முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் குறைய துவங்கிய கொரோனா

ஞாயிற்றுக்கிழமை, 25 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : மும்பையில் தற்போது கொரோனா பரவல் குறையத் தொடங்கியுள்ளது. 

நாட்டில் கொரோனா தொற்று அதிகமாக காணப்படும் மாநிலங்களில் மராட்டியம் முதலிடம் வகித்தது. குறிப்பாக மராட்டிய தலைநகர் மும்பையில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தது.

நாட்டின் நிதி தலைநகர் என்று அழைக்கப்படும் மும்பையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு பல நாட்கள் 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகி அதிர்ச்சி அளித்தது. இதையடுத்து, கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து புதிதாக வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகும் மக்களது எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. நேற்று  5,888 பேர் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

கடந்த வியாழன்று 7 ஆயிரத்து 400 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிசயிக்கும் வகையில் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்து 888-ஆக இருந்தது.

ஒரு நாளில் சராசரியாக 40 ஆயிரம் பேருக்கு வைரஸ் பரிசோதனை செய்யப்படுகிறது. தற்போது பரிசோதனை எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் குறைந்துள்ளது மக்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து