முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவிஷீல்டு மருந்தை வெளிநாடுகளில் தயாரிக்க சீரம் நிறுவன அதிபர் ஏற்பாடு

ஞாயிற்றுக்கிழமை, 2 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள கோவிஷீல்டு மருந்தை வெளிநாடுகளில் தயாரிக்க சீரம் நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது.

இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளில் கோவிஷீல்டு மருந்தை புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் அதிபர் ஆதர்பூனவல்லா லண்டனில் நிருபர்களிடம் கூறியதாவது:-

புனேவில் உள்ள எங்கள் நிறுவனத்தில் ஆண்டுக்கு 250 கோடி டோஸ் மருந்து தயாரிக்க முடியும். இதை இன்னும் 6 மாதத்தில் 300 கோடியாக உயர்த்த திட்ட மிட்டுள்ளோம்.  அதுமட்டுமல்ல கோவிஷீல்டு மருந்தை வெளிநாடுகளில் உள்ள எங்கள் கூட்டணி நிறுவனங்களிலும் தயாரிக்க திட்ட மிட்டிருக்கிறோம்.

இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. எனக்கு இந்தியாவில் பலரிடம் இருந்து மிரட்டல்கள் வருகிறது. முதல்வர்கள், அமைச்சர்கள், தொழில் அதிபர்கள், எங்களுடைய போட்டியாளர்கள் என பலரும் போன் செய்து மிரட்டுகிறார்கள். எனவே சில காலம் லண்டனிலேயே தங்கி இருக்க முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து