முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

75-வது சுதந்திர தின விழா: சென்னையில் இறுதி நாள் ஒத்திகை அணிவகுப்பு நிகழ்ச்சி

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Independence-Day 2022-08-13

Source: provided

சென்னை : 75-வது சுதந்திர தின விழா சென்னை கோட்டையில் நடைபெறுவதை முன்னிட்டு நேற்று அணிவகுப்பு ஒத்திகை இறுதிநாள் நிகழ்ச்சி நடந்தது.  

75-வது சுதந்திர தினவிழா நாளை 15-ம் தேதி, சென்னை கோட்டையில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு 6, 11, 13-ம் தேதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த 6-ம் தேதி மற்றும் 11-ம் தேதி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. ஒத்திகை நடைபெறும் நாட்களில் காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் நேரம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. மெரினா கடற்கரை முதல் தலைமை செயலகம் வரை போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. 

இந்நிலையில் இறுதி நாள் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று தொடங்கி நடைபெற்றது.  காலையில் தொடங்கிய காவல் துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சியானது சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்றது. படைவீரர்களின் அணிவகுப்பு, விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை ஒத்திகையின் போது நடத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து