Idhayam Matrimony

இலங்கை கலவரம்- வன்முறை: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

புதன்கிழமை, 11 மே 2022      உலகம்
Sri-Lankan-riots 2022 05 11

Source: provided

கொழும்பு : இலங்கை வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. மேலும், 219 பேர் காயமடைந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் திடீர் திருப்பமாக, பிரதமர் மகிந்த ராஜபட்ச தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார். இதற்கிடையே, தலைநகர் கொழும்பில் பிரதமரின் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மகிந்த ராஜபட்சவின் ஆதரவாளர்கள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.  

இதனைத் தொடர்ந்து, அமைதியாக நடைபெற்று வந்த போராட்டம் வன்முறையாக மாறியது. ஆத்திரமடைந்த மக்கள், பிரதமரின் இல்லத்திற்கு தீ வைத்தனர். போராட்டக்காரர்கள் மீது ஆளுங்கட்சியினரும், ஆளுங்கட்சியினர் மீது போராட்டக்காரர்களும் மாறிமாறித் தாக்குதல் நடத்தி வருவதால் இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வருகின்றது.

இந்த வன்முறையில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 219 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். போராட்டக்காரர்களால் 136 சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து