எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம்,ஜூன்.2 - திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் கோயிலில் ஜூன் 6 ம் தேதி நடக்கும் மகா கும்பாபிஷேகத்திற்காக இன்று மாலை யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன.
முருகப் பெருமானின் முதல் படை வீடும் எனும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 2000 ம் ஆண்டில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகம விதி. அதன்படி திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அங்கு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது.
ரூ. 5 கோடியில் கோயில் மராமத்து பணிகள் செய்து ஜூன் 6 ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. திருப்பணிகள் துவங்கும் வகையில் அக்டோபர் 30 ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கோயிலில் உள்ள சுவாமி சிலைகள், தூண்கள், சுவர்களில் மராமத்து பணிகள் நடக்கின்றன. கோயிலில் உள்ள அனைத்து மண்டபங்களிலும் முதல் முறையாக கமலம் வரையும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
7 நிலைகளை கொண்ட 150 அடி உயர ராஜ கோபுரத்தில் வர்ணம் தீட்டும் பணி நிறைவடைந்து வண்ணமயமாக கம்பீரமாக காட்சியளிக்கிறது. கோயிலுக்குள் உள்ள கருங்கற்களினால் ஆன சுவாமி பீடங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தும் பணியும் நடக்கிறது. மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்யகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய சுவாமி சிலைகளுக்கான மராமத்து பணிகள் நிறைவடைந்து புணுகு சாத்தப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக மூலஸ்தானத்தில் ஏ.சி. பொருத்தப்பட்டு வருகிறது.
யாகசாலை பூஜைகள் இன்று துவக்கம்:
யாகசாலை பூஜைகளுக்காக ரூ. 8 லட்சம் செலவில் 80 யாக குண்டங்கள் ஒரு பிரதான வேதிகையுடன் 5 வேதிகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 3 யாகசாலைகளும் அமைக்கப்பட்டு இன்று மாலை 6 மணி முதல் 8 மணிக்குள் முதல் கால யாகசாலை பூஜை துவங்குகிறது. நாளை காலை 2 ம் காலம், மாலையில் 3 ம் காலம், வருகிற 4 ம் தேதி காலையில் 4 ம் காலம், மாலையில் 5 ம் காலம், வருகிற 5 ம் தேதி காலையில் 6 ம் காலம், மாலையில் 7 ம் காலம் யாகசாலை பூஜைகள் நடக்கின்றன. அதை தொடர்ந்து கும்பாபிஷேக தினமான ஜூன் 6 ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு எட்டாம்கால யாகசாலை பூஜை பூர்த்தி செய்யப்பட்டு மகாதூப தீபாராதனைகள் நடக்கிறது. அதனை தொடர்ந்து காலை 6.15 மணிக்கு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய குடங்கள் புறப்பாடாகி ராஜகோபுரத்தில் மேல் பகுதியில் உள்ள கலசத்திற்கும், கோவர்த்தனாம்பிகை, வல்லப கணபதி விமானங்களுக்கும் கொண்டு செல்லப்படும். பூஜைகள் முடிந்து காலை 6.45 மணி முதல் 7.15 மணிக்குள் கோபுர கலசங்களிலும், விமானங்களிலும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.
அதனை தொடர்ந்து மூலவர்கள், பரிகார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும் நடைபெறும். இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி திருவீதி உலா நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். அதனை தொடர்ந்து 7 ம் தேதி முதல் மண்டலாபிஷேகம் நடக்கிறது.
புனித தீர்த்தங்கள் வருகை:
யாக சாலையில் வைத்து பூஜிக்கப்படுவதற்காக திருப்பரங்குன்றம், மதுரை, அழகர்கோவில் மலை மீது உள்ள நூபுர கங்கை தீர்த்தம், காவிரி கங்கை உட்பட 6 புனித தீர்த்தங்கள் எடுத்து வரப்பட்டுள்ளது. அவை தங்கம், வெள்ளி, குடங்கள் மற்றும் பித்தளை செம்புகளில் நிரப்பி, யாகசாலையில் வைத்து 8 கால பூஜைகள் நடக்கிறது. 6 ம் தேதி காலை இந்த புனித தீர்த்தங்கள் மூலம் கோபுர கலசங்களில் ஊற்றி மகா கும்பாபிஷேகமும், மூலவர்களுக்கு மகா அபிஷேகமும் நடைபெறும்.
கோயில் ஆஸ்தான மண்டபத்தில் சுழலும் லிங்கம், நந்தி.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலுக்குள் உள்ள அனைத்து மண்டபங்களின் மேல் பகுதியிலும் கமலங்கள் வரையும் பணி நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக ஆஸ்தான மண்டபத்தின் மேல் பகுதியில் ஒரு புறம் சுழலும் லிங்கமும், மற்றொரு புறம் சுழலும் நந்தியும் புதிய தொழில் நுட்பம், கலை நயத்துடன் வரையப்பட்டுள்ளது. தரையில் இருந்து இவற்றை பார்க்கும் பக்தர்கள் எந்த திசையில் இருந்து பார்த்தாலும் இந்த நந்தியும், லிங்கமும் அவர்களை நேர்த் திசையில் பார்ப்பது போன்று, எந்த பக்கம் நின்று பார்த்தாலும் அது நேராக தெரிவது போன்றும் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
2-வது டி-20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
31 Oct 2025மெல்போர்ன் : 2-வது டி-20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
-
சென்னை-குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம்
31 Oct 2025சென்னை, சென்னை - குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம் செய்யப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை: மதுரை ஐகோர்ட்
31 Oct 2025மதுரை, கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை என்று மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது.
-
பா.ம.க. உட்கட்சி பிரச்சினை: 6 மாதங்களில் சுமுக தீர்வு; அன்புமணி உறுதி
31 Oct 2025சேலம் : பா.ம.க. உட்கட்சி பிரச்சினைக்கு 6 மாதத்தில் சுமுக தீர்வு ஏற்படும் என்று அன்புமணி= கூறினார்.
-
இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து
31 Oct 2025தமிழ்நாட்டின் 35 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ள ஏ.ஆர். இளம்பரிதிக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் : ராஜ்நாத் சிங் கையெழுத்து
31 Oct 2025டெல்லி : இந்தியா- அமெரிக்கா இடையே 10 ஆண்டுக்கான பாதுகாப்பு ஒப்பந்தத்தை ராஜ்நாத் சிங் கையெழுத்திட்டார்.
-
வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
31 Oct 2025சென்னை : வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தை
31 Oct 2025சென்னை : திருமண புகார் வழக்கு நடந்துவரக்கூடியநிலையில், ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
-
ரூ. 1.86 லட்சத்திற்கு ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி
31 Oct 2025பெங்களூரு : ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
-
ஈரோடு-செங்கோட்டை விரைவு ரயில் இயக்கம் பகுதியளவு ரத்து
31 Oct 2025சென்னை : ஈரோடு - செங்கோட்டை விரைவு ரயில் இயக்கம் பகுதியளவு ரத்து செய்யப்பட்டது.
-
கோவையில் அமையும் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு
31 Oct 2025கோவை : கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியது தமிழக அரசு.
-
வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
31 Oct 2025சென்னை : வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
31 Oct 2025சென்னை : ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு ஏற்படுவதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
சின்னக்காளி பாளையத்தில் குப்பைமேடு: தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
31 Oct 2025சென்னை : சின்னக்காளி பாளையத்தில் குப்பைமேடு அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
-
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் - செங்கோட்டையன்
31 Oct 2025கமுதி : அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.
-
பிரதமர் மோடி பொய் பிரசாரம்: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு
31 Oct 2025சென்னை : பீகாரிகள் பிரதமர் மோடி பொய் பிரசாரம் செய்வதாக தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி, மோடி, அமித்ஷா ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் பொய் சொல்வதில் வல்லவர்கள் என்றும் அவர
-
முழு காஷ்மீரும் இந்தியாவுடன் ஒருங்கிணைவதை நேரு அனுமதிக்கவில்லை: பிரதமர் மோடி பேச்சு
31 Oct 2025அகமதாபாத் : முழு காஷ்மீரையும் இந்தியாவுடன் ஒருங்கிணைக்க விரும்பினார் படேல், ஆனால் நேரு அனுமதிக்கவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்கான 'ஆன்லைன்' முன்பதிவு இன்று தொடங்குகிறது
31 Oct 2025சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டது.
-
சுருளி அருவியில் குளிக்க அனுமதி
31 Oct 2025கூடலூர் ,: நீர்வரத்து சீரானதால் 13 நாட்களுக்கு பிறகு சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம்: அமலாக்கத்துறையின் புகாருக்கு அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
31 Oct 2025திருச்சி : குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம் என்று அமலாக்கத்துறை புகாருக்கு அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.
-
கரூர் கூட்ட நெரிசல்: 5 மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை
31 Oct 2025கரூர், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக 5 மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
-
த.வெ.க. கூட்ட நெரிசல் விவகாரம்: சம்பவத்தை பார்த்தவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
31 Oct 2025கரூர் : கரூர் வேலுசாமிபுரத்தில் த.வெ.க. பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த இடத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
-
சபரிமலையில் மகர திருவிளக்கு பூஜை: 2 மாதங்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
31 Oct 2025கேரளா : சபரிமலையில் மகர திருவிளக்கு பூஜையை முன்னிட்டு 2 மாதங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
-
பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் : தமிழக காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்
31 Oct 2025சென்னை : பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்யின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை, தேர்தல் நன்மைக்காக ஒரு மாநில மக்க
-
இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்: 2 பேர் கைது
31 Oct 2025தூத்துக்குடி : இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


