எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஹைதராபாத் : 8 எழுத்து மந்திரத்தை உலகறிய செய்த வைணவ மகான் ஸ்ரீ இராமானுஜரின் 1000 ஆண்டுகள் நிறைவுற்றதன் நினைவாக, அவருக்கு ஹைதராபாத்தில் உள்ள திரிகண்டி சின்ன ஜீயர் சுவாமிகளின் மடத்தில் 34 ஏக்கர் பரப்பளவில், 216 அடி உயர ஐம்பொன்னாலான ‘சமத்துவ சிலை’ நிறுவப்பட்டுள்ளது.
இதனை வரும் பிப்ரவரி மாதம் 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்க உள்ளார். இதற்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
ஆளவந்தாரை தொடர்ந்து வைணவ பீடத்துக்கு தலைமை தாங்கி, அதனை சீரமைத்து ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இன்று வரை வைணவத்தை தழைத்தோங்க செய்த மகான்தான் இராமானுஜர். தனக்கு போதித்த 8 எழுத்து மந்திரத்தை உலகறிய செய்ய கோயில் கோபுரம் மீதேறி அனைவருக்கும் போதித்தவர் இராமானுஜர். வேதத்தை அழகு தமிழில் பாசுரங்களாய் எழுதிய நம்மாழ்வாரின் பெயரை நிலைநாட்டிய இராமானுஜர், தான் வாழும் காலத்தில் மனித இனத்தில் இருந்த தீண்டாமையை ஒழிக்க பிள்ளையார் சுழி போட்ட வைணவ நாயகன். இராமானுஜர் சிறந்த வேதாந்தி மட்டுமின்றி, அவர் ஒரு தலைசிறந்த நிர்வாகியுமாவார். ஒரே சமயத்தில் ஸ்ரீ ரங்கம் கோயிலையும், வைணவத்தையும் நிர்வகித்ததே இதற்கு சான்றாக விளங்குகிறது. தற்கால ஆகம சாஸ்திரத்தை கொண்டு வந்து அனைத்து வைணவ கோயில்களிலும் ஒரே மாதிரியான சடங்குகள், சம்பிரதாயங்கள் என ஒழுங்குமுறைப்படுத்திய மகான் இராமானுஜர். ஸ்ரீ ரங்கம் கோயிலின் உடமைகளை மீட்டெடுத்து நிர்வாகம் செய்ததால் இவரை ரங்கநாதரே ‘உடையவர்’ என அழைத்ததாக ஐதீகம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இராமானுஜர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல வைணவ மடங்களை நிறுவினார். ஸ்ரீ ரங்கத்தில் உள்ள தலைமை மடத்துக்கு விதி முறைகளை உருவாக்கினார். தாழ்த்தப்பட்ட இன மக்களை கோயில்களில் அனுமதிக்க வேண்டுமென அறிவித்ததோடு, அவர்களோடு இணைந்து பல சுற்றுப்பயணங்களை மேற்கொண்டார். தாழ்த்தப்பட்ட மக்களை அவர் ‘திருக்குலத்தார்’ என அழைக்கலானார். வட மொழியில் இராமானுஜர் எழுதிய ஸ்ரீ பாஷ்யம் ஒரு சிறந்த புத்தகமாக இன்றும் விளங்குகிறது. இதுபோன்று உலகறிந்த மகானான இராமானுஜருக்கு ஹைதராபாத்தில் முச்சிந்தல் பகுதியில் உள்ள திரிதண்டி சின்ன ஜீயர் சுவாமிகளின் மடத்தில் 34 ஏக்கர் பரப்பளவில், 216 அடி உயரத்தில் பஞ்சலோக சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ராமானுஜருக்கு 120 கிலோ எடையில் தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது. தாமரை மலர் பீடம் மீது இராமானுஜர் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இது இராமானுஜரின் கோயிலாக விளங்குகிறது. இக்கோயிலுக்குள் இராமானுஜருக்கு 200 கிலோ எடையில் தங்க சிலை கற்ப கிரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
108 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு, நடுவே, யானைகள் தாங்கிப்பிடிக்கும் வகையில் 54 இதழ்களுடன் 27 அடி உயரத்தில் பத்ம பீடம் (தாமரை) 2 அடுக்குகளில் அமைக்கப்பட்டுள்ளது. 2 அடுக்குகளிலும் 18 சங்குகளும், 18 சக்கரங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த பத்ம பீடத்தின் மீது இராமானுஜருக்கு 108 உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் திரிதண்டியின் உயரம் மட்டும் 135 அடியாகும். பத்ரவேதியுடன் இராமானுஜருக்கு மொத்தம் 216 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது உலகின் 2வது மிகப்பெரிய சிலையாகும். சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு அடுத்தப்படியாக இராமானுஜரின் சிலை உயர்ந்த சிலையாக கருதப்படுகிறது. மேலும் இந்த சிலைக்கு முன் செயற்கை நீர் வீழ்ச்சி தூண் அமைக்கப்பட்டுள்ளது. இதில் யானைகள், அதற்கு மேல் அன்னப்பறவை சிலைகள் அமைக்கப்பட்டு, தாமரை மலர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தாமரை மலரில் இருந்து இராமானுஜரின் சிலை வருவது போல் அமைக்கப்பட்டு, அதற்கு அபிஷேகம் நடப்பது போலவும் உருவாக்கி உள்ளனர். மேலும், இந்த வளாகத்தில் ஆன்மீக நூலகமும், உணவகமும், தியான வளாகமும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வரும் பிப்ரவரி மாதம் 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்துகொண்டு திறந்து வைக்க உள்ளார். இதற்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
சஞ்சு சாம்சனை வாங்க பேச்சுவார்த்தை
08 Nov 2025ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசனில் ராஜஸ்தான் அணி நிர்வாகத்திற்கும் சஞ்சு சாம்சனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது.
-
தொகுதிவாரியாக நேர்காணல்: கிருஷ்ணகிரி தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
08 Nov 2025கிருஷ்ணகிரி : ஓசூர், தளி, வேப்பனஹள்ளி தொகுதிகளில் வெற்றி பெறவில்லையென்றால் தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவி பறிபோகும் என கிருஷ்ணகிரி தி.மு.க.
-
59-வது பிறந்தநாள்: சீமானுக்கு இ.பி.எஸ். வாழ்த்து
08 Nov 2025சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-11-2025.
08 Nov 2025 -
சாதி, மத மோதலை உருவாக்குகிறது: காங்கிரஸ் மீது ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
08 Nov 2025சசராம் : மக்களிடையே சாதி, மத மோதலை உருவாக்குகிறது என்று காங்கிரஸ் கட்சி மீது ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டியுள்ளார்.
-
தருமபுரியில் இன்று பா.ம.க.வின் மக்கள் உரிமை மீட்புப்பயண நிறைவு விழா
08 Nov 2025தருமபுரி : தருமபுரியில் பா.ம.க.வின் மக்கள் உரிமை மீட்புப் பயண நிறைவு விழா இன்று நடக்கிறது.
-
தென் ஆப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிரான போட்டியில் காயம்: வரும் 14-ம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டிக்கு திரும்புவாரா ரிஷப் பண்ட்?
08 Nov 2025பெங்களூரு : பெங்களூருவில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ரிஷப் பண்ட் காயமட
-
ஆந்திரா-கொல்லம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்
08 Nov 2025சேலம் : ஆந்திரா - கொல்லம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
பீகார் எம்.பி.யின் இரு கைகளிலும் வாக்கு செலுத்தியதற்கான மை இருந்ததால் சர்ச்சை
08 Nov 2025பாட்னா : பீகார் எம்.பி.யின் இரு கைகளிலும் வாக்கு செலுத்தியதற்கான மை இருந்தது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
-
உல்லாசத்திற்கு இடையூறு; கணவரை கொன்ற மனைவி
08 Nov 2025மீரட் : உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலனை ஏவி கழுத்தை நெரித்து கொன்ற மனைவியால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
செல்போன் செயலி வழியாகவே ஆதார் கார்டு திருத்த புதிய வசதி
08 Nov 2025டெல்லி : செல்போன் செயலி வழியாகவே ஆதார் கார்டை திருத்த புதிய வசதி அறிமுகமாகியுள்ளது.
-
பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி: சிறுவனின் தாக்குதலில் பெண் உயிரிழப்பு
08 Nov 2025இட்டாநகர் : பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சிறுவனின் கொடூர தாக்குதலில் 40 வயது பெண் உயிரிழந்தார்.
-
லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 6 கிரிக்கெட் அணிகள் பங்கேற்பு : ஐ.சி.சி. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
08 Nov 2025துபாய் : 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 6 கிரிக்கெட் அணிகள் பங்கேற்க உள்ளதாக ஐ.சி.சி. அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் 3-வது நாளாக சி.பி.ஐ. விசாரணை
08 Nov 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து நேற்று 3-வது நாளாக ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
சீமானுக்கு கமல்ஹாசன் வாழ்த்து
08 Nov 2025சென்னை : சீமானின் கொள்கையில் பிடிவாதம் வியத்தலுக்குரியவை என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
-
6 நாட்கள் அரசு முறை பயணமாக ஆப்பிரிக்கா புறப்பட்டார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
08 Nov 2025டெல்லி : அரசு முறை பயணமாக ஆப்பிரிக்கா ஜனாதிபதி திரெளபதி முர்மு புறப்பட்டு சென்றார்.
-
மகளிர் உலக கோப்பை இறுதிப்போட்டி: நேரலையில் 18.5 கோடி பேர் கண்டுகளித்து புதிய சாதனை
08 Nov 2025மும்பை : இந்தியாவில் மகளிர் உலககோப்பை போட்டியில் அதிக அளவிலான பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளதாக ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
உத்தரபிரதேச மாநிலத்தில் விபரீதம்: நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் திடீர் தற்கொலை
08 Nov 2025லக்னோ : உத்தரபிரதேச மாநிலத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
-
கடைசி டி-20 போட்டி மழையால் ரத்து: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா
08 Nov 2025பிரிஸ்பேன் : கடைசி போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதை அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
-
98-வது பிறந்தநாளை முன்னிட்டு அத்வானிக்கு பிரதமர் வாழ்த்து
08 Nov 2025டெல்லி : பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியின் 98-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
-
துணை ஜனாதிபதி கர்நாடகா பயணம்
08 Nov 2025டெல்லி : துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கர்நாடகாவுக்கு இன்று செல்கிறார்.
-
கரூர் சம்பவம் தொடர்பான ஆதாரங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தது த.வெ.க.
08 Nov 2025கரூர் : கரூர் சம்பவம் குறித்து சி.பி.ஐ.யிடம் ஆதாரங்களை த.வெ.க. ஒப்படைத்தது.
-
பீகாரில் பதிவானது ஆட்சிக்கு ஆதரவான வாக்கு: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
08 Nov 2025பாட்னா, பீகாரில் பதிவானது ஆட்சிக்கு ஆதரவான வாக்கு பதிவு பதிவாகி உள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
-
வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு: ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கலாம்: ராஜ்நாத் பேச்சு
08 Nov 2025பாட்னா : வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு குறித்து ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கலாம் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
-
தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளில் மட்டும் 6,453 மெட்ரிக் டன் அளவு கேழ்வரகு கொள்முதல் : அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்
08 Nov 2025சென்னை : தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளில் 6453 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் து


