எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின்முக்கிய நிகழ்ச்சியாக இன்று (வியாழக்கிழமை) இரவு 7.45 மணி முதல் 8.15 மணி வரை கோவிலுக்குள் உள்ள திருவாச்சி மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதனால் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவிலின் பிரதான நுழைவாயில் செல்லுவதற்கு அனுமதி இல்லை. இதேசமயம் கோவிலின் வலதுபுறம் உள்ள தீர்த்தக்குளம் வழியாக பக்தர்கள் சென்று கருவறையில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். பட்டாபிஷேக நிகழ்ச்சி முடிந்த பின்னர் இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படும்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதனையொட்டி காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மாலை 4 மணி வரை பிரதான கோவிலின் நுழைவுவாயில் வழியாக பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணி வரை திருக்குளம் சந்து வழியாக கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். மலையில் உள்ள உச்சி பிள்ளையார் கோவில் வளாகத்தில் மாலை 6 மணியளவில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது
இந்தநிகழ்ச்சியில் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் உபயதாரர்கள் மலைமீது செல்ல அனுமதி இல்லை. வெளியூர் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவில் வளாகத்தில் மற்றும் கோவில் கல்யாண மண்டபம் வளாகத்திலோ தங்குவதற்கு அனுமதி இல்லை என்று கோவில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் 18-ந் தேதி பவுணர்மி கிரிவலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் கிரிவலம் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
- ரூ.1536.31 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட மதுரையில் ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
- மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம்: தி.மு.க. இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்: மதுரை தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
தங்கம் விலை உயர்வு
23 Feb 2026தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,18,880-க்கு விற்பனையானது.
-
ஆப்கானிஸ்தான் எல்லையில் பாக்., நடத்திய தாக்குதலில் உயிரிழப்பு 80 ஆக உயர்வு
23 Feb 2026இஸ்லாமாபாத், ஆப்கனிஸ்தானுக்கு உட்பட்ட எல்லைப் பகுதிகள் மீது பாகிஸ்தான் விமானப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80-க்கும் மேலாக அதிகரி
-
நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 17 பேர் பலி
23 Feb 2026காத்மாண்டு, நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாகினர்.


