முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவை எதிரியாக கருதுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்-நவாஸ் ஷெரீப் அட்வைஸ்

புதன்கிழமை, 18 மே 2011      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்,மே.- 18 - இந்தியாவை மிகப் பெரிய எதிரியாக பாகிஸ்தான் கருதுகிறது. இப்படி கருதுவதையும் நடத்துவதையும் பாகிஸ்தான் முதலில் நிறுத்த வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.  அண்டை நாடான இந்தியாவுடன் மீண்டும் நட்புறவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் பாகிஸ்தானின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். அப்போதுதான் நாட்டுக்கு முன்னேற்றம் ஏற்படும் என்றும் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார். இந்தியாவுடன் கார்கில் போர் வெடித்த போது இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர்தான் இந்த நவாஸ் ஷெரீப். இந்தியாவுடனான போர் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் நவாஸ் ஷெரீப் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்களுடன் நவாஸ் ஷெரீப் கராச்சியில் கலந்துரையாடினார். அப்போதுதான் பாகிஸ்தான் அரசுக்கு அவர் சில அறிவுரைகளை கூறினார்.குறிப்பாக இந்தியாவை மிகப் பெரிய எதிரியாக கருதுவதை இஸ்லாமாபாத் உடனே நிறுத்த வேண்டும் என்றும் நவாஸ் ஷெரீப் வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago