எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, அக். 19 - நதிகள் இணைக்கும் திட்டத்தால் பெரும் நிதிச்சுமை ஏற்படும் என்றால் அதற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப் போவதில்லை என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. நதி நீர் இணைப்பு தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. தலைமை நீதிபதி கபாடியா, நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், ஸ்வதந்தர் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் இருந்து நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார் ஆஜரானார். திட்டத்துக்கு ஆகும் செலவு பற்றிய அறிக்கையை இன்னும் ஒரு மாதத்திற்குள் தாக்கல் செய்யுமாறு அவரை நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.
நதிகள் இணைப்புக்கு எவ்வளவு செலவாகும்? நதிகள் இணைக்கும் போது நிலங்களும் கையகப்படுத்தப்படுமா? என்று நீதிபதிகள் கேட்டனர். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு எவ்வளவு செலவு பிடிக்கும் என்பதுதான் எங்களது கவலை. அதிக நிதிச்சுமை ஏற்படும் என தெரியவந்தால் இந்த திட்டத்தை ஆதரித்து தீர்ப்பு வழங்க மாட்டோம் என்பதையும் இப்போதே தெளிவுபடுத்த விரும்புகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. நதிகளை இணைக்கும் திட்டத்தை பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முன்வைத்தது. இதற்கான நடவடிக்கை குழுவை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அமைத்தார். இது தொடர்பான முதல் நிலை அறிக்கையை அந்த குழு தாக்கல் செய்தது. தீபகற்ப நதிகள் மற்றும் இமயமலை நதிகள் என இரு வகையாக பிரித்து இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு அக்குழு யோசனை தெரிவித்திருந்தது. தீபகற்ப நதிகளுக்கு இடையே 16 இணைப்புகளை ஏற்படுத்த அதில் திட்டமிடப்பட்டிருந்தது.
மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, வைகை, காவிரி போன்ற நதிகளின் உபரி நீரை திருப்பி விடுவது தொடர்பான பணிகள் பற்றி இந்த குழு விவரித்திருந்தது. கேரளம், கர்நாடகம், மேற்கு நோக்கி பாயும் ஆறுகளை கிழக்கு நோக்கி திருப்புவது, மேற்கு கடலோரம் பாயும் சிற்றாறுகளை இணைப்பது, யமுனை நதியில் கிளை நதிகளை இணைப்பது போன்றவையும் இத்திட்டத்தின் கூறுகளாகும்.
இமயமலை நதி இணைப்பு திட்டத்தின் கீழ் கங்கை, பிரம்மபுத்திரா, அவற்றின் கிளை நதிகளில் நீர்த்தேக்கங்களை அமைத்து பாசனத்திற்கும், மின்சார தயாரிப்புக்கும் பயன்படுத்த யோசனை தெரிவிக்கப்பட்டது. இந்த நீர்த்தேக்கங்கள் மூலம் வெள்ளப் பெருக்கையும் கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
நதிகளை இணைப்பதன் மூலம் 2050 ல் 16 கோடி ஹெக்டேர் நிலத்துக்கு பாசன வசதி செய்ய முடியும். பாரம்பரியமான பாசன முறைகள் மூலம் இந்த காலகட்டத்தில் அதிகபட்சமாக 14 கோடி ஹெக்டேர் பரப்புக்கு மட்டுமே பாசனம் செய்ய முடியும் என்பது நதிகள் இணைப்பு குழுவின் கருத்தாகும். சுமார் ரூ. 5 லட்சம் கோடி மதிப்பிலான இந்த திட்டம் 2016 ம் ஆண்டில் நிறைவடைய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான முதல் நிலை பணிகள் கூட இன்னும் தொடங்கப்படவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
- நீரிழிவு நோயாளிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்: குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை கண்டுபிடித்தது சென்னை ஐ.ஐ.டி.
- நமது இயக்கத்தை ஒழித்து விடலாம் என்று யார் யாரோ இன்று கிளம்பி இருக்கிறார்கள்: தி.மு.க.வை எந்த கொம்பனும் தொட்டுக்கூட பார்க்க முடியாது : திருமண விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகிறது 2 புயல் சின்னம் : வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும்
07 Nov 2025சென்னை : வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், வடகிழக்குப் பருவமழை தீவிரமட
-
பாதுகாப்பான அடைக்கலம் தந்த இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்தார் : வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா
07 Nov 2025டெல்லி : அடைக்கலம் தந்த இந்திய மக்களுக்கு நன்றி என்று வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி-20 தொடரை கைப்பற்றுமா இந்தியா? - இன்று கடைசி போட்டியில் பலப்பரீட்சை
07 Nov 2025பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை கைப்பற்றுமா இந்திய அணி கைப்பற்றுமா என்ற ஆவல் எழுந்துள்ள நிலையில் இன்று பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள கடைசி போட்டியில்
-
டி.ஜி.பி. நியமனம் விவகாரம்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
07 Nov 2025சென்னை : டி.ஜி.பி. நியமனம் விவகாரம்: 3 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-11-2025.
07 Nov 2025 -
வாக்குத்திருட்டை பீகாரிலும் நடத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
07 Nov 2025பாட்னா, வாக்குத்திருட்டை பீகாரிலும் நடத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது என்றும் டெல்லியில் வாக்களித்த பா.ஜ.க.
-
பீகார் தேர்தலில் அதிக வாக்குப்பதிவு: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
07 Nov 2025பாட்னா : பீகார் தேர்தலில் அதிக வாக்குப்பதிவு எங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
2-வது டெஸ்ட் முதல் இன்னிங்ஸ்: முன்னிலை பெற்றது இந்தியா 'ஏ'
07 Nov 2025பெங்களூரு : தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சிறப்பான பந்துவீச்சு மூலம் முதல் இன்னிங்சில் இந்தியா ஏ அணி முன்னிலை பெற்றுள்ளது.
-
பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் கைது
07 Nov 2025பெங்களூரு : பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் என்ஜினீயர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
-
எஸ்.ஐ.ஆர். விவகாரம்: தி.மு.க.வின் மனு மீது நவ. 11-ல் விசாரணை : சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
07 Nov 2025புதுடெல்லி : எஸ்.ஐ.ஆர்.
-
கரூர் கூட்ட நெரிசலில் ஆம்புலன்ஸை தாக்கிய வழக்கில் 8 பேருக்கு ஐகோர்ட் முன்ஜாமீன்
07 Nov 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசலில் ஆம்புலன்ஸை தாக்கிய வழக்கில் 8 பேருக்கு ஐகோர்ட் மதுரை கிளை முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
-
மெகா கூட்டணி குறித்து ஆர்.பி.உதயகுமார் தகவல்
07 Nov 2025மதுரை, மெகா கூட்டணி குறித்து ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
-
அரசு முறை பயணமாக இன்று முதல் 6 ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஜனாதிபதி முர்மு பயணம்
07 Nov 2025புதுடெல்லி : 6 ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரசு முறை பயணத்தை இன்று முதல் வரும் 13-ம் தேதி வரை ஜனாதிபதி திரெளபதி முர்மு மேற்கொள்ளவிருக்கிறார்.
-
சேலம் அருகே 2 மூதாட்டிகள் கொலை: குற்றவாளி ஒருவர் சுட்டுப்பிடிப்பு
07 Nov 2025சேலம் : சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே இரண்டு மூதாட்டிகளை கொலை செய்து கல்குவாரியில் வீசிவிட்டு சென்ற வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சு
-
தங்கம் விலை சற்று குறைவு
07 Nov 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.90,160-க்கு விற்பனையானது.
-
'வந்தே மாதரம்’ பாடலை காங்கிரஸ் கட்சி ஏந்திக்கொண்டது - மல்லிகார்ஜுன கார்கே
07 Nov 2025புதுடெல்லி : வந்தே மாதரம்’ பாடலை காங்கிரஸ் கட்சி பெருமையுடன் ஏந்திக்கொண்டது என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
எட்டயபுரம் அருகே விபத்து - 7 பேர் படுகாயம்
07 Nov 2025மதுரை : லாரி மீது பஸ் மோதி விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பலியான சம்பவத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
அடுத்த வருடம் இந்தியா வருகிறார் அதிபர் ட்ரம்ப்
07 Nov 2025வாஷிங்டன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடுத்த வருடம் இந்தியா வருகிறார்.
-
வங்கி ஊழியர்களுக்கு உள்ளூர் மொழி அவசியம்: நிர்மலா சீதாராமன் தகவல்
07 Nov 2025மும்பை : வங்கி ஊழியர்களுக்கு உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
நீரிழிவு நோயாளிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்: குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை கண்டுபிடித்தது சென்னை ஐ.ஐ.டி.
07 Nov 2025சென்னை : நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்துள்ளது.
-
புஸ்சி ஆனந்த் மீதான வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிப்பு
07 Nov 2025சென்னை : புஸ்சி ஆனந்த் மீதான வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ரஷ்யாவில் மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்பு
07 Nov 2025மாஸ்கோ : ரஷ்யாவில் காணமால் போன இந்திய மாணவரின் சடலமாக மீட்கப்பட்ட சமபவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
முதல்வர் பேசுவதால் யாருக்கும் பயன் இல்லை - அன்புமணி ராமதாஸ் பேச்சு
07 Nov 2025சென்னை, முதல்வர் பேசுவதால் யாருக்கும் பயன் இல்லை என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.
-
தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை வைத்து வாக்காளித்த பீகார் மக்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் வாழ்த்து
07 Nov 2025பாட்னா : தேர்தல் ஆணையத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து வாக்களித்ததாக பீகார் மாநில வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வா


