முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா

செவ்வாய்க்கிழமை, 30 செப்டம்பர் 2025      விளையாட்டு
INDIA 2025-09-15

Source: provided

இந்திய ஜூனியர் மகளிர் ஆக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் முறையே இந்திய அணி 2-3, 5-0 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டிருந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதலாவது வெற்றியை பெற்றது. 

_____________________________________________________________________________________________

மேக்ஸ்வெல் ஆடுவது சந்தேகம்..?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் இன்று தொடங்குகிறது. இந்த தொடரின் ஆட்டங்கள் பே ஓவலில் நடக்கிறது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்த மேக்ஸ்வெல் வலைப்பயிற்சியின் போது காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அவர் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஆடுவதில் சந்தேகம் நிலவுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகலாம் என கூறப்படுகிறது.  

_____________________________________________________________________________________________

தொடரை கைப்பற்றிய நேபாளம்

வெஸ்ட் இண்டீஸ் - நேபாளம் கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சார்ஜாவில் நடைபெறுகிறது. இதில் முதல் போட்டியில் நேபாளம் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நேபாளம் 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 173 ரன்கள் எடுத்தது. நேபாளம் தரப்பில் அதிகபட்சமாக ஆசிப் ஷேக் 68 ரன்னும், சந்தீப் ஜோரா 63 ரன்னும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அஹேல் ஹொசைன், கைல் மேயர்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து 174 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, நேபாள வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 83 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 90 ரன் வித்தியாசத்தில் நேபாளம் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என நேபாளம் கைப்பற்றி விட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி இன்று நடக்கிறது. 

_____________________________________________________________________________________________

டி20 தொடரில் தினேஷ் கார்த்திக்

இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் சர்வதேச லீக் டி20 தொடரில் விளையாடவுள்ளார். சர்வதேச லீக் டி20 தொடரின் 4-வது சீசன் வருகிற டிசம்பரில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் ஷார்ஜா வாரியர்ஸ் அணியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் இணையவுள்ளார். இலங்கை அணியின் விக்கெட் கீப்பரான குசல் மெண்டிஸுக்கு மாற்று வீரராக தினேஷ் கார்த்திக் ஷார்ஜா வாரியர்ஸ் அணியில் இணையவுள்ளார்.

ஷார்ஜா வாரியர்ஸ் அணியில் இணையவுள்ளது தொடர்பாக தினேஷ் கார்த்திக் பேசியதாவது: டிபி வேர்ல்டு சர்வதேச லீக் டி20 தொடரில் ஷார்ஜா வாரியர்ஸ் அணியில் இணையவுள்ளதை நினைத்து மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். ஷார்ஜா வாரியர்ஸ் இளம் வீரர்கள் அடங்கிய அணி. சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அந்த அணிக்கு அதிகமாக உள்ளது. அவர்களுடன் இணையவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக 60 டி20 போட்டிகளில் விளையாடி 686 ரன்கள் எடுத்துள்ளார். ஒட்டுமொத்தமாக அவர் 412 டி20 போட்டிகளில் விளையாடி, 7437 ரன்கள் குவித்துள்ளார். அதில் 35 அரைசதங்கள் அடங்கும்.

_____________________________________________________________________________________________

பாகிஸ்தான் அணி திடீர் முடிவு

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய ராணுவத்தால் பாதிக்கப்பட்டு பலியானோரின் குடும்பங்களுக்கு ஆசியக் கோப்பையில் பெற்ற பரிசுத் தொகையை வழங்க பாகிஸ்தான் அணி முடிவுசெய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ஆசியக் கோப்பையின் இறுதிப்போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 9-வது முறையாக கோப்பையை வென்றது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பரிசுத் தொகையாக ரூ.2.6 கோடியும், இரண்டாம் இடம்பிடித்த பாகிஸ்தான் அணிக்கு ரூ.1.3 கோடியும் வழங்கப்பட்டது. இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஆசிய கோப்பை போட்டிக்கான தனது முழு ஊதியத்தையும் நாட்டின் ஆயுதப் படைகளுக்கும், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நன்கொடையாக வழங்குவதாக அறிவித்திருந்தார்.  இந்த நிலையில், அவரைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் அலி அகா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பலியான குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் குடும்பங்களுக்கு வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து