எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை வானொலியின் சான்றோர் சிந்தனை நிகழச்சியில் ஆன்மீக சொற்பொழிவாளர் திருவல்லிப்புத்தூர் டாக்டர் கே.பி.முத்துசாமி ஆற்றிய உரையை பார்ப்போம்!
அன்றாடம் நாம் சந்திக்கும் பெரும்பாலானவர்கள் மனதில் நிம்மதி இல்லை அதனால் இரவில் சரியாகத் தூங்கவும் முடியவில்லை. இறைவன் எனக்கு எல்லா வசதிகளைத் தந்தும் நிம்மதியைத் தரவில்லையே என்று புலம்புவதைக் கேட்கிறோம். நிம்மதி என்பது கடைச் சரக்கா? விலை கொடுத்து வாங்குவதற்கு. தினமும் கூலி வேலை செய்து அன்றாடம் ரூ. 200 சம்பாதிக்கும் ஒருவன் நான் நிம்மதியாக வாழ்கிறேன். அன்றாடம் என் கடமையைத் தவறாமல் செய்கிறேன். தர்மம் செய்கிறேன். சேமித்தும் வைக்கிறேன். அதனால் நான் நிம்மதியாக வாழ்கிறேன் என்றான். என் தாய், தந்தைக்கு உணவு கொடுத்து என் கடமையை ஒழுங்காகச் செய்கிறேன். என்வீட்டில் விதவையான தங்கையையும் அவளது பிள்ளையையும் பராமரித்து என்னால் இயன்ற தர்மத்தை செய்கிறேன். என்னுடைய இரண்டு பிள்ளைகளை வளர்த்து எனது எதிர்காலத்திற்கான சேமிப்பையும் செய்து நானும் என் மனைவியும் நிம்மதியாக வாழ்கிறேன் என்றான்.
நிம்மதியைத் தேடிச் சென்றவரிடம் ஒரு மகான் கூறினார். மனிதா உன் மனதிற்கு சில ரகசியங்கள் தெரியக்கூடாது. தெரிஞ்சா உன் நிம்மதி போய்விடும் என்றார். மனம் தேவையில்லாத சமயங்களில் தேவை இல்லாத சுமைகளைச் சுமப்பதும் இன்னொரு காரணம். ரயிலில் ஓடி வந்து ஏறியவன் தலையில் ஒரு மூட்டையை வைத்திருந்தான். ரயில் புறப்பட்டது. ஆனாலும் தன் மூட்டையை தலையில் இருந்து இறக்கவில்லை. காரணம் கேட்டபோது வேணாங்க, இந்த ரயில் என்னை மட்டும் சுமந்தா போதும், என்சுமையை நானே சுமந்துக்குவேன் என்றானாம். இது என்ன பைத்தியக்காரத்தனம். வாழ்க்கை என்பது ஒரு ரயில் பயணம் மாதிரிதான் பயணம் பூராவும் சுமந்து கொண்டே போகிறவர்கள் நிம்மதியாக வாழ முடியாது. தேவைப்படுகிறதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளணும். தேவை இல்லாதவற்றை மனதில் சுமையாக ஏற்றக்கூடாது.
எப்போதும் நிம்மதியாக வாழ்வதற்கு நம் முன்னோர்கள் சில வழிமுறைகளைச் சொன்னார்கள். உஷத்காலம் எனப்படும் அதிகாலை நேரத்தில் எழுந்து, இரு உள்ளங்கைகளையும் பார்த்து, பொறுமையின் சிகரமான பூமாதேவியை வணங்கி, நேற்று எனக்கு நல்ல தூக்கம் தந்து உதவினாய் இன்று காலையில் உன்னருளால் விழித்து எழுந்தேன். இன்றைய நாளில் நான் நல்லதையே நினைக்கவும், நல்லதையே செய்யவும், பிறருக்கு என்னால் இயன்ற உதவிகளைச் செய்து மகிழவும் என்னுடன் இருந்து வழி நடத்துவாயாக என்று இறைவனிடம் கையேந்துங்கள். அவன் இல்லை என்று மறுக்காமல் வேண்டியதை அருளுவான். நன்றாகத் தெளிவாகப் பேசுங்கள்.
பேசியபடி நடந்து காட்டுங்கள். வார்த்தை ஒன்று, வாழ்க்கை வேறு என இருக்காதீர்கள். கிடைக்கும் வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் முடிந்துபோன விஷயங்களைப் பற்றி எண்ணி வருந்தாதீர்கள். உங்களுக்குப் பிடித்தமான விஷயங்களைச் செய்ய அதற்கான நேரத்தை ஒதுக்குங்கள் சிறு குழுந்தைகளைப் போல வாழ்க்கையை நேசித்து அனுபவித்து வாழுங்கள். நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்! நரகத்தில் இடர்ப்போம் நடலையல்லோம்! ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்! என்று அப்பர் சுவாமிகள் அருளியதைப் போன்று வாழ்ந்தால் இன்பமே எந்நாளும் துன்பமில்லை. இனிது இனிது ஏகாந்தம் இனிது என்று நம்முன்னோர்கள் அருளியபடி தனிமையாக இருந்து இறைவனை தியானித்து மனத்தைக் கட்டுப்படுத்துங்கள்.
தினமும் ஒருவேளை உண்பவன் யோகி, இருவேளை உண்பவன் போகி, அதற்கு மேல் உண்பவன் ரோகி என்றார்கள் ஞானிகள். வயிறு நிரம்ப சாப்பிடாதீர்கள் வயிற்றில் கால்பாகம் காலியாக இருக்கட்டும். கண்ட நேரத்தில் தூங்காதீர்கள். குறிப்பிட்ட நேரத்தில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
மனதில் உறுதியையும், அமைதியையும் நிரப்புங்கள் எதிர்பாராது நடக்கும் நிகழ்வுகளை கண்டு பதட்டப்படாதீர்கள். மனதை அமைதியான நிலையில் வைத்து அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்து கொள்ளுங்கள். இரண்டாம் உலகப்போரில் எதிரிகளால் சுற்று வளைக்கப்பட்ட விஷயத்தை ஜெர்மன் படைத்தளபதி சொன்னதும், சிறிதும் பதட்டமின்றி சிரித்துக் கொண்டே மிகவும் நல்லது இனி நாம் எல்லாத் திசைகளிலும் தாக்குதல் நடத்தலாம் என்றாராம் ஹிட்லர்.
இது நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய நிகழ்வு. எனவே எங்கே நிம்மதி! எங்கே நிம்மதி! என்று தேடியலையாமல் அந்த நிம்மதி நம் மனத்தினுள்ளே தான் உள்ளது என்பதை உணர்ந்து வாழ்வோம் மன அமைதி அடைவோம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –05-02-2026
05 Feb 2026 -
நாடு முழுவதும் 18,727 அரசுப்பள்ளிகள் மூடல் பார்லி.யில் மத்திய அரசு தகவல்
05 Feb 2026டெல்லி, நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 18,727 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பா.ஜ.க.
-
ஆர்டர்லி முறையை ஒழிக்க குழு: சென்னை ஐகோர்ட்டில் அரசு வெளியிட்ட ஆணை தாக்கல்
05 Feb 2026சென்னை, ஆர்டர்லி முறையை ஒழிப்பது குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் குழு அமைத்து ஜனவரி 21-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறி அதற்கான அரசாணையை சென்னை நீதிமன்றத்த
-
என் மகன் குற்றவாளி இல்லை; வழக்கை விரைவில் முடிக்க வேண்டும்: அஜித்குமார் தாயார் பரபரப்பு பேட்டி
05 Feb 2026மதுரை, நிகிதாவை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் தாயார், என் மகன் குற்றவாளி இல்லை என்றும் வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் எ
-
தமிழ்நாடு பால்வளத்துறை சார்பில் ரூ. 101 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்தார்
05 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.2.2026) தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்ப
-
இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை தே.மு.தி.க.வில் விருப்ப மனு விநியோகம்
05 Feb 2026சென்னை, தே.மு.தி.க.வில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
-
ஒரு சவரன் தங்கம் விலை 4,640 ரூபாய் குறைந்தது: வெள்ளி கிலோ ரூ.20,000 சரிவு
05 Feb 2026சென்னை, சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 4,640 குறைந்து விற்பனையானது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ. 20,000 குறைந்து விற்பனையானது.
-
தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை: துணை தேர்தல் ஆணையர் பிப்.11-ல் தமிழகம் வருகை
05 Feb 2026சென்னை, வரும் 11-ம் தேதி துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தமிழகம் வர உள்ளார்.
-
த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன்: செங்கோட்டையன் தகவல்
05 Feb 2026ஈரோடு, த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள்: வருத்தம் தெரிவித்தார் பில்கேட்ஸ்
05 Feb 2026நியூயார்க், எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள் குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
05 Feb 2026- சங்கரன் கோவில் கோமதியம்மன் தெப்பம்.
- இராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்க பல்லக்கில் புறப்பாடு.
- திருமயம் ஆண்டாள் பவனி
-
இன்றைய நாள் எப்படி?
05 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
05 Feb 2026


