எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. இந்த முறை எப்படியும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என தீவிரமாக களப்பணியாற்றிய பாஜகவின் கனவு தகர்ந்தது. தேர்தலுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரசில் இருந்து பாஜகவிற்கு சென்றவர்கள் சிலர் மீண்டும் தாய் கட்சிக்கே திரும்பி உள்ளனர்.
இந்நிலையில், அலிபூர்தார் மாவட்ட பாஜக தலைவர் கங்கா பிரசாத் சர்மா இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கொல்கத்தாவில் கட்சியின் மூத்த தலைவர்களான சுகேந்து சேகர் ராய், முகுல் ராய் ஆகியார் முன்னிலையில் கட்சியில் சேர்ந்தார்.
பின்னர் பேசிய கங்கா பிரசாத் சர்மா, ‘பாஜகவில் பழைய தொண்டர்களுக்கு சரியான பொறுப்புகள் வழங்கப்படுவதில்லை. முடிவெடுக்கும் செயல்பாட்டில் பாகுபாடுகள் இருந்தன. 2-3 பேர் டிக்கெட் விநியோகித்தனர். கைலாஷ் விஜயவர்கியா அவர்களில் ஒருவர். கட்சியின் தோல்வி மற்றும் தற்போதைய நிலைக்கு அவர் பதிலளிக்க வேண்டும். அத்துடன் பொதுச்செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும்’ என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


