எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கால்நடை வளர்ப்பில் கறவை மாடு வளர்ப்பு என்பது சத்தான பால், வளமான எரு ஆகியவற்றை தருவதோடு ஆண்டு முழுவதும் சுயவேலைவாய்ப்பு அளித்து நிலையான வருவாய் ஈட்டிக்கொடுக்கிறது. இன்றைய கன்றே நாளைய பசு. ஆகவே கன்றுகளை நன்கு பராமரிப்பதன் மூலம் பசுக்களை நமது பண்ணையிலேயே உருவாக்கலாம். சந்தைகள், வீடுகள், தரகர்கள், அரசு மற்றும் தனியார் பண்ணைகள் மூலம் கறவை மாடுகளை தேர்ந்தெடுத்து வாங்கலாம். ஜெர்சி கலப்பின பசுக்கள், வடநாட்டைச் சேர்ந்த கறவை இனங்களான கிர், சாகிவால் தார்பார்கள் போன்ற இனங்களை வாங்கலாம். எந்த இனமாக இருந்தாலும் இளவயது மாடுகளை வாங்குவதே பண்ணைக்கு லாபகரமாக இருக்கும். முதல் அல்லது இரண்டாவது ஈற்று மாடுகளை வாங்குவது நன்று. மாடுகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மாடுகளின் நாசிகளுக்கு நடுவே உள்ள கறுப்பு பகுதி ஈரமாக இருக்க வேண்டும். அசைபோட்டுக் கொண்டிருக்க வேண்டும். தோல் மிருதுவாகவும், மினுமினுப்பாகவும் இருக்க வேண்டும். சாணம் பேதி, ரத்தம், சீதம் அல்லது துர்நாற்றத்துடன் இருந்தாலோ மாட்டின் சிறுநீர் வெளிமஞ்சள் நிறமற்று சிவப்பு நிறமாக இருந்தாலோ, மாட்டின் ரோமங்கள் பெரிதாகவும் அடர்த்தியாகவும் இருந்தாலோ அது நோயின் அறிகுறியாகும்.
பால்மடி, உடலோடு ஒட்டி பெருத்து இருக்க வேண்டும். மடி மிருதுவாக இருக்க வேண்டும், காயங்கள், கொப்புளங்கள் இருக்கக்கூடாது. நான்கு காம்புகளும் சீராக சதுர வடிவில் உள்ளது போல் இருக்க வேண்டும். மடிக்குச் செல்லும் இரத்த நாளம் நன்கு புடைத்துக் காணப்பட வேண்டும். பால்கறக்கும் போது காம்புகளில் அடைப்பு இல்லாமல் இருக்க வேண்டும். காம்புத் துவாரம் நன்றாக இருந்தால் பால் கறக்கும் போது சீராக வரும். மாடு வாங்கும் பொழுது கால்நடை மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
மாட்டுக்கொட்டகை அவரவர் வசதி வாய்ப்புகளுக்கு தகுந்தாற்போல் பனை, தென்னை ஓலை மூங்கில் கொண்டு அமைக்கலாம் அல்லது செங்கல், சிமிண்ட், ஆஸ்பெஸ்டாஸ் அலுமினியம் கூரையுடன் கூடிய கட்டிடமாகவும் அமைக்கலாம். கொட்டகையின் நீளம் கிழக்கு மேற்காக இருக்குமாறு அமைக்க வேண்டும். கொட்டகையைச் சுற்றி மாடுகள் காலாற உலாவர திறந்தவெளிபரப்பு இருத்தல் நன்று. கூரையின் உயரம் 220 செ.மீ. இருந்தால் போதுமானது ஆகும்.
சரிவிகித உணவும் நல்ல பராமரிப்பும் அளிக்கப்பட்ட கலப்பின கிடாரிக் கன்றுகள் 12 முதல் 18 மாத வயதில் சுமார் 200 கிலோ உடல் எடையை அடைந்து பருவ வயதை எட்டுகிறது. இரண்டு வயதிற்குள் கன்றுகள் சுமார் 200 கிலோ உடல் எடையை எட்டி சரியான தருணத்தில் இனப்பெருக்கம் செய்தால் அது மூன்று வயதிற்குள் முதல் கன்றை ஈனும். இந்த கால இடைவெளி எவ்வளவு தள்ளிப்போகிறதோ அவ்வளவு நாட்கள் கன்று பிறப்பு தள்ளிப்போகும். அதனால் நாட்கள் தள்ளிப்போய் பண்ணையாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும்.
சினைப்பருவ காலங்களில் கிடேரி பசு அமைதியாக இருக்காது. அடிக்கடி அடிவயிற்றிலிருந்து கத்தும். அருகில் உள்ள மாடுகள் மீது தாவும். மேலும் பிற மாடுகள் தன்மீது தாவினால் அசையாது நின்று அனுமதிக்கும். பிறப்புறுப்பு சிவந்து தடித்திருக்கும். தீவனம் உண்ணும் அளவு குறையும். கண்ணாடி போன்ற நிறமற்ற சளி மாதிரியான திரவம் பசுவின் பிறப்புறுப்பிலிருந்து வடியும்.
காலை நேரத்தில் சினை அறிகுறிகள் தென்பட்டால் மாலை வேளையிலும், மாலை அல்லது இரவு நேரத்தில் தென்பட்டால் அடுத்தநாள் காலையிலும் கருவூட்டல் செய்வது சிறந்தது. கருவூட்டல் செய்த மாடுகளை மூன்றாவது மாதத்தில் கால்நடை மருத்துவரிடம் பரிசோதனை செய்து சினையை உறுதி செய்ய வேண்டும்.
கன்று பிறந்தவுடன் மூக்கு, வாயைச் சுற்றியுள்ள சளி போன்ற திரவத்தை காய்ந்த துணியால் நன்கு துடைக்கவும். கன்றின் பின்னங்காலை பிடித்து தூக்கி மூக்கில் உள்ள சளியை ஒழுகச் செய்து அப்புறப்படுத்த வேண்டும். மூச்சுவிட சிரமப்பட்டால் மார்பை அழுத்தியோ அல்லது வாயை திறந்து நாக்கை விரலால் தடவியோ மூச்சுவிடும் படி செய்யலாம். தொப்புள் கொடியை கன்றின் தொப்புளிலிருந்து 2 அங்குல தொலைவில் நூலினால் கட்டிவிட்டு சுத்தமான கத்தரியால் வெட்டி முனையில் டிங்ஞ்சர் அயோடின் திரவத்தை தடவவேண்டும். கன்று பிறந்த அரைமணி நேரத்திற்குள்ளாக சீம்பால் குடிக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். கன்று பிறந்த ஒரு வாரத்திற்குள் குடற்புழு நீக்க மருந்து கொடுத்து பிறகு 6 மாத வயது வரை மாதம் ஒரு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். 6 மாதங்களுக்கு பிறகு 3 மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். கன்றுகளை பேன் மற்றும் மாட்டு ஈ போன்ற புற ஒட்டுண்ணிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும்.
அடர்தீவனத்தில் கால்நடைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் சரிவிகிதத்தில் இருக்க வேண்டும். கால்நடைகள் விரும்பி உண்ணும் பொருளாகவும் விலை மலிவாகவும் இருத்தல் நன்று. அடர்தீவனக்கலவையில் 100 கிலோ தயாரிக்க கீழ்க்கண்ட விகிதத்தில் பொருட்களை கலந்து தயாரிக்கலாம். தானிய வகைகள் - 35 கிலோ ( மக்காச்சோளம் அல்லது கம்பு அல்லது சோளம் ), புண்ணாக்கு வகைகள் - 25 கிலோ ( கடலைப்புண்ணாக்கு அல்லது எள்ளுப்புண்ணாக்கு ), தவிடு வகைகள் - 37 கிலோ ( அரிசித்தவிடு அல்லது கோதுமை தவிடு ), தாது உப்புக்கள் - 2 கிலோ ( அக்ரிமின் அல்லது சப்ளிவிட் - மருந்துவ கடைகளில் கிடைக்கும் ), சாதாரண உப்பு – 1 கிலோ ( சாப்பாடு உப்பு ).
பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதன் மூலம் செலவை குறைத்து பண்ணையை இலாபகரமாக நடத்த இயலும். பசுந்தீவனம் அதிக நார் மற்றும் புரதசத்தை தன்னுள் கொண்டிருக்கிறது. பல்லாண்டு தீவனப்புல் வகை – கம்பூ நேப்பியர் வீரியப்புல் ( கோ-1, கோ-3, கோ-4 ), கினியா புல், கொழுக்கட்டைப்புல், எருமைப்புல். தானியப்பயிர்கள் - தீவனச்சோளம், கம்பு, மக்காச்சோளம். பயறு வகை தீவனம் - வேலிமசால், காராமணி, குதிரைமசால், முயல்மசால், சணப்பை. தீவன மரங்கள் - சவுண்டல், அகத்தி, கிளைரிசிடியா.
தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க – கோமாரி நோயிலிருந்து பாதுகாக்க முதலில் 4 மாத வயதில் பின்பு 6 மாதத்திற்கு ஒருமுறை தடுப்பூசி போடலாம். சப்பை நோயிலிருந்து பாதுகாக்க முதலில் 6 மாத வயதில் பின்பு ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி போடலாம். தொண்டை அடைப்பான் நோயிலிருந்து பாதுகாக்க முதலில் 6 மாத வயதில் பின்பு ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி போடலாம். அடைப்பான் நோயிலிருந்து பாதுகாக்க முதலில் 6 மாத வயதில் பின்பு ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி போடலாம். ( நோயுள்ள பகுதிகளில் மட்டுமே இத்தடுப்பூசி போட வேண்டும் ). மேலும் விபரங்களுக்கு:-
உதவி பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
சேலம்.
தொலைபேசி 0427-2410408
தொகுப்பு:
முனைவர் து.ஜெயந்தி
முனைவர் ப.ரவி
மருத்துவர் என்.ஸ்ரீபாலாஜி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
- நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட மத்திய அரசு உறுதி: இந்தியா, உலகின் 3 - வது பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது பார்லி., கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி பெருமிதம்
- நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட மத்திய அரசு உறுதி: இந்தியா, உலகின் 3 - வது பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது பார்லி., கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி பெருமிதம்
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
அடுத்த 2 மாதங்களில் மாநாடு நடத்த த.வெ.க. தலைவர் விஜய் திட்டம்
28 Jan 2026சென்னை, தேர்தல் நெருங்கும் நிலையில் அடுத்த 2 மாதங்களில் மாநாடு நடத்த த.வெ.க. தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அஜித் பவார் மரணம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
28 Jan 2026சென்னை, மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏ.டி.ஜி.பி. ஜெயராம் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து
28 Jan 2026சென்னை, ஏ.டி.ஜி.பி. ஜெயராம் மீதான சஸ்பென்ட் உத்தரவை தமிழக உள்துறை ரத்து செய்துள்ளது.
-
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: ராகுல் காந்தி - கனிமொழி சந்திப்பு
28 Jan 2026புதுடெல்லி, டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியுடன் தி.மு.க. எம்.பி. கனிமொழி சந்தித்து பேசினாார்.
-
தமிழ்நாட்டில் பா.ஜ. ஆதரவு சக்திகளுக்கு வாக்கு இல்லை: சபாநாயகர் அப்பாவு பேச்சு
28 Jan 2026நெல்லை, த.வெ.க.வும் பா.ஜ.க.வும் இணைந்து நாடகம் ஆடுகிறார்கள் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
-
விமான விபத்தில் டெல்லியை சேர்ந்த இரு விமானிகள் பலி
28 Jan 2026புனே, மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழந்த விமான விபத்தில், அந்த விமானத்தை இயக்கிய பைலட்டுகள் சுமீத் கபூர் , ஷாம்பவி பதக் ஆகியோரும் உயிரிழந்தனர்.
-
வடமாநில குடும்பம் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
28 Jan 2026சென்னை: சென்னையில் வடமாநில குடும்பம் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் வெளியிட்ட ஐந்து அறிவிப்புகள்
28 Jan 2026சென்னை: கும்பகோணம் அருகே தாராசுரம் பைபாஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிக் லீக் மாநாட்டில் முதல்வர் உரையாற்றினார்.
-
விமானம் விபத்தில் சிக்கியது எப்படி? நேரில் பார்த்தவர் அதிர்ச்சி தகவல்
28 Jan 2026மும்பை, மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் விமானம் விபத்துக்குள்ளானது பற்றி நேரில் பார்த்தவர் விளக்கம் அளித்துள்ளார்.
-
கைக்கடிகாரம், ஆபரணங்களை வைத்து அடையாளம் காணப்பட்ட அஜித் பவார் உடல்
28 Jan 2026மும்பை, உயிரிழந்த அஜித் பவாரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அஜித் பவார் உயிரிழப்பு: ஜனாதிபதி முர்மு, பிரதமர் இரங்கல்
28 Jan 2026புதுடெல்லி, விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவாருக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க. ஆட்சிக்கு வந்த 1,728 நாட்களில் 4,000 திருக்கோவில்களில் குடமுழுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
28 Jan 2026சென்னை: தி.மு.க. ஆட்சிக்கு வந்த 1,728 நாட்களில் 4,000 திருக்கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க. கூட்டணியில் இணையுமாறு காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்தார் விஜய் தந்தை
28 Jan 2026சென்னை, தமிழக அரசியல் சூழலில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், தமிழ வெற்றிக் கழகம் (த.வெ.க.) கூட்டணியில் இணைய காங்கிரஸ் கட்சிக்கு, நடிகர் விஜய்யின் தந்தையும் இ
-
விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழப்பு: விபத்து சம்பவம் குறித்து முறையான விசாரணை தேவை: மம்தா பானர்ஜி
28 Jan 2026மும்பை, விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்த நிலையில், விமான விபத்து சம்பவம் குறித்து முறையான விசாரணை தேவை என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு ரூ. 7.85 லட்சம் நிதியுதவி துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
28 Jan 2026சென்னை, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.7.85 லட்சம் நிதியுதவியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
-
அஜித் பவார் உயிரிழப்பு: ராகுல் காந்தி இரங்கல்
28 Jan 2026மும்பை, விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவாருக்கு காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
சட்டசபை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு: தலைமை தேர்தல் ஆணைய குழு அடுத்த மாதம் தமிழகம் வருகை
28 Jan 2026சென்னை, சட்டசபை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணைய குழு அடுத்த மாதம் தமிழகம் வருகிறது.
-
அஜித் பவார் விமான விபத்து சம்பவம் குறித்து விசாரணை துணை முதல்வர் ஷிண்டே அறிவிப்பு
28 Jan 2026மும்பை, அஜித் பவார் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது எப்படி என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்து உள்ளார்
-
பிரச்சாரத்திற்கு சென்று போது நிகழ்ந்த சோகம்: மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் பலி
28 Jan 2026மும்பை: மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் புனேவில் நடந்த பிரச்சார கூட்டத்திற்கு விமானத்தில் சென்ற போது விமானம் விபதுக்குள்ளானதில் உயிரிழந்தார்.
-
இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் ஒரே மாநிலம் தமிழகம்: தமிழ்நாடு அமைதியாக இருப்பது சிலரின் கண்களை உறுத்துகிறது இ.யூ.மு.லீக் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
28 Jan 2026சென்னை: இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் ஒரே மாநிலம் தமிழகம்தான் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அமைதியாக இருப்பது சிலரின் கண்களை உறு
-
அஜீத் பவார் மறைவு எதிரொலி: மகாராஷ்டிரா மாநிலத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
28 Jan 2026மும்பை, மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் மறைவையொட்டி, மாநிலம் முழுவதும் நேற்று பொது விடுமுறை அளித்து முதல்வர் தேவேந்திர ஃபட்னாவீஸ் உத்தரவிட்டுள்ளர்.
-
இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை ஜனாதிபதியின் உரை பிரதிபலிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
28 Jan 2026புதுடெல்லி, பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரை இந்தியாவின் வளர்ச்சிப் பயணம், எதிர்காலத்திற்கான ஒரு தெளிவான திசையைக் காட்டுவதாகப் பிரதமர் நரேந்திர
-
நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட மத்திய அரசு உறுதி: இந்தியா, உலகின் 3 - வது பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது பார்லி., கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி பெருமிதம்
28 Jan 2026புதுடெல்லி: உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்த ஜனாதிபதி திரெளபதி முர்மு, நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட மத்திய அரசு உறுத
-
நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட மத்திய அரசு உறுதி: இந்தியா, உலகின் 3 - வது பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது பார்லி., கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி பெருமிதம்
28 Jan 2026புதுடெல்லி: உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்த ஜனாதிபதி திரெளபதி முர்மு, நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட மத்திய அரசு உறுத
-
இன்றைய நாள் எப்படி?
28 Jan 2026- காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் ரதம்
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் காலை எடுப்பு தேர் இரவு சப்தாவைணம்


