எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன், டிச.13 - அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘பாரின் பாலிஸி’ பத்திரிகையின் 2013-ம் ஆண்டின் மிகச்சிறந்த சிந்தனையாளர்கள் பட்டியலில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், சமூக ஆர்வலர்கள் ஊர்வசி புட்டாலியா, கவிதா கிருஷ்ணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
‘பாரின் பாலிஸி’ பத்திரிகை ஆண்டுதோறும் உலகின் மிகச்சிறந்த சிந்தனையாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. தங்களின் கருத்துகள் மற்றும் செயல்பாடுகளால் சமூகத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தும் 100 பேரை அடையாளம் காட்டும் வகையில் இப்பட்டியல் வெளியிடப்படுகிறது.
இந்தப் பட்டியலில் 32-வது நபராக அரவிந்த் கெஜ்ரிவால் (45) இடம்பெற்றுள்ளார்.
ஊழ லுக்கு எதிராக பிரச்சாரத்தை முன்னெடுத்துச்சென்றவர்; குடிமக்களின் தேவை அறிந்து அரசு பணியாற்ற வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியவர்; குறிப்பாக டெல்லியில் ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் கெஜ்ரிவால் ஈடுபட்டவர்; முக்கிய அரசியல் தலைவர்களின் ஊழலை எந்தவிதமான அச்சமும் இல்லாமல் பகிரங்கப்படுத்தியவர்; காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் நில பேர முறைகேடு குறித்து வெளிப்படையாக தெரிவித்தவர் என்று கெஜ்ரிவாலை அந்த பத்தி ரிகை புகழ்ந்துள்ளது.
ஊர்வசி புட்டாலியா, கவிதா கிருஷ்ணன் ஆகியோர் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை கண்டித்து குரல் கொடுத்ததிலும், போராட்டம் நடத்தியதிலும் சிறப்பாக செயல்பட்டவர்கள் என்று அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மேலும் சில இந்தியர்கள் விவரம்:
மக்களின் உடல் நலத்துக்கான உரிமை தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக ஐ.நா.வால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு பிரதிநிதி ஆனந்த் குரோவர், தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றின் நிர்வாகி ரோகித் வான்சூ, ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் டாக்டர் சஞ்சய் பாசு, ஏஞ்சல் லிஸ்ட் முதலீட்டு நிறுவன உரிமையாளர் நவல் ரவிகான்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
எட்வர்ட் ஸ்னோடென்
பல்வேறு நாடுகளின் தலைவர் களையும், முக்கிய நபர்களையும் அமெரிக்க உளவு அமைப்பான என்.எஸ்.ஏ. கண்காணித்து வருகிறது. அவர்கள் பயன்படுத்தும் செல்போன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சாதனங்களை ஒட்டுக் கேட்கும் பணியிலும், இணையம் மூலம் மேற்கொள்ளப்படும் தகவல் பரிமாற்றங்களை திருடி தகவல் சேகரிக்கும் பணியிலும் என்.எஸ்.ஏ. ஈடுபடுவதாக தகவல் வெளியானது. இந்த தகவல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட்ட என்.எஸ்.ஏ.வின் முன்னாள் பணியாளர் எட்வர்ட் ஸ்னோடென், இந்த பட்டியிலில் முதலிடம் பெற்றுள்ளார்.
உலகத் தலைவர்கள்
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாரோவ், ஜப்பான் பிரதமர் ஷென்ஜோ அபே, ஈரான் அதிபர் ஹசன் ருஹானி, போப்பாண்டவர் பிரான்சிஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளை, சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்படுவது தொடர்பாக ஆய்வுப் பணியில் ஈடுபட்ட உலக நாடுகள் குழுவை வழிநடத்திய ராஜேந்திர பச்சோரி, பாகிஸ்தானில் பெண் கல்வி உரிமைக்காக போராடிய மலாலா யூசஃப்சாய் ஆகியோரும் ‘பாரின் பாலிசி’ வெளி யிட்டுள்ள உலகின் மிகச்சிறந்த சிந்தனையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.


