முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில்களில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஆக.13 - ஓடும் ரயில்களில் பயணிகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை பல்வேறு வழிகளில் ரயில்வே எடுத்து வருகிறது என்று அமைச்சர் தினேஷ் திவேதி நேற்று ராஜ்யசபையில் தெரிவித்தார். பாராளுமன்ற லோக்சபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு ரயில்வே அமைச்சர் தினேஷ் திவேதி பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் ஓடும் ரயிலில் பயணிகள் பாதுகாப்புக்கு ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி ஓட்டப்பந்தய வீரர் ஒருவர் கொள்ளையர்களால் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டதில் இருந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றார். ரயில்வே பாதுகாப்பு விஷயத்தில் சமாதானத்திற்கே இடமில்லை. ரயில்களில் பாதுகாப்பை கண்காணிக்க ஒருங்கிணைந்த கண்காணிப்பு முறையை கையாளப்படும். முக்கியமான பகுதிகளில் சர்க்கியூட் கேமிராக்கள் மூலம் எல்க்ரானிக் கண்காணிப்பு முறையை கொண்டுவரப்படும். முக்கிய ரயில்நிலையங்களில் நாசவேலையை தடுக்கவும் கண்காணிப்பை பலப்படுத்தப்படும். ரயில்வே பாதுகாப்பானது மத்திய,மாநில அரசுகள் சேர்ந்து செய்ய வேண்டிய நடவடிக்கையாகும் என்றும் அமைச்சர் திவேதி மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago