
தேர்தல் முடிவுகள் வெளிப்படையான தன்மையுடன் இருக்கவேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புப்படி வாக்கு சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட அதே படிவங்கள் வாக்கு எண்ணிக்கையின் போதும் பயன்படுத்தப்படும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் கண்காணிப்பாளர் மற்றம் தேர்தல் அலுவலரிடம் காண்பிக்கப்பட்டு அவர்களுடைய ஒப்புதலுக்கு பிறகு அவரின் கையொப்பத்தை பெற்றபின் அறிவிக்கப்படும்.
செய்தியாளர்களுக்கு உள்ள தனி அறையில் இதற்கான அலுவலர்கள் ஒவ்வொரு சுற்றின் முடிவின்போதும் முறைப்படி வாக்கு எண்ணிக்கையின் முடிவை அறிவிப்பார்கள். அங்கு வைக்கப்பட்டுள்ள கரும் பலகையில் வாக்கு சுற்று எண்ணிக்கை விபரம் எழுதி வைக்கப்படும். இவைகள் அனைத்தும் கணினியில் பின்பு பதிவு செய்யப்படும். செய்தியாளர்கள் அறையில் செல்போன்களை பயன்படுத்திக்கொள்ளலாம். வாக்குகள் நடத்தும் இடத்தை செய்தியாளர்கள் பார்வையிட அங்குள்ள தேர்தல் அதிகாரிகளின் அனுமதியுடன் பார்வையிடலாம். செய்தியாளர்களுக்கு அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர வேறு இடங்களில் செல்போன்களை பயன்படுத்தக்கூடாது.
இதேபோல் வேட்பாளர்களும், அவரது தலைமை ஏஜெண்டுகளும், அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட தனி அறைகளில் மட்டுமே பயன்படுத்தவேண்டும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு வேட்பாளர்களும், தலைமை ஏஜெண்டுகளும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட தனி அறையில் வைத்துவிட்டு செல்லவேண்டும். வாக்கு ஏஜெண்டுகள் பென்சில், பேப்பர், சாதாரண ரக கால்குலெட்டர்கள் கொண்டு வர அனுமதி உண்டு. எக்காரணம் கொண்டு வாக்கு எண்ணிக்கை ஏஜெண்டுகள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு சொல்போன்களை கொண்டு வரக்கூடாது. மீறிக்கொண்டு வரும் வாக்கு ஏஜெண்டுகள் திருப்பி அனுப்பப்படுவார்கள். செய்தியாளர்கள் தேர்தல் ஆணையம் அளித்துள்ள அடையாள அட்டை, அரசு அளித்துள்ள அடையாள அட்டை, செய்தி ஒளிபரப்பு துறை அளித்துள்ள அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
ஒரு சுற்று எண்ணிக்கை முடிய 1 மணி நேரம் ஆகலாம். முதல் சுற்று எண்ணிக்கை காலை 8.00 மணிக்கு தொடங்குகிறது. முதலில் சென்னையில் பதிவான 3082 தபால் ஓட்டுகள் எண்ணப்படும். பிறகு வாக்கு சாவடியில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். முதல் சுற்று அறிவிக்க 9 மணியிலிருந்து 9.15 ஆகலாம். முழுமையான முடிவுகள் அறிவிக்க மாலை 5 மணி வரை ஆகும்.
இவ்வாறு மாநகராட்சி ஆணையர் கார்திகேயன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
வங்கக்கடலில் உருவானது புயல் சின்னம்
02 Nov 2025சென்னை : வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை 5.30 மணிக்கு உருவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக அஜித் தெரிவித்தது அவரது சொந்த கருத்து: துணை முதல்வர் உதயநிதி
02 Nov 2025சென்னை: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக நடிகர் அஜித் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
-
லாலு ஹாலோவீன் கொண்டாட்டம்: பாரதிய ஜனதா கட்சி கடும் விமர்சனம்
02 Nov 2025புதுடெல்லி: ஆர்.ஜே.டி. நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் தனது பேரப்பிள்ளைகளுடன் ‘ஹாலோவீன்’ திருவிழாவைக் கொண்டாடியதை பா.ஜ.க. கடுமையாக விமர்சித்துள்ளது.
-
சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எல்.வி.எம். 3 ராக்கெட்
02 Nov 2025ஸ்ரீஹரிகோட்டா : கடலோர எல்லைகளைக் கண்காணிப்பதற்கான சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளுடன் எல்விஎம் -3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
-
சூடு பிடித்த பீகார் தேர்தல் களம்: ஒரேநாளில் பிரதமர் மோடி, ராகுல், அமித்ஷா பிரச்சாரம்
02 Nov 2025பீகார் : பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு நேற்று ஒரேநாளில் பிரதமர் மோடி, ராகுல், அமித்ஷா பிரச்சாரம் செய்த நிலையில் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
-
மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து: 23 பேர் உயிரிழப்பு
02 Nov 2025மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 23 பேர் பலியாகினர்.
-
குப்பை கிடங்குகளில் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை விற்க மாநகராட்சி புதிய திட்டம்
02 Nov 2025சென்னை : சென்னையில் ஒவ்வொரு மண்டலங்களிலும் உள்ள குப்பை சேமிப்பு கிடங்குகளில் தேங்கி கிடக்கின்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை விற்பனை செய்ய சென்னை மாநகராட்சி திட்டமி
-
கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 2 குழந்தைகளின் பெற்றோருக்கு நிதியுதவி அறிவித்தார் முதல்வர்
02 Nov 2025சென்னை : திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம், அயனம்பாக்கம் கிராமத்தில் கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 2 குழந்தைகளின் பெற்றோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி
-
எஸ்.ஐ.ஆர்.குறித்து மக்களுக்கு விளக்கமளிக்க தமிழ்நாடு முழுவதும் த.வெ.க. சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம், முகாம்கள் விஜய் பரபரப்பு அறிக்கை
02 Nov 2025சென்னை: சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்து மக்களுக்குத் தெளிவாக விளக்குவதற்காக, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்கம் மற்றும் தமிழகம் முழுவதும
-
எஸ்.ஐ.ஆர். குடியுரிமை மீதான தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு
02 Nov 2025சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், குடியுரிமை மீது நடத்தப்படும் தாக்குதல் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்.ஐ.ஆர்.: ஜோதிமணி எம்.பி. கருத்து
02 Nov 2025கரூர்: “வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்.ஐ.ஆர். மேற்கொள்ளப்படுகிறது.
-
பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் த.வெ.க. தொண்டரணிக்கு பயிற்சி
02 Nov 2025சென்னை: சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொண்டரணியினருக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.
-
எஸ்.ஐ.ஆர். குடியுரிமை மீதான தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு
02 Nov 2025சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், குடியுரிமை மீது நடத்தப்படும் தாக்குதல் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
லண்டனில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து: இருவர் கைது
02 Nov 2025புதுடெல்லி: லண்டன் செல்லும் ரயிலில் (சனிக்கிழமை) நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் பத்து பேர் காயமடைந்தனர்.
-
சபரிமலை மண்டல பூஜை: சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்
02 Nov 2025சென்னை: சபரிமலை மண்டல பூஜையையொட்டி சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து கொல்லத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
-
ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கை: பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை
02 Nov 2025டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கைக்கு தயார் என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானை எச்சரித்துள்ளார்.
-
உத்தரகாண்ட் சட்டசபையில் இன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு உரை
02 Nov 2025டெராடூன் : உத்தரகாண்ட் சட்டசபையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று சிறப்பு உரையாற்றுகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-11-2025.
03 Nov 2025


