எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : ஐ.பி.எல். 2020 சீசன் தொடங்கும் நாளன்று கூட்டம் நடைபெற இருப்பதால், அதை தள்ளி வைக்க வேண்டும் என்ற பி.சி.சி.ஐ.யின் வேண்டுகோளை ஐ.சி.சி. நிராகரித்துள்ளது.
ஐ.சி.சி. முக்கியமான உயர்மட்ட கூட்டம் மார்ச் மாதம் 27-ம் தேதி முதல் 29-ம் தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் 2023 முதல் 2031 வரையிலான டெஸ்ட் போட்டி அட்டவணையை நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியாக மாற்றுவது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. இதேவேளையில் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். தொடர் 29-ம் தேதி நடக்கும் என பி.சி.சி.ஐ. தலைவர் அறிவித்துள்ளார். தொடர் தொடங்கும் நாளில் பி.சி.சி.ஐ. தலைவர்கள் மற்றும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் இங்கே இருக்க வேண்டும்.
அதனால் ஐ.சி.சி. கூட்டத்திற்கான தேதியை தள்ளி வையுங்கள் என்று பி.சி.சி.ஐ. வேண்டுகோள் விடுத்தது. ஆனால் பி.சி.சி.ஐ.-யின் வேண்டுகோளை ஐ.சி.சி. நிராகரித்துள்ளது. கூட்டத்திற்கான தேதி ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. பயணம், அதிகாரிகள் தங்குமிடம் மற்றும் கூட்டம் நடைபெறும் இடம் என அனைத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஐ.பி.எல். போட்டியின் தொடக்க நாள் தள்ளிப் போகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


