எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, ஜூலை - 4 - டி.வி. நிகழ்ச்சித் தயாரிப்பாளர் நீரஜ் குரோவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மரியா, அவருக்கு வழங்கப்பட்ட தண்டனைக் காலம் முடிவடைந்ததால் விடுதலை செய்யப்பட்டார். சினிமா வாய்ப்பு தேடி மும்பை வந்தவர் மரியா சூசைராஜ்(30). சில டி.வி. தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். அப்போது டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளர் நீரஜ் குரோவருக்கும் மரியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. குரோவர் தான் தயாரிக்கும் டி.வி. நிகழ்ச்சிகளில் வாய்ப்பு தருவதாக கூறிவந்தார். இதனால் இவர்கள் இருவரும் நெருங்கிப் பழகினர். ஆனால் சொன்னபடி குரோவர் வாய்ப்பு எதுவும் கொடுக்கவில்லை. இதனால் மரியாவிற்கு குரோவரின் மேல் கோபம் ஏற்பட்டது. இதனை தனது காதலனும் கடற்படை அதிகாரியுமான எமிலி ஜெரோமிடம் கூறி வருத்தப்பட்டார் மரியா.
இந்நிலையில் கடந்த 2008 ம் ஆண்டு மே மாதம் 7 ம் தேதி மலாடில் உள்ள மரியாவின் வீட்டிற்கு நீரஜ் குரோவர் வந்தார். அதேசமயத்தில் ஜெரோமும் அங்கு வந்தார். அப்போது குரோவருக்கும் ஜெரோமுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது சண்டையில் முடிந்தது. இந்த சண்டையின்போது ஜெரோம் கத்தியை எடுத்து குரோவரை குத்தி கொலை செய்தார். பிறகு மரியாவும் ஜெரோமும் சேர்ந்து குரோவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி மும்பை அருகே உள்ள காட்டுப் பகுதியில் வீசிவிட்டனர். இந்த கொலை தொடர்பாக மரியாவும், ஜெரோமும் அந்த மே மாதம் 21 ம் தேதியே கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த மும்பை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி சந்த்வானி, கொலைத் தடயங்களை மறைத்த குற்றத்திற்காக மரியாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ஜெரோமிற்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். இதில் மரியா ஏற்கனவே 3 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளதால் மரியா சுசைராஜ் மும்பை பைகுலா சிறையில் இருந்து நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த அவரை சந்திக்க பத்திரிகையாளர்கள் மற்றும் பலரும் ஏராளமான அளவில் குவிந்திருந்தனர். ஆனால் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுத்த மரியா ஒரு காரில் ஏறி சென்றுவிட்டார்.
மரியாவின் வழக்கறிஞர் ஷரீப் ஷேக் இதுகுறித்து கூறுகையில், இ.பி.கோ. 201-வது பிரிவின் கீழ்(தடயங்களை அழித்தல்) மரியா ஏற்கனவே 3 ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவித்துவிட்டார். அவரது இளம் வயது காரணமாக அவருக்கு குறைந்த தண்டனை வழங்கும்படி நீதிபதியை கேட்டுக்கொண்டேன் என்று தெரிவித்தார். ஜெரோம் இன்னும் 7 ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கில் மரியாவுக்கும், ஜெரோமுக்கும் மொத்தம் 1.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி சந்த்வானி, இந்த பணம் நீரஜ் குரோவரின் தந்தையிடம் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஆனால் இந்த தீர்ப்பில் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று கூறியுள்ள குரோவரின் தந்தை அமர்நாத் குரோவர், இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நீரஜ்ஜின் தாய் நீலம் கூறுகையில், விடுதலை செய்யப்பட்டுள்ள மரியாவால் என் உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து ஏற்படலாம் என்றும் அவரை மும்பையில் இருந்து வெளியேற அனுமதிக்கக் கூடாது. மரியா ஒரு பொய்யர். அவர் எங்களுக்கு எதிராக சதித்திட்டம் கூட தீட்டலாம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் பிரபல பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ராம்கோபால் வர்மா, மரியாவை வைத்து படம் ஒன்று எடுக்க விருப்பப்படுகிறேன் என்று கூறியுள்ளார். ஒரு நடிகை ஆவதற்கான முதிர்ச்சி சிறையில் இருந்த காலத்தில் அவருக்கு ஏற்பட்டிருக்கும். மேலும் அவருக்கு ஏற்பட்டிருக்கும் விளம்பரமும், மக்களுக்கு அவர் மேல் ஏற்பட்டுள்ள ஆர்வமும் நான் எடுக்கும் அந்த படத்தை வெற்றிப்படமாக மாற்றும் என்றும் வர்மா தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
2-வது டி-20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
31 Oct 2025மெல்போர்ன் : 2-வது டி-20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
-
சென்னை-குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம்
31 Oct 2025சென்னை, சென்னை - குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம் செய்யப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை: மதுரை ஐகோர்ட்
31 Oct 2025மதுரை, கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை என்று மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது.
-
பா.ம.க. உட்கட்சி பிரச்சினை: 6 மாதங்களில் சுமுக தீர்வு; அன்புமணி உறுதி
31 Oct 2025சேலம் : பா.ம.க. உட்கட்சி பிரச்சினைக்கு 6 மாதத்தில் சுமுக தீர்வு ஏற்படும் என்று அன்புமணி= கூறினார்.
-
இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து
31 Oct 2025தமிழ்நாட்டின் 35 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ள ஏ.ஆர். இளம்பரிதிக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் : ராஜ்நாத் சிங் கையெழுத்து
31 Oct 2025டெல்லி : இந்தியா- அமெரிக்கா இடையே 10 ஆண்டுக்கான பாதுகாப்பு ஒப்பந்தத்தை ராஜ்நாத் சிங் கையெழுத்திட்டார்.
-
வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
31 Oct 2025சென்னை : வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தை
31 Oct 2025சென்னை : திருமண புகார் வழக்கு நடந்துவரக்கூடியநிலையில், ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
-
ரூ. 1.86 லட்சத்திற்கு ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி
31 Oct 2025பெங்களூரு : ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
-
ஈரோடு-செங்கோட்டை விரைவு ரயில் இயக்கம் பகுதியளவு ரத்து
31 Oct 2025சென்னை : ஈரோடு - செங்கோட்டை விரைவு ரயில் இயக்கம் பகுதியளவு ரத்து செய்யப்பட்டது.
-
கோவையில் அமையும் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு
31 Oct 2025கோவை : கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியது தமிழக அரசு.
-
வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
31 Oct 2025சென்னை : வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
31 Oct 2025சென்னை : ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு ஏற்படுவதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
சின்னக்காளி பாளையத்தில் குப்பைமேடு: தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
31 Oct 2025சென்னை : சின்னக்காளி பாளையத்தில் குப்பைமேடு அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
-
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் - செங்கோட்டையன்
31 Oct 2025கமுதி : அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.
-
பிரதமர் மோடி பொய் பிரசாரம்: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு
31 Oct 2025சென்னை : பீகாரிகள் பிரதமர் மோடி பொய் பிரசாரம் செய்வதாக தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி, மோடி, அமித்ஷா ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் பொய் சொல்வதில் வல்லவர்கள் என்றும் அவர
-
முழு காஷ்மீரும் இந்தியாவுடன் ஒருங்கிணைவதை நேரு அனுமதிக்கவில்லை: பிரதமர் மோடி பேச்சு
31 Oct 2025அகமதாபாத் : முழு காஷ்மீரையும் இந்தியாவுடன் ஒருங்கிணைக்க விரும்பினார் படேல், ஆனால் நேரு அனுமதிக்கவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்கான 'ஆன்லைன்' முன்பதிவு இன்று தொடங்குகிறது
31 Oct 2025சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டது.
-
சுருளி அருவியில் குளிக்க அனுமதி
31 Oct 2025கூடலூர் ,: நீர்வரத்து சீரானதால் 13 நாட்களுக்கு பிறகு சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம்: அமலாக்கத்துறையின் புகாருக்கு அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
31 Oct 2025திருச்சி : குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம் என்று அமலாக்கத்துறை புகாருக்கு அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.
-
கரூர் கூட்ட நெரிசல்: 5 மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை
31 Oct 2025கரூர், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக 5 மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
-
த.வெ.க. கூட்ட நெரிசல் விவகாரம்: சம்பவத்தை பார்த்தவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
31 Oct 2025கரூர் : கரூர் வேலுசாமிபுரத்தில் த.வெ.க. பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த இடத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
-
சபரிமலையில் மகர திருவிளக்கு பூஜை: 2 மாதங்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
31 Oct 2025கேரளா : சபரிமலையில் மகர திருவிளக்கு பூஜையை முன்னிட்டு 2 மாதங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
-
பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் : தமிழக காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்
31 Oct 2025சென்னை : பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்யின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை, தேர்தல் நன்மைக்காக ஒரு மாநில மக்க
-
இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்: 2 பேர் கைது
31 Oct 2025தூத்துக்குடி : இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


