எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,அக்.- 13 - கூடங்குளம் அணுமின்நிலைய விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக பதில் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் தொழில் வளர்ச்சி அதிகமாகிக்கொண்டியிருப்பதாலும் மக்களின் மின்சார தேவை அதிகரித்து வருவதாலும் மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நமது நாட்டில் அனல் மின்சாரம் மற்றும் நீர்மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பானது தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இல்லை. இதனை கருத்தில் கொண்டும் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துடனும் இந்தியா-ரஷ்யா இடையே கடந்த 1980-ம் ஆண்டுகளில் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி நெல்லைமாவட்டம் கடல்பகுதியையொட்டியுள்ள கூடங்குளத்தில் 3-கட்ட அணுமின்சார உற்பத்தி நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதில் முதல் கட்ட பணி முடிந்து அணுமின்சார உற்பத்தியை தொடங்க இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும்பட்சத்தில் அந்த அணுமின் உற்பத்தி நிலையத்தால் பாதுகாப்பு இல்லை. மக்களின் உயிருக்கு போராட்டம் என்று கருதி அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆரம்பத்தில் போராட்டம் சாதாரணமாக இருந்தது. ஆனால் அதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால் இந்த போராட்டம் வலுவடைந்து ஒரு லட்சம் பேர் சேர்ந்து சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் சூழ்நிலையை உருவாக்கியது. அப்போதுதான் மத்திய அரசு கொஞ்சம் நினைத்து பார்க்கத்தொடங்கியது. மேலும் இந்த போராட்டம் குறித்து மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி, மக்களின் பாதுகாப்பு குறித்து பிரதமருக்கு விளக்கினார். மேலும் போட்டக்குழுவுடன் மத்திய அரசு பிரதிநிதியும் மத்திய அமைச்சருமான நாராயணசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பும் பின்பும் முதல்வர் ஜெயலலிதாவை நாராயாணசாமி சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கையை ஏற்று தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தினர். கூடங்குளம் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்தநிலையில் முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருப்பதாவது:-
கூடங்குளம் அணுமின் நிலையம் மூடப்பட்டால் மின்சார பற்றாக்குறை ஏற்பட்டு தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படும். கூடங்குளம் அணுமின் நிலைய பணிகள் தொடர ஆதரவு கொடுக்குமாறு முதல்வர் ஜெயலலிதாவை கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. அதனால் மின்சாரத்தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் போகின்றது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள இரண்டு உலைகளின் மூலம் 2 ஆயிரம் மெகாவட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். அதில் 925 மெகாவட் தமிழகத்திற்கு கொடுக்கப்படும். ஒருவேளை இந்த திட்டத்தை கைவிட்டால் மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படும். அணுசக்தி மின்சாரத்திற்காக மக்களின் பாதுகாப்பை காற்றில் பறக்கவிடமாட்டோம். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்தான் அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கப்படும். கூடங்குளம் மக்களின் கவலை எங்களுக்கு புரிகிறது. அவர்களின் அச்சத்தை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அந்தப்பகுதி மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு எதிராக நாங்கள் எதுவும் செய்யமாட்டோம். இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
கூடங்குளம் அணுமின்சார நிலையம் தொடர்பாக மன்மோகன் சிங், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த 4 நாட்களில் எழுதி உள்ள 2-வது கடிதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடும் வரை போராடப்போவதாக போராட்டக்குழு அறிவித்துள்ள நிலையில் பிரதமர் இந்த பதில் கடிதத்தை எழுதியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
14 Feb 2026சென்னை, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
அசாமில் ரூ.100 கோடியில் 4.2 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட அவசர கால தரையிறங்கும் சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
14 Feb 2026திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.&n
-
புதுச்சேரியில் தே.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.
-
தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
-
தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!
14 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.
-
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்
14 Feb 2026சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
14 Feb 2026சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
14 Feb 2026டெல்லி, 1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவுதினம்: வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்
14 Feb 2026புல்வாமா, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
-
வார ராசிபலன்
14 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Feb 2026- திருவண்ணாமலை அரிபிரம்மாதியர் அடிமுடி தேடியருளிய லீலை, லிங்கோத்பவ தரிசனம்.
- மூங்கிலணை காமாட்சியம்மன் பெருந்திருவிழா
- காளஹஸ்தி, ஶ்ரீசைலம், திருவைக்காவூர், திருக்கோகர்ணம் கோவில்களில
-
இன்றைய நாள் எப்படி?
14 Feb 2026


