எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர், பாராளுமன்ற தேர்தல் விவசாயிகளுக்கும், முதலாளிகளுக்கும் நடக்கும் போர். பணத்தை அள்ளி வீசுவார்கள் ஏமாந்து விடாதீர்கள் என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் பிரசாரம் செய்தார்.
அ.தி.மு.க. கூட்டணியை வெற்றிபெற செய்ய மக்கள் முடிவு செய்து விட்டார்கள். எதிரணி வேட்பாளர் ஜெகத்ரட்சகனை பற்றி உங்களுக்கு தெரியும். இந்த தொகுதியில் 10 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் தொகுதிக்கு அவர் எதுவும் செய்யவில்லை. இந்த பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினை, பாலாறு பிரச்சினைகளை தீர்க்க எங்களிடம் மெகா திட்டம் உள்ளது. அதனை நிறைவேற்றினால் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம், பாலாறு-தென்பெண்ணை இணைப்பு திட்டம் இவற்றை நிறைவேற்றினால் ஆண்டு முழுவதும் பாலாற்றில் தண்ணீர் ஓடும். அதன்மூலம் குடிநீர் பிரச்சினை தீரும். விவசாயிகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். இதனை எதிரணி வேட்பாளரால் செய்ய முடியாது. ஏனென்றால் மத்திய, மாநில அரசுகள் இணைந்து தான் இந்த திட்டங்களை செயல்படுத்த முடியும். பெட்டி, பெட்டியாக பணம் துரைமுருகனிடம் உள்ளது. அதனால் அவர் தி.மு.க. பொருளாளராக உள்ளார். தி.மு.க. பக்கம் பணம் கொடுக்கும் திட்டம் தான் உள்ளது. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் திட்டம் அவர்களிடம் இல்லை. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாயை திறந்தாலே பொய்தான் கூறுகிறார். தோற்கப்போகிறோம் என தெரிந்து விட்டதால் அவர் விரக்தியின் உச்சத்தில் பேசுகிறார். அவர் வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டாக்டர் ராமதாஸ் மற்றும் என்னையும் கொச்சையாகவும், அவதூறாகவும் பேசி உள்ளார். நாங்கள் வன்னியர் சொத்துகளை அபகரித்து விட்டோம் என்று கூறி உள்ளார்.
இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ. உள்பட எந்த விசாரணைக்கும் நானும், எங்கள் குடும்பத்தாரும் தயார். ஒரு சதுரஅடி இடத்தை கூட நாங்கள் அபகரித்து விட்டோம் என்று ஸ்டாலினால் நிரூபிக்க முடியுமா? அவ்வாறு நிரூபிக்க முடியாவிட்டால் நீங்கள் உங்கள் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயாரா?. அதனை உங்கள் கட்சியினரே விரும்புகிறார்கள். ‘நீட்’ தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின் கூறுகிறார். ‘நீட்’ தேர்வை கொண்டு வந்ததே காங்கிரசும், தி.மு.க.வும் தான். ராகுல்காந்தி ‘நீட்’ தேர்வு நடைமுறையில் இருக்கும். அதனை எதிர்க்கும் மாநிலங்களில் மட்டும் ரத்து செய்யப்படும் என்று கூறுகிறார். அவர்கள் கூட்டணியிலேயே முரண்பாடு. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி கொடுத்தது தி.மு.க.தான். காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு தி.மு.க. மிகப்பெரிய துரோகம் செய்துள்ளது. அரசு ஊழியர்கள் பிரச்சினைக்கு காரணமே தி.மு.க.தான்.
உதயநிதி ஸ்டாலின் தருமபுரியில் பேசும்போது அன்புமணி தவிர வேறு வேட்பாளர்கள் இல்லையா? என்று கேட்டுள்ளார். தி.மு.க.வில் உங்கள் குடும்பத்தினரை தவிர வேறு யாரும் இல்லையா?, வேறு யாருக்கும் பொறுப்பு கொடுக்க மாட்டீர்களா?. அப்படி பார்த்தால் துரைமுருகன் தான் சீனியர். அவருக்கு தான் தி.மு.க. தலைவர் பதவி கொடுத்திருக்க வேண்டும். இவ்வளவு காலம் கழித்து இப்போது தான் அவருக்கு பொருளாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.