எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, அக். 19 - நதிகள் இணைக்கும் திட்டத்தால் பெரும் நிதிச்சுமை ஏற்படும் என்றால் அதற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப் போவதில்லை என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. நதி நீர் இணைப்பு தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. தலைமை நீதிபதி கபாடியா, நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், ஸ்வதந்தர் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் இருந்து நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார் ஆஜரானார். திட்டத்துக்கு ஆகும் செலவு பற்றிய அறிக்கையை இன்னும் ஒரு மாதத்திற்குள் தாக்கல் செய்யுமாறு அவரை நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.
நதிகள் இணைப்புக்கு எவ்வளவு செலவாகும்? நதிகள் இணைக்கும் போது நிலங்களும் கையகப்படுத்தப்படுமா? என்று நீதிபதிகள் கேட்டனர். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு எவ்வளவு செலவு பிடிக்கும் என்பதுதான் எங்களது கவலை. அதிக நிதிச்சுமை ஏற்படும் என தெரியவந்தால் இந்த திட்டத்தை ஆதரித்து தீர்ப்பு வழங்க மாட்டோம் என்பதையும் இப்போதே தெளிவுபடுத்த விரும்புகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. நதிகளை இணைக்கும் திட்டத்தை பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முன்வைத்தது. இதற்கான நடவடிக்கை குழுவை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அமைத்தார். இது தொடர்பான முதல் நிலை அறிக்கையை அந்த குழு தாக்கல் செய்தது. தீபகற்ப நதிகள் மற்றும் இமயமலை நதிகள் என இரு வகையாக பிரித்து இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு அக்குழு யோசனை தெரிவித்திருந்தது. தீபகற்ப நதிகளுக்கு இடையே 16 இணைப்புகளை ஏற்படுத்த அதில் திட்டமிடப்பட்டிருந்தது.
மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, வைகை, காவிரி போன்ற நதிகளின் உபரி நீரை திருப்பி விடுவது தொடர்பான பணிகள் பற்றி இந்த குழு விவரித்திருந்தது. கேரளம், கர்நாடகம், மேற்கு நோக்கி பாயும் ஆறுகளை கிழக்கு நோக்கி திருப்புவது, மேற்கு கடலோரம் பாயும் சிற்றாறுகளை இணைப்பது, யமுனை நதியில் கிளை நதிகளை இணைப்பது போன்றவையும் இத்திட்டத்தின் கூறுகளாகும்.
இமயமலை நதி இணைப்பு திட்டத்தின் கீழ் கங்கை, பிரம்மபுத்திரா, அவற்றின் கிளை நதிகளில் நீர்த்தேக்கங்களை அமைத்து பாசனத்திற்கும், மின்சார தயாரிப்புக்கும் பயன்படுத்த யோசனை தெரிவிக்கப்பட்டது. இந்த நீர்த்தேக்கங்கள் மூலம் வெள்ளப் பெருக்கையும் கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
நதிகளை இணைப்பதன் மூலம் 2050 ல் 16 கோடி ஹெக்டேர் நிலத்துக்கு பாசன வசதி செய்ய முடியும். பாரம்பரியமான பாசன முறைகள் மூலம் இந்த காலகட்டத்தில் அதிகபட்சமாக 14 கோடி ஹெக்டேர் பரப்புக்கு மட்டுமே பாசனம் செய்ய முடியும் என்பது நதிகள் இணைப்பு குழுவின் கருத்தாகும். சுமார் ரூ. 5 லட்சம் கோடி மதிப்பிலான இந்த திட்டம் 2016 ம் ஆண்டில் நிறைவடைய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான முதல் நிலை பணிகள் கூட இன்னும் தொடங்கப்படவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –05-02-2026
05 Feb 2026 -
ஆர்டர்லி முறையை ஒழிக்க குழு: சென்னை ஐகோர்ட்டில் அரசு வெளியிட்ட ஆணை தாக்கல்
05 Feb 2026சென்னை, ஆர்டர்லி முறையை ஒழிப்பது குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் குழு அமைத்து ஜனவரி 21-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறி அதற்கான அரசாணையை சென்னை நீதிமன்றத்த
-
நாடு முழுவதும் 18,727 அரசுப்பள்ளிகள் மூடல் பார்லி.யில் மத்திய அரசு தகவல்
05 Feb 2026டெல்லி, நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 18,727 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பா.ஜ.க.
-
என் மகன் குற்றவாளி இல்லை; வழக்கை விரைவில் முடிக்க வேண்டும்: அஜித்குமார் தாயார் பரபரப்பு பேட்டி
05 Feb 2026மதுரை, நிகிதாவை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் தாயார், என் மகன் குற்றவாளி இல்லை என்றும் வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் எ
-
தமிழ்நாடு பால்வளத்துறை சார்பில் ரூ. 101 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்தார்
05 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.2.2026) தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்ப
-
இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை தே.மு.தி.க.வில் விருப்ப மனு விநியோகம்
05 Feb 2026சென்னை, தே.மு.தி.க.வில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
-
ஒரு சவரன் தங்கம் விலை 4,640 ரூபாய் குறைந்தது: வெள்ளி கிலோ ரூ.20,000 சரிவு
05 Feb 2026சென்னை, சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 4,640 குறைந்து விற்பனையானது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ. 20,000 குறைந்து விற்பனையானது.
-
த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன்: செங்கோட்டையன் தகவல்
05 Feb 2026ஈரோடு, த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை: துணை தேர்தல் ஆணையர் பிப்.11-ல் தமிழகம் வருகை
05 Feb 2026சென்னை, வரும் 11-ம் தேதி துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தமிழகம் வர உள்ளார்.
-
எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள்: வருத்தம் தெரிவித்தார் பில்கேட்ஸ்
05 Feb 2026நியூயார்க், எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள் குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
-
இன்றைய ராசிபலன்
05 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
05 Feb 2026- சங்கரன் கோவில் கோமதியம்மன் தெப்பம்.
- இராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்க பல்லக்கில் புறப்பாடு.
- திருமயம் ஆண்டாள் பவனி
-
இன்றைய நாள் எப்படி?
05 Feb 2026


