எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு மாநகராட்சி, பாலக்காட்டூர், சூரியம்பாளையம் மண்டலம் 1 பகுதியில் தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியம் மூலம் இன்று (19.01.2017) மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 761 வீடுகள் ரூ.15 கோடியே 98 இலட்சம் மதிப்பீட்டிலும், பேரூராட்சி பகுதிகளில் 1,049 வீடுகள் ரூ.22.03 கோடி மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் 1,810 வீடுகள் ரூ.38.01 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கு மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.வி.இராமலிங்கம் (ஈரோடு மேற்கு) கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு) ஆகியோர் முன்னிலையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் மற்றும் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கினார்கள்.
இவ்விழாவில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது,
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளை வழங்கியுள்ளார்கள். இத்திட்டம் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படாமல், தமிழ்நாட்டில் தான் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தியுள்ள்ளார்கள். பள்ளி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி, நோட்டு புத்தகங்கள், 4 செட் சீருடை, கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்தும் விலையில்லாமல் வழங்கியுள்ளார்கள். சமூக நலத்துறையின் மூலம் ஏழை, எளிய பெண்களின் திருமணத்திற்கு வழங்கப்பட்டு வந்த 4 கிராம் தங்கத்தினை 8 கிராமாக வழங்கியவர் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா .
அதேபோல் வீடுகளுக்கு 100 யூனிட் வரையிலும், கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் வரையிலும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் வரையிலும் இலவச மின்சாரம் வழங்கியுள்ளார்கள். ஏழை, எளியோர் அனைவருக்கும் வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் இத்திட்டமானது செயல்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஏழை, எளிய மக்கள் இத்திட்டத்தினை நன்கு பயன்படுத்தி வாழ்வில் மேலும் உயர வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.
இவ்விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்ததாவது,
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளார்கள். அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு புதிய குடியிருப்பு கட்ட நிதியுதவி வழங்கப்படும். குடிசைப்பகுதிகள் மற்றும் இதர பகுதிகளில் உள்ள குடிசைகளில் உள்ள குடும்பங்கள் தாங்கள் வாழும் இடத்தின் நில உரிமத்திற்கான ஆவணம் உடையவர்களாக இருப்பின் பயனாளிகள் தாமாக வீடுகளை கட்டுதல் திட்டத்தின் கீழ் தகுதி உடையவர்களாவர். தாங்கள் வசிக்கும் மனைக்கான பட்டா இருந்தால் போதுமானதாகும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பயனாளிகள் தங்களது பகுதியிலுள்ள தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய அலுவலகத்தினை அணுகி அதற்கான மனுவினை அளிக்கும் பட்சத்தில் அப்பகுதிக்கு ஒருங்கிணைந்த வீட்டுவசதி திட்டம் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்ட பிறகு இத்திட்டத்தின்கீழ் வீடுகள் கட்ட மத்திய அரசால் ரூ.1.50 இலட்சம் மற்றும் மாநில அரசால் ரூ.60,000ஃ- மொத்தம் மானியமாக ரூ.2.10 இலட்சம் வழங்கப்பட்டும். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் தொகை 4 தவணையாக அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். பயனாளிகள் வீட்டின் அடித்தளம் அமைத்தவுடன் முதல் தவணைத் தொகையாக ரூ.50,000ஃ-, கதவு மற்றும் ஜன்னல் மேல்மட்டம் கட்டி முடித்தவுடன் 2வது தவணைத்தொகையாக ரூ.50,000ஃ-, கான்கிரீட் மேற்கூரை முடித்தவுடன் 3-வது தவணைத்தொகையாக ரூ.50,000ஃ-, அனைத்து கட்டுமான பணிகளும் கட்டி முடித்தவுடன் 4-வது தவணைத்தொகையாக ரூ.60,000ஃ- என மொத்தம் ரூ.2.10 இலட்சம் வழங்கப்படும். பயனாளிகள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் வீடுகளை கட்டிக்கொண்டு வாழ்வாங்கு வாழ வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் மற்றும் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 761 வீடுகள் ரூ.15.98 கோடி மதிப்பீட்டிலும், பேரூராட்சி பகுதிகளில் 1,049 வீடுகள் ரூ.22.03 கோடி மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் 1,810 வீடுகள் ரூ.38.01 கோடி மதிப்பீட்டில் கட்டிட பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் வே.பொ.சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி), இ.எம்.ஆர்.ராஜா(எ)கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் (அந்தியூர்), மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஷ், வருவாய் கோட்டாட்சியர் இர.நர்மதாதேவி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவர் பி.சி.இராமசாமி, தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலை தலைவர் எம்.ஜி.பழனிசாமி, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் ஏ.ஆர்.ஜெகதீசன், மாவட்ட கூட்டுறவு அச்சுக்கூட தலைவர் எஸ்.எஸ்.சித்தையன், தமிழ்நாடு குடிசைபகுதி மாற்று வாரிய மேற்பார்வை பொறியாளர் வெ.சுப்பிரமணியன் (கோவை சரகம்), கண்காணிப்பு பொறியாளர் வி.சுப்பிரமணியன் (ஈரோடு), நிர்வாக பொறியாளர் கே.ஜி.நஞ்சப்பன், உதவி பொறியாளர் தமிழரசு, உதவி செயற்பொறியாளர் டி.ஜெயராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
புதுப்பெண் அக்கா கணவருடன் ஓட்டம்
03 Nov 2025கோவை, திருமணம் ஆன 4-வது நாளில் கணவரை உதறிவிட்டு புதுப்பெண் அக்கா கணவருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தெரு நாய்கள் தொடர்பான வழக்கில் வரும் 7-ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
03 Nov 2025டெல்லி, தெரு நாய்கள் தொடர்பான வழக்கில் வரும் 7-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-11-2025.
03 Nov 2025 -
பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத அரசு வெட்கப்பட வேண்டும்: த.வெ.க.
03 Nov 2025சென்னை: கோவையில் கல்லூரி மாணவியின் நண்பரை தாக்கி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது.
-
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்.-க்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. மனு தாக்கல்
03 Nov 2025புதுடெல்லி, தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்.-க்கு தடை கோரி தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
03 Nov 2025சென்னை, சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
-
எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து அச்சப்பட தேவையில்லை: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி
03 Nov 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.
-
அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்: மூத்த அமைச்சர்கள் தலைமையில் நவ. 6ல் அனைத்துக்கட்சி கூட்டம்
03 Nov 2025சென்னை, தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கான விதிமுறைகளை வகுக்க மூத்த அமைச்சர்கள் தலைமையில்
-
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: நயினார் நாகேந்திரன் கண்டனம்
03 Nov 2025சென்னை, தி.மு.க. ஆட்சியில் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகிறார்கள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
சமூக வலைத்தளங்களை பயன்படுத்த சிறார்களுக்கு தடை விதிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
03 Nov 2025புது டெல்லி, நாட்டில் உள்ள 14 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்க மறுத்து
-
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 35 பேரை விடுவிக்க த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்
03 Nov 2025சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி தமிழக மீனவர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,அவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.வெ.க.
-
மகளிர் உலகக்கோப்பை: அதிக ரன்கள் குவித்த, விக்கெட் எடுத்த டாப்-5 வீராங்கனைகள்
03 Nov 2025மும்பை: நடந்து முடிந்த மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் குவித்த, விக்கெட் எடுத்த டாப்-5 வீராங்கனைகள் பட்டியல் வெளியாகியுள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வின் எந்த சதித்திட்டங்களும் எடுபடாது: தருமபுரி திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
03 Nov 2025தருமபுரி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி என்ற பெயரில் தேர்தல் ஆணையம் சதிச்செயலில் ஈடுபட்டு வருகிறது என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் பா.ஜ
-
இந்தியாவின் சிறந்த முதல்வர் யார்? மு.க.ஸ்டாலின் பெயரை கூறிய தேஜஸ்வி யாதவ்
03 Nov 2025பாட்னா: இந்தியாவின் சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று தேஜஸ்வி யாதவ் கூறினார்.
-
ஐ.சி.சி. உலகக்கோப்பையை வென்று தோனி, கபில் தேவ் வரிசையில் இணைந்த ஹர்மன்பிரீத் கவுர்..!
03 Nov 2025மும்பை: 13-வது ஐ.சி.சி.
-
தெலுங்கானா விபத்தில் 24 பேர் பலி: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
03 Nov 2025டெல்லி: தெலுங்கானா மாநிலத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
பீகாரில் பேசியதை தமிழகத்தில் பேச பிரதமர் மோடிக்கு தைரியம் உள்ளதா? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
03 Nov 2025தர்மபுரி, பீகாரில் பேசியதை தமிழ்நாட்டில் பேச பிரதமர் மோடிக்கு தைரியம் இருக்கிறதா? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
கிராந்தி கௌட்டுக்கு ரூ.1 கோடி
03 Nov 2025மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி கோப்பையை வென்று சாதனைப்படைத்துள்ள
-
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை தப்பியோடிய கும்பலுக்கு போலீஸ் வலை
03 Nov 2025கோவை: கோவையில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
-
தகுதியான வாக்காளர்களை கண்டறிய தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் இன்று தொடக்கம்
03 Nov 2025சென்னை, தகுதியான வாக்காளர்களை மட்டும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற செய்ய தமிழகம் முழுவதும் 234 சட்டசபை தொகுதிகளிலும் இன்று முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை வாக்காளர்களை கண
-
விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை எப்போது..? துணை முதல்வர் உதயநிதி விளக்கம்
03 Nov 2025சென்னை: விடுபட்டவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
பவதாரிணி நினைவாக இசைக்குழு: இளையராஜா
03 Nov 2025சென்னை: பவதாரிணி நினைவாக இசைக்குழுவை இசையமைப்பாளர் இளையராஜா அறிமுகம் செய்தார்.
-
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் 35 தமிழக மீனவர்கள் கைது
03 Nov 2025சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 35 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அ.தி.மு.க.விலும் குடும்ப அரசியல்: செங்கோட்டையன் குற்றச்சாட்டு
03 Nov 2025சென்னை: அ.தி.மு.க.விலும் குடும்ப அரசியல் உள்ளதாக செங்கோட்டையன் குற்றச்சாட்டியுள்ளார்.
-
தமிழக மீனவர்களை விடுவிக்க தூதரக நடவடிக்கைகள் தேவை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
03 Nov 2025சென்னை, இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்கு உடனடியாக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய வ


