முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காபூல் கல்வி நிறுவனத்தில் குண்டுவெடிப்பு: 19 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2022      உலகம்
Afghanistan 2022--09-30

Source: provided

காபூல் : ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில் 19 பேர் உயிரிழந்தனர். 27 பேர் காயமடைந்தனர். 

நேற்று காலை 7.30 மணியளவில் காபூலில் உள்ள காஜ் கல்வி நிலையத்தில் மாணவர்கள் தேர்வு எழுத மையத்திற்கு வந்த போது இந்த திடீர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதுவரை கிடைத்த தகவலின் படி, பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் ஆவர். இது குறித்த தகவல் அறிந்ததும், பாதுகாப்பு படையினர் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். முழுமையான உயிர்ச்சேதம் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. 

கல்வி நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தும் முயற்சியாக ஒரு பயங்கரவாதி, மாணவர்கள் கூட்டத்தில் ஒருவனாக புகுந்து இந்த சதித் தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்திருக்கும் நிலையில், தொடர்ந்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து