எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
மூக்கடைப்பு, தும்மல் நிற்க, சளி தீர, சுவாச நோய் அலர்ஜி, தைராய்டு பிரச்சனைகளுக்கு
- இழுப்பு தீர ;-- காக்கிரட்டான் விதையை நெயில் வறுத்து பொடி செய்து 5 அரிசி எடை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
- நீர் கோர்வை தீர ;-- கறிவேப்பிலையை பொடி செய்து சர்க்கரை சேர்த்து காலை,மாலை ஒரு கரண்டி சாப்பிட்டு வரலாம்.
- மேல் சுவாசம்,இருமல் தீர ;-- திருநீற்று பச்சிலை சாறை தேன் கலந்து சாப்பிட்டு வரவும்.
- இரைப்பிருமல் தீர ;-- நீர் முள்ளி விதை பொடியை ஒரு கிராம் பாலில் கலந்து சாப்பிட்டு வரவும்.
- தும்மல் நிற்க ;-- தூதுவளை பொடியுடன் மிளகுப் பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட குணமாககும்.
- மூச்சு வாங்கும் தொந்தரவு தீர ;-- தூதுவளை மாமருந்தாகும்.
- சுவாசக்கோளாறுகள் நீங்க ;-- தினந்தோறும் பிராணயாமம் செய்து வரலாம்.
- இளைப்பு தீர ;-- விளாமர கொழந்தை அரைத்து பாலில் ஒரு கிராம் சாப்பிடலாம்.
- மூச்சிறைப்பு,வீக்கம்,சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரசனைகளுக்கு தீர்வு ;-- ஆரஞ்சு நிற ஒளி தீர்வு கொடுக்கும்.
- இரைப்பு குணமாக ;-- தூதுவளைஇலை,வேர்,பூ,காய் ஆகியவற்றை கொதிக்க வைத்து கஷாயம் செய்து பாலில் சாப்பிட்டு வரவும்.
- மாந்த இழுப்பு குணமாக ;-- மூக்கிரட்டை வேர்,மிளகு உத்தாமணி சாறு ஆகியவற்றை விளக்கெண்ணையில் போட்டு காய்ச்சி குழந்தைகளுக்கு 2 மில்லி அளவு கொடுக்கலாம்.
- சளி தீர ;-- நத்தை சூரி இலை சாறை 15 மில்லி காலை,மாலை சாப்பிட சளி தீரும்
- மூச்சு வாங்குதல்,காது அடைத்தல்,காது மந்தம் விலக;-- தூதுவளை உண்பதால் குணமாகும்.
- மூக்கில் உள்ள புண் ஆற ;-- மஞ்சளை சுட்டு கரியாக்கி அதனுடன் வேப்பஎண்ணெய் கலந்து மைய அரைத்து தடவலாம்.
- மூக்கு சம்பந்தமான நோய் குணமாக;-- நாயுருவி செடி விதைகளை பொடி செய்து உட்கொள்ளலாம்
- மூச்சு திணறல் ;-- ஆடாதொடை இலை சாறை தேனில் கலந்து சாப்பிடலாம்.
- மூக்கில் நீர் வடிதல் குணமாக ;-- தழுதாழை இலை சாறை மூக்கில் உறிஞ்ச குணமாகும்.
- சுவாச உறுப்புக்கள் துப்புறவாக ;-- முசுமுசுக்கை வேர் ஆடாதொடை வேர் பொடி திப்பிலி, சுக்கு மிளகு ஆகியவற்றை பொடியாக்கி வெற்றிலையுடன் உட்கொண்டு பால் அருந்தலாம்.
- சுவாச நோய் அலர்ஜி ;-- குங்குமப்பூவுடன் சம அளவு தேன் கலந்து 3 நாட்கள் தினசரி 2 வேளை உட்கொள்ளலாம்.
- நீர் கோர்வை தீர ;-- இஞ்சி சாறு,பால் நல்லெண்ணெய் ஆகியவற்றை சம அளவு கலந்து காய்ச்சி வாரம் ஒரு முறை தேய்த்து குளித்து வரலாம்.
- தொடர் தும்மல் நீங்க ;-- அகத்திக்கீரை சாறு மற்றும் அகத்தி பூ சாறு இரண்டையும் தேனில் கலந்து சாப்பிட குணமாகும்.
- மூக்கடைப்பு நீங்க ;-- புதிய ரோஜா மலரை முகரலாம்.
- மூக்கடைப்பு சளி குணமாக ;-- கடுக்காய் பொடி,நெல்லிக்காய் பொடி இரண்டையும் தேனில் கலந்து சாப்பிடலாம்.
- சளி, இருமல் வரவிடாமல் தடுக்க ;-- மழை காலங்களில் முசுமுசுக்கை இலையை சாப்பிட்டு வரலாம்.
- மூச்சு திணறல் குணமாக ;-- வன்னி மரப்பட்டையை தூளாக்கி காய்ச்சி வடிகட்டி 3 வேளை குடித்து வரலாம்.
- தைராய்டு பிரச்சனைகளுக்கு ;-- கடல் பாசிகளை அடிக்கடி உணவில் சேர்த்து வர சரியாகி விடும்.
- இரத்தம் வருவது நிற்க ;-- மாதுளம்பழ சாறு மற்றும் அருகம்புல் சாறு சம அளவு கலந்து '30 மில்லி மூன்று வேளை சாப்பிடலாம்.
- மூக்கில் நீர் வடிதல் குணமாக ;-- வேப்ப இலை,ஓமம் இரண்டையும் அரைத்து நெற்றி மற்றும் பிடரியில் பூசிக் கொள்ளலாம்.
- சுவாச உறுப்புகளில் சளி தேக்கம் நீங்க ;-- வல்லாரை பொடி,தூதுவளை இரண்டையும்பாலில் கலந்து குடித்து வர நீங்கும்.
- இரைபிருமல் தீர ;-- மருதம் பட்டை,சித்திரத்தை,திப்பிலி,சுக்கு ஆகியவற்றை கஷாயம் செய்து 48 நாட்கள் குடித்து வர தீரும்.
Category:
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


