முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

78 தொகுதிகளுக்கான இறுதி கட்ட தேர்தல்: பீகாரில் நாளை நடக்கிறது

வியாழக்கிழமை, 5 நவம்பர் 2020      அரசியல்
Image Unavailable

பீகாரில் நாளை இறுதி கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. 

பீகாரில் 243 பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. முதல் கட்டமாக 71 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 28-ம் தேதி புதன்கிழமை  வாக்குப் பதிவு நடைபெற்றது.  இத்தொகுதிகளுக்கான பிரசாரம் அக்டோபர் 26-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. 94 தொகுதிகளுக்கான 2-வது கட்ட தேர்தல் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், 78 தொகுதிகளுக்கான 3-வது இறுதிகட்ட தேர்தல் நாளை (நவ.7) நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம், நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. 3-வது கட்ட தேர்தலில் 110 பெண்கள் உள்பட மொத்தம் 1,204 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.35 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க காத்திருக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து