எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க. தலைமை அவரை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணிபுரிந்து வந்த அண்ணாமலை, கடந்த 2020-ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணைந்தார். இந்த நிலையில், 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க. போட்டியிட்டது.
ஆனால், தேர்தலில் இந்தக் கூட்டணி தோல்வியடைந்தது. சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அடைந்த தோல்விக்கு பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்ததுதான் காரணம்" என அக்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் கூறினார்கள். மேலும், "சிறுபான்மையினர் வாக்குகளும் கிடைக்காமல் போனதால்தான் நாங்களும் தோல்வியடைந்தோம்" என்று பகிரங்கமாக அவர்கள் பொது வெளியில் தெரிவித்தனர்.
இந்த நேரத்தில்தான், தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். அதாவது, 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் அவர் பொறுப்பேற்றார். ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்த இவர், அ.தி.மு.க. நிர்வாகிகளின் குற்றச்சாட்டுகளுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கத் தொடங்கினார்.
இந்த நிலையில்தான் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வந்தது. அப்போது, அ.தி.மு.க. மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கும் என்று தி.மு.க.வினர் பேசி வந்தனர். ஆனால், அதை அ.தி.மு.க. மறுத்த நிலையில், பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கவில்லை. தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க. - பா.ஜ.க.வுக்கு எதிராக அமைந்த நிலையில், 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள ஒரு ஆண்டுக்கு முன்பே பா.ஜ.க. வியூகம் வகுக்க தொடங்கியது. மீண்டும் கூட்டணி சேர அ.தி.மு.க.வுக்கு தூதுவிட்டது. இதனால், மனமாற்றம் அடைந்த அ.தி.மு.க. தலைமை, கூட்டணியில் இணைய ஒரேயொரு கோரிக்கையை முன்னிறுத்தியது.
அதாவது, பா.ஜ.க. மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்க வேண்டும் என்பதுதான் அந்த கோரிக்கை. அந்த நேரத்தில், பா.ஜ.க. மாநில தலைவராக பதவியேற்று அண்ணாமலைக்கும் 3 ஆண்டுகள் ஆனதால், அதைக் காரணம் காட்டி, கட்சி தலைமை தேர்தலை அறிவித்தது. தமிழக பா.ஜ.க. புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஏப்ரல் 11-ந் தேதி அவர் பதவியேற்றார். அதன் பிறகே, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்தது.
ஆனால், அண்ணாமலையின் ஆதரவாளர்களோ, தமிழகத்தில் பா.ஜ.க. இந்த அளவுக்கு வளர்ச்சியடைய காரணமாக இருந்த அண்ணாமலையை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் தேசிய தலைமையில் அவருக்கு பதவி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். ஆனால், தேசிய அளவில் முக்கிய பொறுப்பு எதுவும் அண்ணாமலைக்கு வழங்கப்படவில்லை. இதனால், அவர் அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர்களை டெல்லி தலைமை அழைத்தபோதும் இவர் மட்டும் செல்லவில்லை. நிறைய திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்ததால் போக முடியவில்லை என்று அதற்கு காரணமாக அண்ணாமலை கூறினார்.
சமீபத்தில், அறிவிக்கப்பட்ட பா.ஜ.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிலும் அண்ணாமலை பெயர் இடம்பெறவில்லை. இந்த நிலையில்தான், விருகம்பாக்கம், மதுரை தெற்கு, காரைக்குடி, சிங்காநல்லூர் உள்பட 6 தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். மாநில தலைவராக இருந்து தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்த்தவருக்கு 6 தொகுதிகளுக்கான பொறுப்புதானா?" என்று அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கொதிப்படைந்தனர். இந்த நிலையில்தான், தந்தையின் உடல்நலனை காரணம் காட்டி, பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்துள்ள டெல்லி பா.ஜ.க. தலைமை அவரை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
04 Feb 2026- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி பிரதிஷ்டா தினம்.
- சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- திருமயம் ஆண்டாள் எண்ணெய்க் காப்பு விழா தொடக்கம்.
-
இன்றைய நாள் எப்படி?
04 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
04 Feb 2026


