எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வர்தது அதிகரித்துள்ளது. கபினி அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரத்து 500 கன அடியாக இருந்த நீர்வரத்து 18 ஆயிரத்து 900 கன அடியாக அதிகரித்தது. கிருஷ்ணராஜசாகர் அணைக்கு 25 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இது தற்போது வினாடிக்கு 29 ஆயிரத்து 500 கன அடியாக அதிரித்துள்ளது. ஹாரங்கி அணைக்கு 2 ஆயிரத்து 755 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பலத்த மழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகமண்டலாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள காவிரி கரையோர மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பருவ மழை நீடித்தால் கபினி அணை விரைவில் நிரம்புவதற்கான வாய்ப்பு உள்ளது. நீர்வரத்து அதிகரித்து வருவதால் கபினி அணையில் இருந்து முதல் கட்டமாக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீரும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீரும் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த 2 அணைகளில் இருந்தும் திறந்துவிடப்பட்டுள்ள 12 ஆயிரம் கன அடி தண்ணீர் நேரடியாக மேட்டூர் அணைக்கு வரும்.
கபினி அணையில் இருந்து 241 கிலோ மீட்டர் தூரத்திலும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 182 கிலோ மீட்டர் தூரத்திலும் மேட்டூர் அணை உள்ளது. இதனால் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக 3 நாட்களில் மேட்டூர் அணைக்கு வரும் வாய்ப்பு உள்ளது. கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கர்நாடக மாநிலத்தில் உள்ள சங்கமம் என்ற இடத்தில் ஒன்றாக கலக்கிறது. அங்கிருந்து பிலிகுண்டுலூ வழியாக தமிழகத்தின் நுழைவு வாயிலான ஒகேனக்கல்லுக்கு வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து
15 Dec 202512 அணிகள் இடையிலான 5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்து வந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025


