எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிப்பது மற்றும் மறுவாழ்வு அளிப்பது குறித்து, மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன், தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலெக்டர் இல.சுப்பிரமணியன், தெரிவித்ததாவது:
ஆலோசனைக் கூட்டம்
கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிக்க மாநில அளவில் செயல் திட்டம் உருவாக்கப்பட்டு, அது அரசால் அனுமதி அளிக்கப்பட்டு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் மூலம் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து, செயல்படுத்திட அரசாணை வழங்கப்பட்டுள்ளது. இந்த செயல் திட்டத்தினை நடைமுறைப்படுத்த மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் மற்றும் கோட்ட அளவிலும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறையினை ஒழிக்க இச்செயல் திட்டத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்துத் துறைகளும் தங்களது பணிகளை ஒருங்கிணைத்து செயல்பட்டு, கொத்தடிமை தொழிலாளர் முறையினை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.கொத்தடிமை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்களை பணிக்கு அழைத்துச் செல்லும் ஏஜன்டுகள் மீது காவல்துறை மூலமாக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அரசு சாரா நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்களை ஒழிக்க பாடுபடும் நிறுவனங்கள் அரசுடன் இணைந்து கொத்தடிமை தொழிலாளர் முறையினை ஒழிக்க செயலாற்ற வேண்டும்.
இச்செயல் திட்டத்தின் மூலம் கொத்தடிமை தொழிலாளர்களாக கண்டறியப்பட்டு, விடுவிக்கப்படும் தொழிலாளர்களுக்கு உடனடி மறுவாழ்வு நிவாரணமாக ரூ.20,000- வழங்கப்படுகிறது. மேலும் அவர்களுடைய மறுவாழ்விற்காக கொத்தடிமை தொழிலாளர்களுக்கு ரூ.1,00,000- வரையிலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொத்தடிமை தொழிலாளர்களாக கண்டறியப்பட்டால் ரூ.2,00,000-மும், அதிகமான இன்னலுக்கு ஆளாக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களுக்கு ரூ.3,00,000-மும் மறுவாழ்வு நிதியாக வழங்க அரசு அனுமதியளித்துள்ளது.மேலும், மீட்கப்படும் கொத்தடிமை தொழிலாளர்களுக்கு அரசால் இலவச வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டை, வங்கி கணக்கு மற்றும் குழந்தைகள் கல்வி கற்க இலவச கல்வி, அவர்களுடைய பணித்திறன் அதிகரிக்க திறன்வளர் பயிற்சி, வசிக்கும் இடங்களிலேயே வேலைவாய்ப்பு கிடைத்திட வழிவகை, மற்றும் சுதந்திரமாக வாழ அனைத்து வகையான மறுவாழ்வு திட்டங்களும் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்துத்துறை அலுவலர்களும் கொத்தடிமை தொழிலாளர்களின் மறுவாழ்விற்கு கிடைக்க வேண்டிய அனைத்து அரசின் திட்டங்களும் அவர்களுக்கு சென்றுசேர ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என கலெக்டர் இல.சுப்பிரமணியன், தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் ஜி.ராமு மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய நாள் எப்படி?
04 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
04 Feb 2026- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி பிரதிஷ்டா தினம்.
- சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- திருமயம் ஆண்டாள் எண்ணெய்க் காப்பு விழா தொடக்கம்.
-
இன்றைய ராசிபலன்
04 Feb 2026


