எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை வானொலியின் சான்றோர் சிந்தனை நிகழச்சியில் ஆன்மீக சொற்பொழிவாளர் திருவல்லிப்புத்தூர் டாக்டர் கே.பி.முத்துசாமி ஆற்றிய உரையை பார்ப்போம்!
அன்றாடம் நாம் சந்திக்கும் பெரும்பாலானவர்கள் மனதில் நிம்மதி இல்லை அதனால் இரவில் சரியாகத் தூங்கவும் முடியவில்லை. இறைவன் எனக்கு எல்லா வசதிகளைத் தந்தும் நிம்மதியைத் தரவில்லையே என்று புலம்புவதைக் கேட்கிறோம். நிம்மதி என்பது கடைச் சரக்கா? விலை கொடுத்து வாங்குவதற்கு. தினமும் கூலி வேலை செய்து அன்றாடம் ரூ. 200 சம்பாதிக்கும் ஒருவன் நான் நிம்மதியாக வாழ்கிறேன். அன்றாடம் என் கடமையைத் தவறாமல் செய்கிறேன். தர்மம் செய்கிறேன். சேமித்தும் வைக்கிறேன். அதனால் நான் நிம்மதியாக வாழ்கிறேன் என்றான். என் தாய், தந்தைக்கு உணவு கொடுத்து என் கடமையை ஒழுங்காகச் செய்கிறேன். என்வீட்டில் விதவையான தங்கையையும் அவளது பிள்ளையையும் பராமரித்து என்னால் இயன்ற தர்மத்தை செய்கிறேன். என்னுடைய இரண்டு பிள்ளைகளை வளர்த்து எனது எதிர்காலத்திற்கான சேமிப்பையும் செய்து நானும் என் மனைவியும் நிம்மதியாக வாழ்கிறேன் என்றான்.
நிம்மதியைத் தேடிச் சென்றவரிடம் ஒரு மகான் கூறினார். மனிதா உன் மனதிற்கு சில ரகசியங்கள் தெரியக்கூடாது. தெரிஞ்சா உன் நிம்மதி போய்விடும் என்றார். மனம் தேவையில்லாத சமயங்களில் தேவை இல்லாத சுமைகளைச் சுமப்பதும் இன்னொரு காரணம். ரயிலில் ஓடி வந்து ஏறியவன் தலையில் ஒரு மூட்டையை வைத்திருந்தான். ரயில் புறப்பட்டது. ஆனாலும் தன் மூட்டையை தலையில் இருந்து இறக்கவில்லை. காரணம் கேட்டபோது வேணாங்க, இந்த ரயில் என்னை மட்டும் சுமந்தா போதும், என்சுமையை நானே சுமந்துக்குவேன் என்றானாம். இது என்ன பைத்தியக்காரத்தனம். வாழ்க்கை என்பது ஒரு ரயில் பயணம் மாதிரிதான் பயணம் பூராவும் சுமந்து கொண்டே போகிறவர்கள் நிம்மதியாக வாழ முடியாது. தேவைப்படுகிறதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளணும். தேவை இல்லாதவற்றை மனதில் சுமையாக ஏற்றக்கூடாது.
எப்போதும் நிம்மதியாக வாழ்வதற்கு நம் முன்னோர்கள் சில வழிமுறைகளைச் சொன்னார்கள். உஷத்காலம் எனப்படும் அதிகாலை நேரத்தில் எழுந்து, இரு உள்ளங்கைகளையும் பார்த்து, பொறுமையின் சிகரமான பூமாதேவியை வணங்கி, நேற்று எனக்கு நல்ல தூக்கம் தந்து உதவினாய் இன்று காலையில் உன்னருளால் விழித்து எழுந்தேன். இன்றைய நாளில் நான் நல்லதையே நினைக்கவும், நல்லதையே செய்யவும், பிறருக்கு என்னால் இயன்ற உதவிகளைச் செய்து மகிழவும் என்னுடன் இருந்து வழி நடத்துவாயாக என்று இறைவனிடம் கையேந்துங்கள். அவன் இல்லை என்று மறுக்காமல் வேண்டியதை அருளுவான். நன்றாகத் தெளிவாகப் பேசுங்கள்.
பேசியபடி நடந்து காட்டுங்கள். வார்த்தை ஒன்று, வாழ்க்கை வேறு என இருக்காதீர்கள். கிடைக்கும் வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் முடிந்துபோன விஷயங்களைப் பற்றி எண்ணி வருந்தாதீர்கள். உங்களுக்குப் பிடித்தமான விஷயங்களைச் செய்ய அதற்கான நேரத்தை ஒதுக்குங்கள் சிறு குழுந்தைகளைப் போல வாழ்க்கையை நேசித்து அனுபவித்து வாழுங்கள். நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்! நரகத்தில் இடர்ப்போம் நடலையல்லோம்! ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்! என்று அப்பர் சுவாமிகள் அருளியதைப் போன்று வாழ்ந்தால் இன்பமே எந்நாளும் துன்பமில்லை. இனிது இனிது ஏகாந்தம் இனிது என்று நம்முன்னோர்கள் அருளியபடி தனிமையாக இருந்து இறைவனை தியானித்து மனத்தைக் கட்டுப்படுத்துங்கள்.
தினமும் ஒருவேளை உண்பவன் யோகி, இருவேளை உண்பவன் போகி, அதற்கு மேல் உண்பவன் ரோகி என்றார்கள் ஞானிகள். வயிறு நிரம்ப சாப்பிடாதீர்கள் வயிற்றில் கால்பாகம் காலியாக இருக்கட்டும். கண்ட நேரத்தில் தூங்காதீர்கள். குறிப்பிட்ட நேரத்தில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
மனதில் உறுதியையும், அமைதியையும் நிரப்புங்கள் எதிர்பாராது நடக்கும் நிகழ்வுகளை கண்டு பதட்டப்படாதீர்கள். மனதை அமைதியான நிலையில் வைத்து அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்து கொள்ளுங்கள். இரண்டாம் உலகப்போரில் எதிரிகளால் சுற்று வளைக்கப்பட்ட விஷயத்தை ஜெர்மன் படைத்தளபதி சொன்னதும், சிறிதும் பதட்டமின்றி சிரித்துக் கொண்டே மிகவும் நல்லது இனி நாம் எல்லாத் திசைகளிலும் தாக்குதல் நடத்தலாம் என்றாராம் ஹிட்லர்.
இது நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய நிகழ்வு. எனவே எங்கே நிம்மதி! எங்கே நிம்மதி! என்று தேடியலையாமல் அந்த நிம்மதி நம் மனத்தினுள்ளே தான் உள்ளது என்பதை உணர்ந்து வாழ்வோம் மன அமைதி அடைவோம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 4 days ago |
-
இளைஞர் மரண வழக்கில் கைதான 5 காவலர்கள் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு
01 Jul 2025சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
-
அரசின் மானியம் இல்லாவிட்டால்... எலான் மஸ்க்கை எச்சரித்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
01 Jul 2025வாஷிங்டன் : அரசின் மானியங்கள் இல்லாவிட்டால் டெஸ்லா சி.இ.ஓ., எலான் மஸ்க், அநேகமாக தென்னாப்பிரிக்கா திரும்பி விடுவார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
-
இஸ்ரேல் பிரதமர் அமெரிக்க பயணம்
01 Jul 2025டெல்அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரும் ஜூலை 7 ஆம் தேதியன்று அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தியா-அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ தகவல்
01 Jul 2025வாஷங்டன், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளார் என்றும் இந்தியா - அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் குறித்த அறி
-
எல்லை நிர்ணய விவகாரங்களில் இந்தியாவுடன் பேச தயார்: சீனா
01 Jul 2025பெய்ஜிங் : இந்தியாவுடன் எல்லை பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.
-
2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்: இங்கி.க்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?
01 Jul 2025பர்மிங்காம் : 2-வது டெஸ்ட் இன்று தொடங்கவுள்ள நிலைியல் வெற்றியே பெறாத மைதானத்தில் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி? என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசி
-
நடுவானில் கட்டுப்பாட்டை இழந்த ஏர் இந்தியா விமானம்
01 Jul 2025புதுடில்லி : அகமதாபாத் விமான விபத்தில் 270 பேர் உயிரிழந்த அடுத்த ஓரிரு நாட்களில் டில்லியில் இருந்து வியன்னா சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டு இருந
-
காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலில் 74 பொதுமக்கள் பலி
01 Jul 2025காசாமுனை : காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் 74 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.
-
பிறந்தநாளை முன்னிட்டு வெங்கையா நாயுடு, அகிலேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
01 Jul 2025சென்னை : முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் இருவருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து த
-
தொலைபேசி அழைப்பு கசிவு: தாய்லாந்து பிரதமர் ஷினவத்ராவை இடைநீக்கம் செய்தது நீதிமன்றம்
01 Jul 2025பேங்காக், கம்போடிய செனட் தலைவர் ஹன் சென் உடனான தொலைபேசி உரையாடல் கசிந்த விவகாரம் தொடர்பாக தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்நாட்டு நீதிமன்றம் இடைநீக்கம் செய
-
வரி மசோதா நிறைவேறினால் புதிய அரசியல் கட்சியை தொடங்குவேன்: மஸ்க்
01 Jul 2025நியூயார்க் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்துள்ள வரி மற்றும் செலவு மசோதாவுக்கு உலக பணக்காரரான எலான் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
-
பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவது தவிர வேறு எந்த விஷயத்திலும் பாக்.குடன் பேச்சு இல்லை : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம்
01 Jul 2025நியூயார்க் : பயங்கரவாத அமைப்புகளை இந்தியா இனி விட்டு வைக்காது என்றும் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தவிர வேறு எந்த விஷயத்திலும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை ந
-
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 7 பேர் கைது
01 Jul 2025இராமேசுவரம் : தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
சிவகாசி கோட்டாட்சியராக பாலாஜி பொறுப்பேற்ப்பு
01 Jul 2025விருதுநகர், சிகாசி கோட்டாட்சியராக மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் பாலாஜி பொறுப்பேற்றுக் கொண்டார்.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
01 Jul 2025சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 1) பவுனுக்கு ரூ.840 என அதிரடி ஏற்றம் கண்டு விற்பனையானது.
-
தகவல் கிடைத்தவுடன் திருப்புவனம் கோவில் காவலர் உயிரிழந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து விட்டோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
01 Jul 2025சென்னை : திருப்புவனம் கோவில் காவலர் உயிரிழந்த விவகாரத்தில் தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுத்துவிட்டோம். கைது நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
-
இ.பி.எஸ். வீட்டிற்கு செல்வீர்களா? - முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்
01 Jul 2025சென்னை : இ.பி.எஸ். வீட்டிற்குச் செல்வீர்களா? என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலினிடம் அளித்த பதிலளித்துள்ளார்.
-
தேசிய மருத்துவர்கள் தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
01 Jul 2025சென்னை : மருத்துவர்கள் போற்றுதலுக்குரியவர்கள் என்று தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ராமநாதபுரம் வரை தேசிய நெடுஞ்சாலையை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
01 Jul 2025புதுடில்லி : மதுரையில் இருந்து பரமக்குடி வரையிலுள்ள தேசிய நெடுஞ்சாலை 87-ஐ ராமநாதபுரம் வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-
தமிழகத்தில் 7-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
01 Jul 2025சென்னை : தமிழகத்தில் 7-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
படித்த வேலையில்லாத இளைஞர்களுக்காக வெற்றி நிச்சயம் திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார் : ரூ.12 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்க ஏற்பாடு
01 Jul 2025சென்னை : சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற "நான் முதல்வன்" திட்டத்தின் மூன்றாண்டு வெற்றி விழாவில் உலகத்தரம் வாய்ந்த முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மற்
-
வீடு, வீடாக சென்று பிரசாரம் ஏன்? அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
01 Jul 2025சென்னை, டிரெண்ட் மாறியதால் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரசாரம் மூலம் மக்களை வீடு, வீடாக சென்று சந்திக்க உள்ளோம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறி உள்ளார்.
-
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: மதுரை மாவட்ட நீதிபதி விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
01 Jul 2025மதுரை : திருப்புவனம் இளைஞர் லாக்அப் மரண வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி விசாரிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
காவலாளி அஜித் வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு: த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்
01 Jul 2025சென்னை, திருப்புவனம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் உயர் நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்ட