எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லக்னோ : பா.ஜ.கவில் இருந்து முக்கிய தலைவர்கள் வெளியேறி அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியில் இணைந்தவண்ணம் உள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தொடங்கி உள்ள நிலையில், அதிருப்தி தலைவர்கள் கட்சி தாவும் செயலும் தொடர்ந்து அரங்கேறுகிறது. குறிப்பாக பா.ஜ.கவில் இருந்து முக்கிய தலைவர்கள் வெளியேறி அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியில் இணைந்தவண்ணம் உள்ளனர்.
பா.ஜ.கவில் இருந்த இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினரின் முக்கிய தலைவர்களும் மாநில மந்திரிகளுமான சுவாமி பிரசாத் மவுரியா, தரம் சிங் சைனி மற்றும் 5 எம்எல்ஏக்கள் வெள்ளிக்கிழமையன்று சமாஜ்வாடி கட்சியில் இணைந்தனர்.
அந்த வரிசையில், சமீபத்தில் மந்திரி பதவியை ராஜினாமா செய்த, தாரா சிங் சவுகான் நேற்று தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இருந்து விலகி அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார். அவர்களை அகிலேஷ் யாதவ் வாழ்த்தி வரவேற்றார். இதேபோல் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான அப்னா தளம் (எஸ்) கட்சியின் எம்எல்ஏ வர்மாவும் நேற்று சமாஜ்வாடி கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


