முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு மாநிலமே திருடப்பட்டுள்ளது: அரியானாவில் போலி வாக்குகள் குறித்து ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதன்கிழமை, 5 நவம்பர் 2025      இந்தியா
Rahul 2024-12-03

Source: provided

புதுடெல்லி: அரியானாவில் போலி வாக்குகள் குறித்து ராகுல் காந்தி குற்றச்சாட்டினார்.

இந்தியாவில் பல்வேறு மாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ.க.வினர் வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளனர் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகிறார். முன்னதாக கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியில் நடந்த தேர்தலில் வாக்குகள் ஆன்லைன் மூலம் நீக்கப்பட்டு, பல்வேறு வாக்குகள் சேர்க்கப்பட்டு உள்ளதாக ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

அந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக மராட்டிய மாநிலத்திலும் வாக்கு திருட்டு நடைபெற்றதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்தார். அடுத்து நடைபெற உள்ள பீகார் தேர்தலிலும் வாக்கு திருட்டு விவகாரத்தை தேர்தல் பிரசாரத்தின் முக்கிய அம்சமாக ராகுல் காந்தி பேசி வருகிறார்.

இந்த நிலையில், போலி வாக்குகள் மூலம் அரியானா என்ற ஒரு மாநிலமே திருடப்பட்டுள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டை ராகுல் காந்தி கூறியுள்ளார். இது குறித்து டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பான ஆதாரங்களை ‘ஹெச் பைல்ஸ்’என்ற பெயரில் வெளியிட்டு ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

அரியானாவில் ஆட்சித் திருட்டு நடந்துள்ளது. வாக்குத் திருட்டு நடக்காமல் இருந்திருந்தால் காங்கிரஸ் அங்கு ஆட்சி அமைத்திருக்கும். வரலாற்றில் முதல்முறையாக தபால் வாக்குகளுக்கும், மின்னணு இயந்திர வாக்குகளுக்கும் தொடர்பே இல்லாமல் இருந்துள்ளது. அரியானாவில் ஏதோ தவறு இருப்பதாகவும், எதுவும் சரியாக நடைபெறவில்லை என்றும் காங்கிரஸ் வேட்பாளர்களிடமிருந்து நிறைய புகார்கள் வந்தன. ஏற்கனவே மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மராட்டிய மாநிலம் ஆகிய இடங்களில் இதை நாங்கள் அனுபவித்தோம்.

போலி வாக்குகள் மூலம் அரியானா என்ற ஒரு மாநிலமே திருடப்பட்டுள்ளது. பிரேசிலைச் சேர்ந்த மாடல் ஒருவரின் புகைப்படத்துடன் அரியானாவில் பல பெயர்களில் 22 வாக்குகள் பதிவாகியுள்ளன. இது தனிப்பட்ட தொகுதிகளில் மட்டும் இல்லாமல், மாநில அளவிலும், தேசிய அளவிலும் நடக்கிறது என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து