எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக சட்டசபை கூட்டத்தொடரை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டையில் நடத்தப்படவுள்ளது அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டில் 2020-ம் ஆண்டு கொரோனா நோய் தொற்று அதிகம் பரவத் தொடங்கியபோது புனித ஜார்ஜ் கோட்டையில் நடந்த சட்டசபை கூட்டம் கலைவாணர் அரங்கத்துக்கு மாற்றப்பட்டது. அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு 2020 மார்ச் மாதம் வரை புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை கூட்டத்தை நடத்தினார்கள். அதன்பிறகு 2020 செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்தில் நடத்தப்பட்டது. 2021-ம் ஆண்டு ஜனவரியில் கவர்னர் உரை, அ.தி.மு.க. ஆட்சியின் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடரும் கலைவாணர் அரங்கத்தில் தான் நடத்தப்பட்டது.
இதன்பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகும் கலைவாணர் அரங்கத்தில் தான் சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டது. புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு, சபாநாயகர் தேர்வு, கவர்னர் உரை, மானிய கோரிக்கை மீதான விவாதமும் கலைவாணர் அரங்கில் நடந்த சட்டசபையில் தான் நடத்தப்பட்டது.
தற்போது கொரோனா நோய்த்தொற்று படிப்படியாக குறைந்துவிட்டதால் இனிமேல் அடுத்த சட்டசபை கூட்டத்தொடரை கலைவாணர் அரங்கில் நடத்துவதற்கு பதிலாக பாரம்பரியம் மிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பழைய சட்டமன்றத்தில் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக கோட்டையில் உள்ள சட்டமன்றத்தை புதுப்பொலிவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்குள்ள பேரவை மண்டபத்துக்கு பெயிண்ட் அடிப்பது, மேஜை, நாற்காலிகளை சுத்தம் செய்வது, வர்ணம் பூசுவது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. கலைவாணர் அரங்கில் உள்ள தற்காலிக சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களுக்கு கம்ப்யூட்டர் வசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது போல் கோட்டையில் உள்ள சட்டசபை அரங்கிலும் கம்ப்யூட்டர் வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி உள்ளன.
இதுபற்றி அரசு அதிகாரி கூறுகையில், ‘கலைவாணர் அரங்கில் கம்ப்யூட்டர் வசதியுடன் கூடிய பேரவை மண்டப அமைப்பு அப்படியே இருக்கும். இதில் எந்த மாற்றமும் செய்யவில்லை. கொரோனா பரவல் குறைந்து வருவதால் கோட்டையில் உள்ள சட்டசபையையும் தயார் செய்து வருகிறோம். இங்கும் எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் கம்ப்யூட்டர் வசதி செய்து கொடுக்கப்படும். இந்த பணிகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளது.
புதிய வைரசான ஒமைக்ரான், கொரோனா இல்லாமல் இருந்தால் அடுத்த கூட்டத்தொடர் புனித ஜார்ஜ் கோட்டையில் நடத்துவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை மண்டபம் நூற்றாண்டு பாரம்பரியம் கொண்டது. இங்கு தான் கடந்த 1921-ம் ஆண்டு முதல் 1937-ம் ஆண்டுவரை மெட்ராஸ் மாகாண பேரவையின் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதன்பிறகு ஒவ்வொரு ஆட்சியின் போதும் இங்குதான் சட்டசபை கூட்டத்தொடர் நடந்தது.
முதல்வராக கருணாநிதி இருந்த கால கட்டத்தில் ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தில் 2010-ம் ஆண்டு சட்டமன்றம் மாற்றப்பட்டது. 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி அமைந்தபோது சட்டசபை கூட்டத்தை ஜெயலலிதா மீண்டும் கோட்டைக்கு மாற்றினார். அதன்பிறகு அங்குதான் சட்டசபை கூட்டம் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக கலைவாணர் அரங்கத்துக்கு சட்டசபை கூட்டம் மாற்றப்பட்டது. இப்போது மீண்டும் கோட்டையில் சட்டசபை கூட்டத்தை நடத்த ஏற்பாடுகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-07-2025.
07 Jul 2025 -
அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது: அமைச்சர் கீதா ஜீவன்
07 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்று கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
-
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு
07 Jul 2025சென்னை, போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று (ஜூலை 8) உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதி
-
உலகின் கவனத்தை கவர்ந்த இந்திய பாதுகாப்புத்துறை: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்
07 Jul 2025புதுடில்லி, ஆபரேஷன் சிந்தூரின் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களின் வலிமையும் நிருபிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அ
-
17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ம் தேதி நாடு தழுவிய 'ஸ்டிரைக்' முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்பு
07 Jul 2025சென்னை, நாடு தழுவிய அளவில் வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் ப
-
பட்டமளிப்பு விழா மேடையில் பா.ம.க.வை விமர்சித்த அமைச்சர்
07 Jul 2025தருமபுரி : அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா மேடையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பா.ம.க.வை விமர்சித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
07 Jul 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 13-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
திருச்செந்தூர் கேவில் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர் வருகை: அமைச்சர் தகவல்
07 Jul 2025தூத்துக்குடி, கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சுமார் 5 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை அரசு என்றும் பாதுகாக்கும்: முதல்வர் ஸ்டாலின்
07 Jul 2025சென்னை, “திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை இந்த திராவிட மாடல் அரசு என்றும் அணையாமல் பாதுகாக்கும்.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள
-
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய் ஆண்டனி
07 Jul 2025லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அஜய் தீசன் சமுத்திரக்கனி, பிரிகிடா தீப்ஷிகா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 அன்று வெளியான படம் மார்கன்.
-
அழுத்தமான சூழ்நிலைகளை கவிதையாய் மாற்றியவர்: தோனிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
07 Jul 2025சென்னை, “அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றும் தனித்துவமிக்கவர்” என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள
-
ஜுராசிக் பார்க் ரீபெர்த் விமர்சனம்
07 Jul 2025ஜுராசிக் பார்க் இதுவரை 2 அத்தியாயம் முடிந்து தற்போது மூன்றாவது அத்தியாயம் வெளியாகியுள்ளது.
-
கே.என்.நேருவின் சகோதரர் மீதான சி.பி.ஐ. வழக்கு நிபந்தனையுடன் ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
07 Jul 2025சென்னை : தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சி.பி.ஐ.
-
பீனிக்ஸ் திரைவிமர்சனம்
07 Jul 2025அண்ணன் கொலைக்கு பழி வாங்கும் ஒரு தம்பியின் கதை தான் பீனிக்ஸ் படத்தின் ஒரு வரிக்கதை.
-
தமிழ்நாடு முழுவதும் சாலை பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு
07 Jul 2025சென்னை : தமிழ்நாடு முழுவதும் சாலை, மேம்பால பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவில் 3-வது கட்சியா..? - அதிபர் ட்ரம்ப் கடும் விமர்சனம்
07 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம் என தொழிலதிபர் எலான் மஸ்க் கட்சி தொடங்கியது குறித்து அதிபர் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.
-
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிப்பு: அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
07 Jul 2025வாஷிங்டன், அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்
-
பறந்து போ திரைவிமர்சனம்
07 Jul 2025தனது மகனின் ஆசை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் தான் செல்லாத உயரத்திற்கு தன் மகன் செல்ல வேண்டும் என்று நினைக்கும் ஒரு பெற்றோரின் கதை தான் இந்த பறந்து போ படம்.
-
டெக்சாஸ் கனமழை, வெள்ளம்: பலிஎண்ணிக்கை 82 ஆக உயர்வு; பேரிடராக அறிவித்தார் ட்ரம்ப்
07 Jul 2025டெக்சாஸ் : டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் பலி எண்ணிக்கை உயர்ந்து வரும் வேளையில், அதை இயற்கை பேரிடராக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
ஜூலை 18-ல் பீகார் செல்கிறார் பிரதமர் மோடி
07 Jul 2025பாட்னா : பீகாரில் உள்ள மோதிஹரிக்கு ஜூலை 18ல் பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளதாக அந்த மாநில பா.ஜ.க. தலைவர் திலீப் குமார் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
-
33-வது பருவநிலை மாற்ற மாநாட்டிற்கு இந்தியா தலைமை 'பிரிக்ஸ்' நாடுகள் கூட்டறிக்கை
07 Jul 2025ரியோ டி ஜெனீரோ : பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில், 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
-
மணிப்பூரில் 5 தீவிரவாதிகள் கைது
07 Jul 2025மணிப்பூர் : மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 5 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் கைது செய்துள்ளனர்.
-
மத்திய பிரதேசத்தில் ஒரு நாள் கூட வேலைக்கு செல்லாமல் ரூ.28 லட்சம் ஊதியம் பெற்ற காவலர்
07 Jul 2025போபால் : மத்திய பிரதேச மாநில காவல்துறையில் பணிக்கு சேர்ந்து சுமார் 12 ஆண்டுகளாக ஒரு நாள் கூட வேலைக்குச் செல்லாமல் ரூ.28 லட்சம் வரை ஊதியமாகப் பெற்ற காவலர் பற்றிய தகவல் அ
-
16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது: திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
07 Jul 2025திருச்செந்தூர், 16 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
-
அமெரிக்காவில் சிக்கிய காலிஸ்தான் பயங்கரவாதியை இந்தியா அழைத்து வர ஏற்பாடு
07 Jul 2025புதுடில்லி : அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள காலிஸ்தான் பயங்கரவாதி ஹேப்பி பாசியாவை, விரைவில் நாடு கடத்தி அழைத்து வர இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.