முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வறுமையில் வாடும் மக்களுக்கு காங். எம்.பி.க்கள் உதவ வேண்டும் : சோனியாகாந்தி வலியுறுத்தல்

சனிக்கிழமை, 11 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா மற்றும் பொருளாதார பாதிப்பால் வறுமையில் வாடும் மக்களுக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் உதவ வேண்டும் என்று சோனியாகாந்தி கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  பாதிப்புகளை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 6-வது முறையாக தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதனால் நாட்டின் பொருளாதார சூழல் தேக்கமடைந்து காணப்படுகிறது.  இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி.க்களுடன் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். மாநிலங்களில் கொரோனா பரவல் மற்றும் தடுப்பு பணிகள், மத்திய அரசின் நிவாரணப் பணிகள், பொருளாதார நிலவரம்  மற்றும் பல்வேறு  விஷயங்கள் குறித்து அவர் கேட்டறிந்தாக கூறப்படுகிறது. 

மேலும் விரைவில் தொடங்க உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் காங்கிரஸால் எழுப்பப்படும் முக்கிய விஷயங்கள் குறித்தும் அவர் விவாதித்தார்.  கொரோனா மற்றும் பொருளாதார பின்னடைவால் வறுமையில் வாடும் மக்களுக்குக் காங்கிரஸ் எம்.பி.க்கள் உதவ வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து