எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அக்.23 - சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் கருப்பசாமி நேற்று மதியம் பிற்பகல் 2.20 மணியளவில் சிகிச்சை பலனின்றி மரணடைந்தார். அவரது உடல் சங்கரன்கோவிலில் இன்று அரசு முழு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. இதுகுறித்த விபரம் வருமாறு:-
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் அமைச்சர் கருப்பசாமி (57). இவருக்கு முத்துமாரி என்ற மனைவியும், சீதாலட்சுமி என்ற மகளும், மாரிசாமி என்ற மகனும் உள்ளனர். அமைச்சர் கருப்புசாமி சங்கரன் கோவில் தொகுதியில் இருந்து 4 முறை அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இரண்டு முறை அமைச்சராக இருந்துள்ளார்.
புற்று நோயால் பாதிக்கப்பட்ட அமைச்சர் கருப்பசாமி கடந்த சில மாதங்களாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மதியம் 2.30 மணியளவில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிர் பிரிந்தது.
அமைச்சர் கருப்புசாமி மறைவு குறித்து தகவல் அறிந்த, தமிழக முதல்வர் ஜெயலலிதா உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கருப்புசாமி மறைவால் வாடும் அவரது மனைவி, மகள், மகன், மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி, ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தணை செய்து கொண்டார்.
மறைந்த அமைச்சரின் உடலுக்கு மருத்துவமனையில் தமிழக அமைச்சர்கள் சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அமைச்சர் கருப்புசாமி மறைவு குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
கருப்பு சாமி பழகுவதற்கு மிகவும் எளிமையானவர், நகைச்சுவையாக பேசுபவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அ.தி.மு.க.தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இறங்கலை தெரிவித்து, கருப்புசாமி ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.
மறைந்த அமைச்சர் கருப்புசாமியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான சங்கரன் கோவில் எடுத்துச் செல்லப்பட்டது. இன்று அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
அமைச்சர் கருப்புசாமியின் மறைவையொட்டி தமிழக அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று தேசியக்கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும். அவரது உடல் தமிழக அரசின் சார்பில் முழு மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் கருப்புசாமியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அமைச்சர்கள், கட்சியின் நிர்வாகிகள் சங்கரன்கோவில் விரைந்துள்ளனர். அமைச்சரின் மறைவிற்கு அ.தி.மு.க. பிரமுகர்கள், அனைத்துக் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
விஜய் தலைமையில் வரும் 2-ம் தேதி த.வெ.க.வின் 3 - ம் ஆண்டு தொடக்க விழா
29 Jan 2026சென்னை, த.வெ.க.
-
அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.சை இணைக்க வாய்ப்பே இல்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி
29 Jan 2026சேலம், அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்க வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் வரலாறு காணாத உச்சம்: ஒரே நாளில் தங்கம் 1 கிராம் விலை 9,520 ரூபாய் உயர்வு: ஒரு சவரன் ரூ.1,34,400-க்கு விற்பனை
29 Jan 2026சென்னை, இந்நிலையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 அதிரடியாக உயர்ந்துள்ளது.
-
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
29 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் நாள்தோறும் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, நந்தனம் அரசுக் கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டினில்
-
இந்தியா-ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: ஏமாற்றமளிப்பதாக அமெரிக்கா கருத்து
29 Jan 2026வாஷிங்டன், இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ள ஐரோப்பிய யூனியனின் செயல் ஏமாற்றமளிப்பதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.
-
2027 நிதி ஆண்டில் ஜி.டி.பி. 7.2 சதவீதமாக இருக்கும்: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
29 Jan 2026புதுடெல்லி, 2025-26ம் நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.
-
ஜல்லிக்கட்டு போராட்ட விவகாரம்: 9 ஆண்டுகளுக்குப் பிறகு 57 பேர் விடுதலை
29 Jan 2026மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்ட விவகாரத்தில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட பெண்கள் உள்பட 57 பேரை விடுதலை செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
ரூ.822.70 கோடியில் பிராட்வே ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
29 Jan 2026சென்னை, பிராட்வே பேருந்து நிலையத்தில் 822 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கட்டப்படவுள்ள பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்
-
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் கால அவகாசம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
29 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தி.மு.க.
-
திருநெல்வேலி சட்டசபை தொகுதியில் நயினார் நாகேந்திரன் மீண்டும் போட்டி?
29 Jan 2026திருநெல்வேலி, என்னையும் திருநெல்வேலி தொகுதி மக்களையும் பிரித்து பார்க்க முடியாது. 2026-ல் திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க.வின் பட்டியலில் இடம்பெறும் என்று பா.ஜ.க.
-
த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயண விவரம் வெளியீடு: வருகிற 1-ம் தேதி முதல் தொடக்கம்
29 Jan 2026சென்னை, த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு சுற்றுப் பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. வருகிற 1-ம் தேதி முதல் தொடங்குகிறது.
-
13,080 நபர்களுக்கு வேலை அளிக்க 912.97 கோடி ரூபாய் முதலீட்டிற்கு 55 நிறுவனங்கள் தமிழக கைத்தறி, துணிநூல் துறையுடன் ஒப்பந்தம்: துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் கையெழுத்து
29 Jan 2026சென்னை, தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ஜவுளி உற்பத்தி சார்ந்த 55 நிறுவனங்கள் 13,080 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 912.97 கோடி ரூபாய்
-
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு மத்திய அரசு தயாராக உள்ளது: பிரதமர் நரேந்திர மோடி பேட்டி
29 Jan 2026புதுடெல்லி, 2028-ம் ஆண்டுக்குள் உலகின் 3-வது பெரிய பொருளாதாரம் மிக்க நாடாக மாறுவோம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான வ
-
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் ஒப்பந்தம்: இந்திய நிறுவனங்கள் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்: பிரதமர்
29 Jan 2026டெல்லி, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்த வாய்ப்பை இந்திய உற்பத்தியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எ
-
கேரளாவில் சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் 5 நாட்கள் இலவச சிகிச்சை: மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு
29 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் சாலை விபத்துகளில் சிக்கி காயமடைபவர்களுக்கு விபத்து நடந்த முதல் ஐந்து நாட்களுக்கு முற்றிலும் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று அம்மாநில நிதிநில
-
மதுரை விமான நிலையத்தின் தரம் மேலும் உயர்த்தப்படும்: பார்லி.யில் மத்திய அமைச்சர் உறுதி
29 Jan 2026புதுடெல்லி, மதுரை விமான நிலையத்தின் தரம் மேலும் உயர்த்தப்படும் என்று பாராளுமன்ற மக்களவையில் அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
-
தனக்கு ஸ்டாலின் என பெயர் வைத்தது ஏன்..? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
29 Jan 2026சென்னை, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் திரு.வி.க.
-
சென்னையில் 4 கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
29 Jan 2026சென்னை, சென்னையில் உள்ள 4 கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு மடிக்கணினியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
29 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் காலை தங்க பல்லக்கு
- திருச்சேறை சாரநாதர் சூர்ணாபிசேகம்
- கோவை பாலதண்டாயுதபானி மயில் வாகனம்
- ப்ழனி ஆண்டவர் வெள்ளி யானை வாகனம்
- குன்றக்குடி
-
இன்றைய ராசிபலன்
29 Jan 2026 -
இன்றைய நாள் எப்படி?
29 Jan 2026


