எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : புதுடெல்லியில் நடைபெற உள்ள ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 1-ம் தேதி புதுடெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நாட்டுக்கு அளித்த பங்களிப்பை எடுத்துக்காட்டும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தை வெளியிட்டு பிரதமர் உரையாற்றுகிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவாரால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 1925-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தன்னார்வலர் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு கலாச்சார விழிப்புணர்வு, ஒழுக்கம், சேவை, சமூக பொறுப்புணர்வு போன்ற பண்புகளை மக்களிடையே கொண்டு செல்வதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. நாட்டை மறுகட்டமைப் பதற்கான இயக்கத்தில் மக்களை மையமாகக் கொண்ட அமைப்பாக ஆர்.எஸ்.எஸ். இருந்து வருகிறது. பல நூறு ஆண்டுகளாக அந்நிய ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்த நமது நாட்டின் வளர்ச்சிக்காகவும், தர்மத்தின் அடிப்படையிலான முன்னேற்றத்திற்காகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் இந்த அமைப்பு தொடர்ந்து செயலாற்றி வருகிறது.
நாட்டுப்பற்று மற்றும் தேசியம் குறித்த நற்பண்புகளை உருவாக்குவதையே இந்த அமைப்பு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. தாய் மண்ணின் மீது கொண்டுள்ள பக்தி, ஒழுக்கம், தன்னம்பிக்கை, துணிச்சல், தலைமைப்பண்பு போன்ற குண நலன்களை வளர்ப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த அமைப்பில் உள்ள ஒவ்வொரு ஸ்வயம்சேவகர்களும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கல்வி, சுகாதாரம், சமூக நலன் மற்றும் பேரிடர் மீட்பு பணிகளில் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றியுள்ளது. புயல், வெள்ளப்பெருக்கு, நிலநடுக்கம் உள்ளிட்ட பல்வேறு இயற்கை பேரிடர்களின் போது நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தன்னார்வலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். மேலும், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதில் பிற அமைப்புகளுடன் இணைந்து மக்கள் பங்கேற்புடன் உள்ளூர் சமுதாயத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஆர்.எஸ்.எஸ். பங்காற்றி வருகிறது. ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் அதன் வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளுக்கு மரியாதை செலுத்துவதாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பான பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியில், "100 ஆண்டுகள் முன்பாக, ஆர்.எஸ்.எஸ். நிறுவப்பட்ட போது, தேசம் பலநூற்றாண்டுக்கால அடிமைத்தளைகளில் சிக்கியிருந்தது. இந்த பல நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான அடிமைத்தனம் காரணமாக, நமது சுயமரியாதைக்கும், தன்னம்பிக்கைக்கும் ஆழமான காயம் ஏற்பட்டிருந்தது. உலகின் மிகத் தொன்மையான நாகரிகம், தனது அடையாளத்தைத் தொலைத்து விட்டு அதைத் தேடுவதில் தவித்துக் கொண்டிருந்தது. நாட்டுமக்கள் தாழ்வு மனப்பான்மைக்கு இரையாகியிருந்தார்கள். ஆகையால் தேசத்தின் விடுதலையோடு கூடவே, தேசத்தின் கருத்தியல் அடிமைத்தனத்தனத்திலிருந்தும் விடுதலை பெற்றாக வேண்டியது மிக மகத்துவமானதாக இருந்தது.
இந்த நிலையில்தான், பெருமதிப்பிற்குரிய டாக்டர். ஹெட்கேவார், இந்த விஷயம் குறித்து ஆழமாக ஆலோசித்த பிறகு, இந்த பகீரதப் பணியை நிறைவேற்றும் பொருட்டு, அவர் 1925ஆம் ஆண்டு, விஜயதசமி நன்னாளில் ராஷ்ட்ரீய சுயம்சேவக சங்கத்தை நிறுவினார். அவர் காலமான பிறகு, பெருமதிப்பிற்குரிய குருஜி, தேச சேவையின் இந்த மகா வேள்வியை முன்னெடுத்துச் சென்றார். நேற்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 100 ஆண்டுகளாக, களைப்படையாமல், தடைப்படாமல், தேச சேவையில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றது. ஆகையால் தான், தேசத்தில் எங்கே இயற்கைப் பேரிடர் ஏற்பட்டாலும், ஆர்.எஸ்.எஸ்ஸின் சுயம்சேவர்கள் அனைவருக்கும் முன்னதாக அங்கே சென்று நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதை நம்மால் பார்க்க முடிகிறது.
லட்சோபலட்சம் சுயம்சேவகர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு முயற்சியிலும், தேசத்துக்கே முதன்மை என்ற இந்த உணர்வு தான் எப்போதும் முதன்மையானதாக இருக்கிறது. தேச சேவை என்ற மாபெரும் வேள்வியிலே, தங்களைத் தாங்களே அர்ப்பணம் செய்து வரும் ஒவ்வொரு சுயம்சேவகருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்களை நான் அர்ப்பணம் செய்கிறேன்.” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
5 நாட்கள் தொடர் விடுமுறை? அக்.3-ம் தேதி பொது விடுமுறை வழங்க தமிழக அரசு பரிசீலனை
30 Sep 2025சென்னை, அக்.3-ம் தேதி பொது விடுமுறை வழங்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-09-2025.
30 Sep 2025 -
ஆயுதபூஜை விடுமுறை: இதுவரை 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
30 Sep 2025சென்னை, ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து இதுவரை 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
-
சி.எம். சார், என்னைப் பழிவாங்க வேண்டுமானால்... கரூர் சம்பவத்தில் 3 நாட்களுக்கு பிறகு மவுனம் கலைத்த விஜய்..! வீடியோ வெளியிட்டு பரபரப்பு பேச்சு
30 Sep 2025சென்னை, கரூர் சம்பவம் தொடர்பாக 3 நாட்கள் கழித்து மவுனம் கலைத்துள்ள த.வெ.க. தலைவர் விஜய், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, கரூருக்கு நேரில் வருவேன் என்றார்.
-
தொடர்ந்து 2-வது நாளாக உயர்வு: ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.87 ஆயிரத்தை நெருங்கியது
30 Sep 2025சென்னை : சென்னையில் நேற்று (செப்.30) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,860-க்கு விற்பனையானது.
-
கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பதிவு : பதிவிட்ட சில நிமிடங்களிலேயே நீக்கம்
30 Sep 2025சென்னை : கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆதவ் அர்ஜூனா எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவு, பதிவிட்ட சில நிமிடங்களிலேயே நீக்கப்பட்டது.
-
கேட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்.6 வரை அவகாசம் நீட்டிப்பு
30 Sep 2025சென்னை : இணையதளத்தில் விண்ணப்பிக்க காலஅவகாசம் கடந்த ஆகஸ்டு 28 தொடங்கி செப்டம்பர் 28 முடிவடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
கரூர் சம்பவம் குறித்து வதந்தி: கைது செய்யப்பட்ட 3 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
30 Sep 2025சென்னை, கரூர் சம்பவம் குறித்து வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட 3 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
-
கரூர் சம்பவம்: முன்ஜாமீன் கேட்டு த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு தாக்கல்: ஐகோர்ட் கிளையில் வெள்ளிக்கிழமை விசாரணை
30 Sep 2025மதுரை, முன்ஜாமீன் கேட்டு த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், மனு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.
-
கரூர் சம்பவத்தில் கைதான த.வெ.க. நிர்வாகிகளுக்கு அக்.14 வரை நீதிமன்ற காவல்
30 Sep 2025கரூர், கரூர் சம்பவத்தில் கைதான த.வெ.க.
-
காசா போரை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை: அதிபர் ட்ரம்ப் முயற்சிக்கு பிரதமர் மோடி வரவேற்பு
30 Sep 2025புதுடெல்லி, காசா போரை முடிவுக்கு கொண்டு வர அதிபர் ட்ரம்பின் முயற்சிக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
-
தி.மலையில் அதிர்ச்சி சம்பவம்: இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்கள் கைது
30 Sep 2025திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் கோயிலுக்கு வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
சென்னை, தியாகராய நகரில் 164.92 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
30 Sep 2025சென்னை, சென்னை, தியாகராய நகரில் 164.92 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
தமிழ்நாட்டில் போலீசிடம் இருந்தே பெண்களை காக்க வேண்டிய நிலை: எடப்பாடி பழனிச்சாமி வேதனை
30 Sep 2025சென்னை, தமிழகத்தில் போலீசிடம் இருந்தே பெண்களை காக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக திருவண்ணாமலை சம்பவத்தில் எடப்பாடி பழனிச்சாமி வேதனை
-
முதுகலை ஆசிரியர் தேர்வு; ஹால்டிக்கெட் வெளியீடு
30 Sep 2025சென்னை, முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
-
கரூர் சம்பவம்: வதந்தி பரப்பியதாக யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது
30 Sep 2025சென்னை : கரூர் சம்பவம் தொடர்பாக வதந்தி பரப்பியதாக யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டை போலீசார் கைது செய்தனர்.
-
மராட்டியத்தில் நிலநடுக்கம்
30 Sep 2025மும்பை : மராட்டியத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் பதிவானது.
-
பாக்., அரசுக்கு எதிராக போராட்டம்: ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் இணைய சேவைகள் முடக்கம்
30 Sep 2025இஸ்லமபாத் : ஆக்கிரமிப்பு காஷ்மீா் முழுவதும் செல்போன் மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டது.
-
ஆயுதபூஜை விடுமுறை: சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்து அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு
30 Sep 2025சென்னை : ஆயுதபூஜையை முன்னிட்டு சிறப்பு பஸ்களை இயக்கம் குறிதது அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு நடத்தினார்.
-
காசா போர் நிறுத்தம் தொடர்பான ட்ரம்பின் அமைதி திட்டத்திற்கு முஸ்லிம் நாடுகள் முழு ஆதரவு
30 Sep 2025வாஷிங்டன் : ட்ரம்பின் காசா அமைதி திட்டத்திற்கு பாகிஸ்தான் உள்பட முஸ்லிம் நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது.
-
பாதிக்கப்பட்ட குடும்பங்களை எப்போது சந்திக்கிறார் விஜய்? - ஆதவ் அர்ஜூனா விளக்கம்
30 Sep 2025சென்னை : பாதிக்கப்பட்ட குடும்பங்களை எப்போது சந்திக்கிறார் விஜய் என்று ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
-
ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க சிறப்பு குழு
30 Sep 2025சென்னை : ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க சிறப்பு குழு அமைக்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
-
மராட்டியத்தில் கனமழைக்கு 11 பேர் பலி
30 Sep 2025புனே : மராட்டியத்தில் கனமழை காரணமாக 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
ஹேமமாலினியின் கார் விபத்து
30 Sep 2025கரூர் : கரூர் சென்ற ஹேமமாலினியின் கார் விபத்து ஏற்பட்டது.
-
இங்கிலாந்தில் காந்தி சிலை உடைப்பு
30 Sep 2025லண்டன் : இங்கிலாந்தில் காந்தி சிலை உடைந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.