எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கரூர், கரூர் சம்பவத்தில் கைதான த.வெ.க. நிர்வாகிகளுக்கு அக்.14-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து கரூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன் மற்றும் சிலர் மீது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அவர்கள் மீது 5 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட இந்த முதல் தகவல் அறிக்கை கரூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-1 கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
கடந்த சனிக்கிழமை விஜய் நாமக்கல்-சேலம் சாலை சந்திப்பு பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான த.வெ.க. தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டனர். அப்போது அங்குள்ள தனியார் பல் ஆஸ்பத்திரியின் பெயர் பலகை மீது சிலர் ஏறி நின்றதால் அது இடிந்து விழுந்தது. இதில் ஆஸ்பத்திரியின் கண்ணாடி சுவர், கண்காணிப்பு கேமரா போன்றவை சேதம் அடைந்தன. இதுகுறித்து ஆஸ்பத்திரியின் மேலாளர் அரிச்சந்திரன் நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், த.வெ.க. மாவட்ட செயலாளருமான சதீஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்கள் மீது விஜய் வருகையையொட்டி அனுமதிக்கப்படாத இடங்களில் சுவரொட்டி ஒட்டுதல், போக்குவரத்துக்கும், பொது அமைதிக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் பேனர்களை வைத்தல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்கியது உள்பட 6 வழக்குகள் தனித்தனியாக போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் புஸ்சி ஆனந்த், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட த.வெ.க. நிர்வாகிகளை கைது செய்வதற்காக அமைக்கப்பட்டிருந்த தனிப்படை போலீசார், அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இதில் மதியழகன் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் உள்ள உறவினர் வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான தனிப்படையினர் அங்கு சென்று, நேற்று முன்தினம் இரவு மதியழகனை கைது செய்தனர்.
இந்நிலையில் கரூர் சம்பவத்தில் கைதான த.வெ.க. மாவட்ட செயலாளர் மதியழகன், மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் இருவருக்கும் அக். 14-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து கரூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி கரூர் துயரச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட த.வெ.க. நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் ஆகிய இருவரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்றக் காவலை அடுத்து த.வெ.க. நிர்வாகிகள் இருவரும் திருச்சி சிறையில் அடைக்கப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
5 நாட்கள் தொடர் விடுமுறை? அக்.3-ம் தேதி பொது விடுமுறை வழங்க தமிழக அரசு பரிசீலனை
30 Sep 2025சென்னை, அக்.3-ம் தேதி பொது விடுமுறை வழங்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-09-2025.
30 Sep 2025 -
ஆயுதபூஜை விடுமுறை: இதுவரை 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
30 Sep 2025சென்னை, ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து இதுவரை 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
-
சி.எம். சார், என்னைப் பழிவாங்க வேண்டுமானால்... கரூர் சம்பவத்தில் 3 நாட்களுக்கு பிறகு மவுனம் கலைத்த விஜய்..! வீடியோ வெளியிட்டு பரபரப்பு பேச்சு
30 Sep 2025சென்னை, கரூர் சம்பவம் தொடர்பாக 3 நாட்கள் கழித்து மவுனம் கலைத்துள்ள த.வெ.க. தலைவர் விஜய், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, கரூருக்கு நேரில் வருவேன் என்றார்.
-
கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பதிவு : பதிவிட்ட சில நிமிடங்களிலேயே நீக்கம்
30 Sep 2025சென்னை : கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆதவ் அர்ஜூனா எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவு, பதிவிட்ட சில நிமிடங்களிலேயே நீக்கப்பட்டது.
-
தொடர்ந்து 2-வது நாளாக உயர்வு: ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.87 ஆயிரத்தை நெருங்கியது
30 Sep 2025சென்னை : சென்னையில் நேற்று (செப்.30) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,860-க்கு விற்பனையானது.
-
கேட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்.6 வரை அவகாசம் நீட்டிப்பு
30 Sep 2025சென்னை : இணையதளத்தில் விண்ணப்பிக்க காலஅவகாசம் கடந்த ஆகஸ்டு 28 தொடங்கி செப்டம்பர் 28 முடிவடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
கரூர் சம்பவம் குறித்து வதந்தி: கைது செய்யப்பட்ட 3 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
30 Sep 2025சென்னை, கரூர் சம்பவம் குறித்து வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட 3 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
-
காசா போரை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை: அதிபர் ட்ரம்ப் முயற்சிக்கு பிரதமர் மோடி வரவேற்பு
30 Sep 2025புதுடெல்லி, காசா போரை முடிவுக்கு கொண்டு வர அதிபர் ட்ரம்பின் முயற்சிக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
-
கரூர் சம்பவம்: முன்ஜாமீன் கேட்டு த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு தாக்கல்: ஐகோர்ட் கிளையில் வெள்ளிக்கிழமை விசாரணை
30 Sep 2025மதுரை, முன்ஜாமீன் கேட்டு த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், மனு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.
-
கரூர் சம்பவத்தில் கைதான த.வெ.க. நிர்வாகிகளுக்கு அக்.14 வரை நீதிமன்ற காவல்
30 Sep 2025கரூர், கரூர் சம்பவத்தில் கைதான த.வெ.க.
-
தி.மலையில் அதிர்ச்சி சம்பவம்: இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்கள் கைது
30 Sep 2025திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் கோயிலுக்கு வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
சென்னை, தியாகராய நகரில் 164.92 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
30 Sep 2025சென்னை, சென்னை, தியாகராய நகரில் 164.92 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
தமிழ்நாட்டில் போலீசிடம் இருந்தே பெண்களை காக்க வேண்டிய நிலை: எடப்பாடி பழனிச்சாமி வேதனை
30 Sep 2025சென்னை, தமிழகத்தில் போலீசிடம் இருந்தே பெண்களை காக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக திருவண்ணாமலை சம்பவத்தில் எடப்பாடி பழனிச்சாமி வேதனை
-
முதுகலை ஆசிரியர் தேர்வு; ஹால்டிக்கெட் வெளியீடு
30 Sep 2025சென்னை, முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
-
மராட்டியத்தில் நிலநடுக்கம்
30 Sep 2025மும்பை : மராட்டியத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் பதிவானது.
-
காசா போர் நிறுத்தம் தொடர்பான ட்ரம்பின் அமைதி திட்டத்திற்கு முஸ்லிம் நாடுகள் முழு ஆதரவு
30 Sep 2025வாஷிங்டன் : ட்ரம்பின் காசா அமைதி திட்டத்திற்கு பாகிஸ்தான் உள்பட முஸ்லிம் நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது.
-
பாக்., அரசுக்கு எதிராக போராட்டம்: ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் இணைய சேவைகள் முடக்கம்
30 Sep 2025இஸ்லமபாத் : ஆக்கிரமிப்பு காஷ்மீா் முழுவதும் செல்போன் மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டது.
-
ஆயுதபூஜை விடுமுறை: சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்து அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு
30 Sep 2025சென்னை : ஆயுதபூஜையை முன்னிட்டு சிறப்பு பஸ்களை இயக்கம் குறிதது அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு நடத்தினார்.
-
ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க சிறப்பு குழு
30 Sep 2025சென்னை : ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க சிறப்பு குழு அமைக்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
-
மராட்டியத்தில் கனமழைக்கு 11 பேர் பலி
30 Sep 2025புனே : மராட்டியத்தில் கனமழை காரணமாக 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கரூர் சம்பவம்: வதந்தி பரப்பியதாக யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது
30 Sep 2025சென்னை : கரூர் சம்பவம் தொடர்பாக வதந்தி பரப்பியதாக யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டை போலீசார் கைது செய்தனர்.
-
55 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்: நாளை ராமநாதபுரம் செல்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்: அரசு விழாவில் மட்டும் பங்கேற்பு - 'ரோடு ஷோ' நிகழ்ச்சிகள் ரத்து
30 Sep 2025ராமநாதபுரம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ராமநாதபுரம் செல்கிறார்.
-
இங்கிலாந்தில் காந்தி சிலை உடைப்பு
30 Sep 2025லண்டன் : இங்கிலாந்தில் காந்தி சிலை உடைந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தொடர் விடுமுறை: தாம்பரம் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம்
30 Sep 2025சென்னை, தொடர் விடுமுறையை முன்னிட்டு தாம்பரம் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.